மக்களின் உயிரோடு விளையாடும் அவலம் - அரசு மருத்துவமனையில் துப்புரவுப் பணியாளர் மருந்து கலக்கும் அவலம்
செங்கம் அரசு மருத்துவமனையில் துப்புரவு பணியாளர் ஒருவர் ஊசி மூலம் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டதால் பரபரப்பு.

திருவண்ணாமலை: செங்கம் அரசு மருத்துவமனை மகப்பேறு சிகிச்சை பிரிவில் துப்புரவு பணியாளர் ஒருவர் ஊசி மூலம் மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பொது மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்துவரும் துப்புரவு பணியாளர் கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது கர்ப்பிணி பெண்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
செங்கம் தாலுகா தலைமை மருத்துவமனையாக உள்ள செங்கம் அரசு பொது மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மகப்பேறு நலப் பிரிவில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் பெண் பணியாளர் ஒருவர், மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு செல்லும் அறையின் வெளியே அமர்ந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்கான ஊசி மூலம் மருந்துகளை கலக்கும் பணியில் ஈடுபட்டது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கம் பொது மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா? எனவும் இது போன்ற மெத்தனமான செயல்களில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















