விழுப்புரம்: திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் 

திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் மிகவும் பழமையான கோயிலாகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும், தமிழ்நாட்டின் சிறந்த துறவிகள் மற்றும் கவிஞர்களால் ஆதரிப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் முக்கியமானவர்கள் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மற்றும் மாணிக்கவாசகர் மற்றும் அருணகிரிநாதர். அருணாச்சலேஸ்வரர் இங்கு நெருப்பின் வடிவத்தில் பிரார்த்தனை செய்யப்படுவதால், இது அனைத்து சிவ பக்தர்களிடையேயும் பெரும் நற்பெயரைக் கொண்டுள்ளது, நெருப்பு இந்த பிரபஞ்சத்தை உருவாக்கிய ஐந்து கூறுகளில் ஒன்றாகும். பஞ்சபூதங்களின் மற்ற நான்கு கூறுகள் வாயு, ஆகாஷ், ஜலம் மற்றும் பூமி. இந்த அழகான கோயில் திருவண்ணாமலை மாவட்டத்தின் கீழ் வரும் அண்ணாமலை மலைகளின் அடிவாரத்தில் சுமார் எண்பது கிலோகிராம் பரப்பளவில் அமைந்துள்ளது.

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். இதையொட்டி பக்தர்களின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் தென்னக ரயில்வே நிர்வாகம் சார்பில் விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள ‘அண்ணாமலை’ என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி, பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந் தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வர உள்ளதால் பவுணர்மியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில்

இந்த நிலையில் திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தையொட்டி விழுப்புரம்- திருவண்ணாமலை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  • விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.10 மணிக்கு புறப்படும் விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06130) காலை 11.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்துக்கு சென்றடையும்.

 

  • அதேபோல் மறுமார்க்கத்தில் நாளை மறுநாள் பகல் 12.40 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் திருவண்ணாமலை- விழுப்புரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 2.15 மணிக்கு விழுப்புரம் வந்தடையும்.

 

  • இந்த ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சனூர், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த இரு ரயில்களும் 8 பெட்டிகள் கொண்டதாக இருக்கும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.