<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>tiruvannamalai</title><atom:link href="https://tamil.abplive.com/tiruvannamalai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 08:41:05 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Kanchipuram Vandavasi 4-Lane Expressway: காஞ்சிபுரம் - வந்தவாசி மக்களுக்கு மெகா குட் நியூஸ்! இனி டிராஃபிக் பிரச்சனையே இருக்காது! அரசின் மாஸ் திட்டம்.. ]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-vandavasi-road-is-expanding-into-a-4-lane-corridor-to-boost-freight-flow-to-ennore-port-and-end-traffic-jams-tnn-273079</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-vandavasi-road-is-expanding-into-a-4-lane-corridor-to-boost-freight-flow-to-ennore-port-and-end-traffic-jams-tnn-273079#respond</comments><pubDate>Mon, 31 Aug 2026 16:02:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-vandavasi-road-is-expanding-into-a-4-lane-corridor-to-boost-freight-flow-to-ennore-port-and-end-traffic-jams-tnn-273079</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையை நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் முக்கியத் திட்டம், முதலமைச்சரின் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் (CMRDP) கீழ் தற்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. செய்யாறு மற்றும் வெம்பாக்கம் பகுதிகளில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டைகளின் அபாரமான தொழில் வளர்ச்சியை மனதில்கொண்டு இந்தச் சாலை அகலப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், இந்தச் சாலை மானம்பாதியில் சென்னை புறவெளி வட்டச் சாலையுடன் (CPRR) இணைக்கப்பட உள்ளது. இதன் மூலம், தென் மாவட்டங்கள் மற்றும் தொழிற்பேட்டைகளில் இருந்து சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களுக்குச் செல்லும் சரக்கு வாகனங்கள் எந்தவிதமான போக்குவரத்தும் இன்றி தடையின்றி விரைவாகச் சென்று சேர வழிவகை ஏற்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொழில் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருந்த போக்குவரத்து நெரிசல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செய்யாறு மற்றும் வெம்பாக்கம் சிப்காட் பகுதிகள் வட தமிழகத்தின் முக்கியத் தொழில் மண்டலங்களாக உருவெடுத்து வருகின்றன. இருப்பினும், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் நிலவி வந்த கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாகத் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு வருவதிலும், உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களைத் துறைமுகங்களுக்கும் பிற இடங்களுக்கும் கொண்டு செல்வதிலும் பெரும் காலதாமதம் ஏற்பட்டு வந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதுமட்டுமன்றி, குறுகலான சாலையில் அடிக்கடி நேரிட்ட விபத்துகள், தொழிலாளர்கள் சரியான நேரத்திற்குப் பணிக்குச் செல்ல முடியாத நிலை போன்ற பல்வேறு சவால்கள் நிலவின. இதனால் தொழிலதிபர்கள், தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்று நீண்டகால கோரிக்கை விடுத்து வந்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நான்கு கட்டங்களாக நடைபெறும் விரிவாக்கப் பணிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, இந்தச் சாலை விரிவாக்கப் பணிகள் மொத்தம் நான்கு கட்டங்களாகத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் முதல் கட்டமாக, மங்கலம் முதல் மானம்பாதி சந்திப்பு வரையிலான 9 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலை ரூ. 78 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தப்பட்டு வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் தற்போதைய இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றுவதுடன், தேவையான இடங்களில் சிறிய பாலங்கள் மற்றும் மதகுகளைப் புதிதாகக் கட்டுதல் அல்லது விரிவாக்கம் செய்தல் போன்ற பணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் சாலைகளில் நீர் தேங்குவதைத் தவிர்க்கும் வகையில், குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைப்புகளும் சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நில எடுப்பு மற்றும் இரண்டாம் கட்டத் திட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, செய்யாறு சிப்காட் அருகிலுள்ள மானம்பாதியிலிருந்து திருவண்ணாமலை வரையிலான 72 கிலோமீட்டர் தொலைவுள்ள சாலையை அகலப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தொடக்கத்தில் இந்த விரிவாக்கம் வந்தவாசி வரை மட்டுமே திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பிற்காலத்தில் இதனைப் விரிவான பொருளாதாரச் சாலை பிணையத்துடன் (Economic Corridor) இணைக்கும் நோக்கில் திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செய்யாறு சாலையை ஓரகடம் தொழிற்பேட்டையுடன் இணைப்பதன் மூலம் சென்னையைச் சுற்றியுள்ள தொழில் மண்டலங்களும் செய்யாறு சிப்காட்டும் ஒன்றிணைக்கப்பட்டு, வட தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் இணைப்புச் சாலை உருவாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக வந்தவாசியில் 14 கிராமங்கள், செய்யாறில் 7, கீழ்பென்னாத்தூரில் 8 மற்றும் திருவண்ணாமலையில் 5 கிராமங்கள் என மொத்தம் 34 கிராமங்களில் உள்ள சுமார் 307 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வருவாய்த் துறை மூலம் நிலத்தின் மதிப்பு நிர்ணயிக்கப்பட்ட பிறகு இதற்கான முதன்மை கட்டுமான டெண்டர்கள் கோரப்பட உள்ளன. இந்த இரண்டாம் கட்டச் சாலையில் மையத் தடுப்புகள் (Center medians), பேருந்துகள் ஒதுங்கிச் செல்லும் பகுதிகள் (Bus lay-by zones) மற்றும் சீரான வடிகால் வசதிகள் அமைக்கப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேம்பாலத் திட்டம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பயன்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரம் நகருக்குள் நுழையும் பகுதியில் ஏற்படும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், செவிலிமேடு பாலத்தின் அருகே ஒரு புதிய உயர்மட்ட மேம்பாலம் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மேம்பாலப் பணிகள் 2028-ஆம் ஆண்டிற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைத்துக் கட்ட விரிவாக்கப் பணிகளும் முழுமையாக முடிவடையும் போது, இச்சாலை ஒரு அதிவேக இணைப்பாக மாறி, திருவண்ணாமலை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைத் துறைமுகத்திற்குப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு ஒரு வேகமான, நம்பகமான பாதையாக அமையும். இது காஞ்சிபுரம் பகுதிக்கு வரும் பக்தர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் போக்குவரத்துச் சிக்கலற்ற பயணத்தை வழங்குவதோடு, ஒட்டுமொத்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பக்கபலமாக இருக்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/31/efae211be93682ab2f865e14232b42a417881723559541319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[NH-77 நான்கு வழிச்சாலையாகுமா? திண்டிவனம்-திருவண்ணாமலை சாலையில் அதிகரிக்கும் போக்குவரத்து... விபத்துகளால் அதிர்ச்சி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/will-the-tindivanam-tiruvannamalai-nh-77-become-a-four-lane-highway-273007</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/will-the-tindivanam-tiruvannamalai-nh-77-become-a-four-lane-highway-273007#respond</comments><pubDate>Sun, 30 Aug 2026 21:31:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/will-the-tindivanam-tiruvannamalai-nh-77-become-a-four-lane-highway-273007</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரியில் இருந்து கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவை இணைக்கும் மிக முக்கியப் பாதையாக விளங்கும் திண்டிவனம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் (NH 77), நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. தொடர்ந்து நிகழும் விபத்துகளைத் தடுக்கவும், சீரான போக்குவரத்தை உறுதி செய்யவும் இச்சாலையை உடனடியாக நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;NH 77: முக்கிய போக்குவரத்து இணைப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் தொடங்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 77 (NH 77), திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை வழியாக கிருஷ்ணகிரியை அடைகிறது. அங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக பெங்களூருவை இணைக்கிறது. மொத்தம் 178 கி.மீ. நீளம் கொண்ட இந்த சாலை, வரலாற்றுக்காலம் தொட்டே ஆன்மீக, வணிக மற்றும் சுற்றுலா ரீதியாக முதன்மை வழித்தடமாகத் திகழ்ந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;திட்டத்தில் நேர்ந்த மாற்றம்&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த 2011-ஆம் ஆண்டு இச்சாலையை 1,200 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டது. ஆனால், அப்போது மேற்கொள்ளப்பட்ட வாகனக் கணக்கெடுப்பில் போக்குவரத்து குறைவாக இருப்பதாகக் கூறி, திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 624.24 கோடி செலவில் 10 மீட்டர் அகலம் கொண்ட இருவழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணி 2012-இல் தொடங்கி, பல ஆண்டுகள் தாமதத்திற்குப் பின் 2024-இல் நிறைவடைந்தது. தற்போது இச்சாலையில் 3 இடங்களில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;போக்குவரத்து பலமடங்கு உயரக் காரணங்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;பணிகள் நிறைவடைந்த நிலையில், சாலை மேம்படுத்தப்பட்டதால் இவ்வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயர்ந்துள்ளது.&lt;br /&gt;பெங்களூரு தொடர்பு: வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைக் காலங்களில் பெங்களூருவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர் புதுச்சேரி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு வந்து செல்ல இச்சாலையையே பயன்படுத்துகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வணிகப் போக்குவரத்து:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரியில் உற்பத்தியாகும் தொழிற்சாலைப் பொருட்கள் மற்றும் நுகர்பொருட்கள் பெங்களூரு மற்றும்&amp;nbsp; வடமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதால், கனரகச் சரக்கு வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை பக்தர்களின் வருகை: &lt;/strong&gt;முன்பு கார்த்திகை தீபத் திருவிழா காலத்தில் மட்டுமே பக்தர்கள் அதிக அளவில் வந்தனர். ஆனால் தற்போது பௌர்ணமி, பிரதோஷம், வார விடுமுறை நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை தருகின்றனர். சென்னை மற்றும் புதுச்சேரியிலிருந்து வரும் பெரும்பாலான வாகனங்கள் திண்டிவனம் - திருவண்ணாமலை வழியையே தேர்ந்தெடுக்கின்றன.&lt;/p&gt;
&lt;h3&gt;அதிகரிக்கும் விபத்துகள்: பொதுமக்கள் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p&gt;இருவழிச்சாலையாக மட்டுமே இருப்பதால், குறுகிய பாதையில் அதிவேகமாக வரும் வாகனங்களால் திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரையிலான பகுதியில் அடிக்கடி பயங்கர விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், படுகாயங்களும் தொடர்கதையாகி வருகின்றன. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் உடனடியாக இச்சாலையில் புதிய வாகன கணக்கெடுப்பை (Traffic Survey) நடத்தி, தற்போதைய தேவைக் கேற்ப திண்டிவனம் - திருவண்ணாமலை இடையிலான தேசிய நெடுஞ்சாலை 77-ஐ விரைவாக 4 வழிச்சாலையாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் பயணிகளும் எதிர்பார்க்கின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/cc4c5cea6cc0cec52d621c3564d09af91736299684873739_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போனுக்கு தடை! செப்டம்பர் 1 முதல் புதிய கட்டுப்பாடு...]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/mobile-phone-ban-at-tiruvannamalai-annamalaiyar-temple-from-sept-1-attention-devotees-272546</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/mobile-phone-ban-at-tiruvannamalai-annamalaiyar-temple-from-sept-1-attention-devotees-272546#respond</comments><pubDate>Wed, 26 Aug 2026 17:40:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/mobile-phone-ban-at-tiruvannamalai-annamalaiyar-temple-from-sept-1-attention-devotees-272546</guid><description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கருவறையை புகைப்படம் எடுப்பது, கியூ லைனில் செல்போன் பயன்படுத்துவது, கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது உள்ளிட்ட செயல்களைத் தடுக்கும் வகையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ரமேஷ் இன்று முதல்முறையாக திடீர் ஆய்வு மேற்கொண்டார். ராஜகோபுரம் வழியாக பொது தரிசன வரிசையில் கோவிலுக்குள் சென்ற அவர், பக்தர்கள் தரிசனம் செய்யும்போது எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஆய்வின்போது திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், கோவில் இணை ஆணையர் பரணிதரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து கம்பத்து இளையனார் சன்னதி, பெரிய நந்தி உள்ளிட்ட ஐந்தாம் பிரகாரப் பகுதிகளையும் அமைச்சர் ஆய்வு செய்தார். பின்னர் பொது தரிசன வரிசையில் சென்று பக்தர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து கோவில் கொடிமரம் அருகே உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபாடு செய்த அமைச்சர், அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனை தரிசனம் செய்தார். கொடிமரம் முன்பு சிறிது நேரம் பிரார்த்தனையிலும் ஈடுபட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;வார விடுமுறை நாட்கள், பௌர்ணமி உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் எந்தெந்த வழிகளில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள், எவ்வாறு தரிசனம் செய்து வெளியேற்றப்படுகிறார்கள் என்பது குறித்தும் அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், கியூ லைன் மற்றும் கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கான வசதிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள உள்துறை அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவிலில் பக்தர்கள் விரைவாகவும் சிரமமின்றியும் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் ரமேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;செல்போனுக்கு ஏன் தடை?&lt;/h2&gt;
&lt;p&gt;ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு பக்தர்கள் ஆன்மிக அமைதிக்காகவும், கோவில் சிற்பங்கள் மற்றும் கட்டிடக் கலையை கண்டு ரசிப்பதற்காகவும் வருகிறார்கள். ஆனால் சிலர் செல்போன்களில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது, ரீல்ஸ் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் மற்ற பக்தர்களின் ஆன்மிக அனுபவம் பாதிக்கப்படுகிறது என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதாகவும், அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்குள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;இடைத்தரகர்களுக்கு முற்றுப்புள்ளி&lt;/h2&gt;
&lt;p&gt;அண்ணாமலையார் கோவிலில் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். குறிப்பாக, பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்யும் வகையில் புதிய நடைமுறையை கொண்டு வருவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆன்லைன் தரிசன முன்பதிவு முறை முழுமையாக நடைமுறைக்கு வந்தால், முக்கிய பிரமுகர்கள் உட்பட பக்தர்கள் அனைவரும் ஆன்லைன் வழியாக பதிவு செய்து தரிசனம் செய்யும் நிலை உருவாகும் என்றும், இதன் மூலம் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;தரிசன வரிசை மேம்படுத்தப்படும்&lt;/h2&gt;
&lt;p&gt;அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் வரிசையை மேலும் மேம்படுத்துவது குறித்து கோவில் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்காமல் விரைவாக தரிசனம் செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;மாடவீதிகளில் ஹோம்ஸ்டேக்கள் குறித்து நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;அண்ணாமலையார் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால், கோவில் மாடவீதிகளில் உள்ள குடியிருப்புகள் பலவும் ஹோம்ஸ்டேக்களாக மாற்றப்பட்டு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இணைந்து இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;அவசர உதவிக்கு தன்னார்வலர்கள், கூடுதல் மருத்துவர்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;கியூ லைனில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு அவசர உதவி தேவைப்பட்டால் உடனடியாக உதவும் வகையில் தன்னார்வலர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கோவில் வளாகத்துக்குள் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவதுடன், பக்தர்களுக்கு அவசர மருத்துவ உதவி வழங்க கூடுதல் மருத்துவர்களும் நியமிக்கப்பட உள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் கோவிலில் பக்தர்களின் தரிசனத்தை எளிதாக்குதல், செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை ஒழித்தல் மற்றும் ஆன்லைன் தரிசன முன்பதிவு முறையை கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் பக்தர்களுக்கு சிறந்த தரிசன அனுபவத்தை ஏற்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/26/9af9b89ac2b88539ff6e9766e6aecb691787746178451194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருவண்ணாமலையில் ஷாக்கிங் சம்பவம்! கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் வந்த ஆசாமி... அலட்சியமாக இருக்கிறதா பாதுகாப்பு?]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-annamalaiyar-temple-camera-glasses-amit-shah-visit-security-270532</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-annamalaiyar-temple-camera-glasses-amit-shah-visit-security-270532#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 16:18:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/thiruvannamalai-annamalaiyar-temple-camera-glasses-amit-shah-visit-security-270532</guid><description><![CDATA[&lt;p&gt;திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குள் கண் கண்ணாடியில் கேமரா வைத்த நபர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;திருண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு விஷேஷ நாட்கள் மட்டுமல்லாமல், அனைத்து நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவதால் கோயில் எப்பொழுதுமே கூட்டமாக காட்சியளிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால், இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயிலில் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. அண்ணாமலையார் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் இருந்து மர்ம நபர் ஒருவர் லாரியை எடுத்துச் சென்ற நிலையில் இன்று மீண்டும் கண் கண்ணாடியில் கேமரா வைத்து கோயிலுக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Csx-H8XR-1E?si=PHKzpr50uic7ZZZV&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;திருவண்ணாமலை &amp;nbsp;அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வரவுள்ள நிலையில் பவுனேஷ், மகேஷ் ஆகிய நபர்கள் கேமரா வைத்த கண் கண்ணாடி அணிந்து வந்துள்ள நிலையில் அண்ணாமலையார் கோயிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/87451a0302fd5163cabf251ccb4d8df91786185789789113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;போலீசார் அந்த நபர்களிடம் அண்ணாமலையார் கோயிலில் புகைப்படம் எடுக்க வந்தார்களா அல்லது வேறு ஏதாவது காரணமாய் என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&amp;nbsp;குறிப்பாக அண்ணாமலையார் கோயிலில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு லாரி ஒன்றை மர்ம நபர் எடுத்துச் சென்றதாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அண்ணாமலையார் கோயிலுக்குள் மிகத் துல்லியமான கண் கண்ணாடி கேமராவை இணைந்து வந்திருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மர்மமான முறையில் அண்ணாமலையார் கோயிலின் ஐந்தாம் பிரகாரத்தில் இருந்து லாரியை எடுத்துச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் திருக்கோவில் அனைத்து &amp;nbsp;கோவில் ஊழியர்கள் சாவிகளை போட்டு பூட்டி வைக்கும் நிலையிலும் யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் எப்படி கோயிலுக்குள் இந்த நபர் வந்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/e7c32836bcda42a48f8f7c636956f3dd1786185933282113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திடீர் வருகை... திகைப்பில் அரசியல் களம்! – ஆகஸ்ட் 8-ல் தமிழகம், புதுச்சேரிக்கு வருகிறார் அமித் ஷா!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/amit-shah-puducherry-president-police-colour-award-thiruvannamalai-consultation-270302</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/amit-shah-puducherry-president-police-colour-award-thiruvannamalai-consultation-270302#respond</comments><pubDate>Thu, 6 Aug 2026 16:15:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/amit-shah-puducherry-president-police-colour-award-thiruvannamalai-consultation-270302</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 8-ம் தேதி இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகப் புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். இப்பயணத்தின் போது புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் 'வண்ண விருது' வழங்குதல், திருவண்ணாமலையில் கோவில் தரிசனம் மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர்களுடனான முக்கிய ஆலோசனை எனப் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்கிறார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஒத்திவைக்கப்பட்ட பயணம் மீண்டும் உறுதி:&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி காவல் துறையின் நீண்டகால சிறப்பான சேவை, மிகச் சிறந்த ஒழுக்கம் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவர்கள் ஆற்றிய தன்னிகரற்ற பங்களிப்பைப் பாராட்டி, குடியரசுத் தலைவரின் உயரிய &amp;lsquo;வண்ண விருது&amp;rsquo; (President's Police Colour) அறிவிக்கப்பட்டது. &amp;nbsp;இந்த விருதினை வழங்கும் விழா புதுச்சேரி காவல் மைதானத்தில் கடந்த மாதமே நடைபெற திட்டமிடப்பட்டு, அதில் மத்திய அமைச்சர் அமித் ஷா பங்கேற்பதாக இருந்தது. ஆனால், டெல்லியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்ததால், அவரது பாதுகாப்பு கருதி அப்பயணம் அப்போது ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அந்த விழா தற்போது மீண்டும் உறுதி செய்யப்பட்டு, அதற்கான பயணத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;அமித் ஷாவின் இரண்டு நாள் பயணத்திட்டம்: &amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆகஸ்ட் 8 (இரவு): டெல்லியிலிருந்து புறப்படும் மத்திய அமைச்சர் அமித் ஷா, அன்றைய தினம் இரவு புதுச்சேரி வந்தடைந்து அங்குத் தங்கி ஓய்வெடுக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆகஸ்ட் 9 (காலை): புதுச்சேரி காவல் மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்று, புதுச்சேரி காவல் துறைக்குக் குடியரசுத் தலைவரின் 'வண்ண விருதை' வழங்கி கௌரவிக்கிறார். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஆகஸ்ட் 9 (மதியம்): புதுச்சேரி நிகழ்வுகளை முடித்துக் கொண்டு, சாலை மார்க்கமாகத் திருவண்ணாமலைக்குச் செல்கிறார். அங்குள்ள உலகப்புகழ் பெற்ற ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆகஸ்ட் 9 (மாலை/இரவு): திருவண்ணாமலை பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்தடையும் அவர், அங்கேயே தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுடன் மாநில அரசியல் நிலவரங்கள் மற்றும் கட்சி நடவடிக்கைகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்ததும், அன்றைய தினமே தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய உள்துறை அமைச்சரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் திருவண்ணாமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. முக்கிய இடங்கள், அவர் பயணிக்கும் பாதைகள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/09/f893c0d017d6f19e7aa553c8de547c9c171266359534525_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு வாசிகளே தயாரா இருங்க... இன்றிரவு வரப்போகும் அந்த திடீர் மாற்றம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/get-weather-forecasts-for-kanchipuram-chengalpattu-and-chennai-with-temperature-updates-tnn-269914</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/get-weather-forecasts-for-kanchipuram-chengalpattu-and-chennai-with-temperature-updates-tnn-269914#respond</comments><pubDate>Mon, 3 Aug 2026 13:11:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/get-weather-forecasts-for-kanchipuram-chengalpattu-and-chennai-with-temperature-updates-tnn-269914</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, இன்று 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மேல்பவானியில் கொட்டித்தீர்த்த கனமழை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நேற்று காலை 8:00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேர நிலவரப்படி, நீலகிரி மாவட்டம் மேல்பவானி பகுதியில் அதிகபட்சமாக 21.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதேவேளையில், மாநிலத்தின் பல பகுதிகளில் மழை பெய்த போதிலும், சில இடங்களில் வெப்பத்தின் தாக்கமும் உணரப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொண்டியில் 104.9&amp;deg;F வெயில்&amp;nbsp;வெப்பநிலை உயர்வு!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இயல்பான அளவை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்சமாக &lt;strong&gt;104.9 டிகிரி ஃபாரன்ஹீட்&lt;/strong&gt; வெப்பம் பதிவாகி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அவதிக்குள்ளாக்கியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிலவும் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பாதைகள்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது வளிமண்டலத்தில் நிலவும் வானிலை மாற்றங்கள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட உள் கர்நாடகப் பகுதியில் தொடங்கி தென் உள் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் வழியாக குமரிக்கடல் பகுதி வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. தெற்கு குஜராத் பகுதியில் தொடங்கி கேரளா வரை மற்றொரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது. இந்த இரு வேறு வளிமண்டல சுழற்சிகளின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காற்றழுத்த தாழ்வுப் பாதைகளின் தாக்கத்தால், இன்று தமிழகத்தின் நீலகிரி, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் ஆகிய 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வடகடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மாநிலத்தின் ஏனைய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வானிலை நிலவரம்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வடகடலோர மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரத்தில் லேசான வெப்பம் நிலவினாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் இவ்விரு மாவட்டங்கள் மற்றும் சென்னை புறநகர்ப் பகுதிகளின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/7340c50d8300c0ef024531eb5585fb911785723172190487_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அண்ணாமலையார் பாதத்தில் தனுஷ்! திடீர் ஆன்மீகப் பயணம் அரசியல் என்ட்ரிக்கு அச்சாரமா?]]></title><link>https://tamil.abplive.com/entertainment/dhanush-sons-thiruvannamalai-annamalaiyar-temple-darshan-om-movie-269900</link><comments>https://tamil.abplive.com/entertainment/dhanush-sons-thiruvannamalai-annamalaiyar-temple-darshan-om-movie-269900#respond</comments><pubDate>Mon, 3 Aug 2026 12:10:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/dhanush-sons-thiruvannamalai-annamalaiyar-temple-darshan-om-movie-269900</guid><description><![CDATA[&lt;p&gt;நடிகர் தனுஷ் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று அதிகாலை தனது மகன்களுடன் சாமி தரிசனம் செய்தார். ஆன்மீக பக்தர்கள் மற்றும் அண்ணாமலையார் கோயில் ஊழியர்கள் அவரோடு நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;திருவண்ணாமலை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில தினங்களாக நடிகர் தனுஷ் நடிக்கும் &amp;lsquo;ஓம்&amp;rsquo; திரைப்படத்தின் பட காட்சிகள் படமாக்கப்பட்ட வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் இன்று அதிகாலை அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு நடிகர் தனுஷ் தனது இரண்டு மகன்களுடன் வருகை தந்தார். முன்னதாக சம்பந்த விநாயகரை தரிசனம் செய்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/o_8uhSUW7Zg?si=KfjRYt7jBlxVFUkA&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெற்ற கோ கோபூஜை பசுவுக்கு அகத்திக்கீரை கொடுத்தார். இதனைத் தொடர்ந்து யாக பூஜையில் கலந்து கொண்டார். தொடர்ந்து அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் நவகிரகத்தை தரிசனம் செய்தார். சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடிகர் தனுசுக்கு மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/031b7724294400d0b8d41fd4fd70c5671785738817692113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் அவரோடு செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு தனியார் கல்லூரியில் ரசிகர்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மேடையில் தனுஷின் பேச்சு அரசியலுக்கு வருவதை போன்றே இருந்தது. &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; கட்சி தொடங்கி வெற்றி பெற்றதை போல, தானும் எதிர்காலத்தில் கட்சி தொடங்கி தமிழக அரசியலில் நுழைய வேண்டும் என்று எண்ணத்துடன் இருப்பதாகவும் ஆனால், இது நடப்பது அவ்வளவு சாத்தியமில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/c19a1750446530a68fa2f68735d0541a1785738886786113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Tiruvannamalai Bypass Project: திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம் ரெடி - சாமி தரிசனம் டூ பொருளாதாரம் - 100KM  ஸ்பீட்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruvannamalai-bypass-project-morth-floats-tender-for-rs-623-crore-2-years-schedule-key-connection-areas-benefits-infra-news-269801</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruvannamalai-bypass-project-morth-floats-tender-for-rs-623-crore-2-years-schedule-key-connection-areas-benefits-infra-news-269801#respond</comments><pubDate>Sun, 2 Aug 2026 09:15:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruvannamalai-bypass-project-morth-floats-tender-for-rs-623-crore-2-years-schedule-key-connection-areas-benefits-infra-news-269801</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Tiruvannamalai Bypass Project:&lt;/strong&gt; சுமார் 22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கான திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டத்திற்கு, 623 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மிக நீண்டகால காத்திருப்புக்குப் பிறகு திருவண்ணாமலை புறவழிச்சாலை திட்டத்திற்காக,&amp;nbsp; மத்திய அரசின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. சுமார் 22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை அமைக்கும் இந்த பணிக்காக 623 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய புறவழிச்சாலை திட்டமான கோயில் நகரமான திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும் என கூறப்படுகிறது. மேலும், வேலூர் தொடங்கி தூத்துக்குடியில் உள்ள வ.வு, சிதம்பரனார் துறைமுகம் வரை 604 கிலோ மீட்டருக்கு நீண்டு, விழுப்புரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, திருச்சி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 38 உடனான, திருவண்ணாமலை மாவட்டத்தின் இணைப்பை மேம்படுத்தவும் புதிய புறவழிச்சாலை திட்டம் உதவும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/these-10-major-mistakes-people-make-while-driving-a-car-details-in-pics-269629&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திட்டமிடப்பட்ட புறவழிச்சாலையானது, புதிய தேசிய நெடுஞ்சாலையான 38-ஐ ஒட்டியுள்ள வேலக்கண்டல் அருகே தொடங்கி திருவண்ணாமலை நகரை ஒட்டி எண்டால் அருகே முடிவடைய உள்ளது. மொத்தம் மதிப்பிடப்பட்டுள்ள 22.71 கிலோ மீட்டர் நீளத்திற்கான திட்டத்தில் சுமார் 13.1 கிலோ மீட்டர் தூரம்&amp;nbsp; ஒரு புதிய பசுமை வழிப்பாதையில் உருவாக்கப்பட உள்ளது. மீதமுள்ள 9.6 கிலோ மீட்டர் நீளத்திற்கான சாலையானது, ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலை 77 வழித்தடத்தை பயன்படுத்தி, மேம்படுத்தி மீண்டும் புதிய பாதையுடன் இணைக்கப்படும்.இதனால், புதியதாக நிலத்தை கையப்படுத்த வேண்டிய தேவை மிகப்பெரிய அளவில் குறைக்கப்படுகிறது. இந்த திட்டத்தை 2 ஆண்டுகளில் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/BPm9E7p94fw?si=ioWMFb6w41uVoCVL&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை புறவழிச்சாலை - கட்டுமான டிசைன்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட வழித்தடமாக வடிவமைக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை புறவழிச்சாலையானது, குறிப்பிட்ட சந்திப்புகள், இணைப்புச் சாலைகள் மற்றும் சேவைச் சாலைகள் வழியாக மட்டுமே உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் அனுமதிக்க உள்ளது. இது நீண்ட தூரப் போக்குவரத்தை உள்ளூர் போக்குவரத்திலிருந்து பிரித்து, அதன் தடையற்ற இயக்கத்தை சாத்தியமாக்குகிறது. அருகிலுள்ள பகுதிகளுக்கு அணுகலை வழங்குவதற்காக, இந்தத் திட்டத்தில் 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான சேவைச் சாலைகளும், 6 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட இணைப்புச் சாலைகளும் அமைக்கப்பட உள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழித்தடமானது, தேசிய நெடுஞ்சாலை-77 (NH-77), மாநில நெடுஞ்சாலைகள் 236, 6, 9A மற்றும் 9 ஆகியவற்றுடன், ஒரு முக்கிய மாவட்டச் சாலை மற்றும் பல கிராமச் சாலைகளையும் கடந்து செல்லும். தடையற்ற போக்குவரத்தை எளிதாக உறுதி செய்யும் வகையில், மூன்று மேம்பாலங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றுள் ஒன்று வேலக்கண்டல் தொடக்கப் புள்ளியிலும், இரண்டாவது தேசிய நெடுஞ்சாலை-38 உடனான எண்டால் முனையச் சந்திப்பிலும், மற்றொன்று தேசிய நெடுஞ்சாலை-77 சந்திப்பிலும் அமையவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்&quot; href=&quot;https://tamil.abplive.com/auto/cars-sales-july-2026-maruti-hyundai-tata-mahindra-kia-creta-leads-suv-ev-sale-know-more-automobile-news-269799&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;போக்குவரத்து நெரிசலை குறைக்க திட்டம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நேரடிப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்காமல், அணுகல் கட்டுப்படுத்தப்பட்ட வழித்தடம் முழுவதும் இணைப்பைப் பேணுவதற்காக, முக்கிய இடங்களில் ஐந்து வாகனக் கீழ்ப்பாலங்களும் ஐந்து இலகுரக வாகனக் கீழ்ப்பாலங்களும் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அதேநேரம் பெரிய பாலங்கள், ரயில்வே மேம்பாலங்கள் அல்லது ரயில்வே கேட்களை கடக்கும் சூழல் எதுவும் இடம்பெறவில்லை. இருப்பினும், தற்போதுள்ள NH-77 வழித்தடத்தில் நான்கு சிறிய பாலங்களின் புனரமைப்பு அல்லது அகலப்படுத்துதல் மற்றும் 19 சிறுபாலங்களை அகலப்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க முடியுமாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திருவண்ணாமலை புறவழிச்சாலை - பலன், அதிகபட்ச வேகம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;திருவண்ணாமலை புறவழிச்சாலை அமைத்து முடிக்கப்பட்டதும், &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt;யார் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலையான 38 வழித்தடத்தைப் பயன்படுத்தும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து காரணமாக, அதிக போக்குவரத்தை காணும் திருவண்ணாமலையிலிருந்து வாகன நெரிசல் கடுமையாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;கனரக வாகனங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கான பேருந்துகள் நகருக்குள் வருவது குறையும்.&lt;/li&gt;
&lt;li&gt;நகரின் மையப் பகுதிக்குள் வாகனங்களின் ஒட்டுமொத்த போக்குவரத்து சுமார் 13.5 கி.மீ அளவிற்கு குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;li&gt;இந்த பகுதியை கடக்க முயலும் பயணிகளுக்கு சுமார் 30 நிமிடங்கள் மிச்சமாகும்.&lt;/li&gt;
&lt;li&gt;போளூர், செய்யாறு, ஆரணி மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து சேலம் அல்லது செங்கம் நோக்கிச் செல்லும் வாகனங்கள், நகருக்குள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த 13 கி.மீ. நீளமுள்ள சாலைகளை தவிர்த்து பயணிக்க முடியும்.&lt;/li&gt;
&lt;li&gt;திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ள வேலனந்தல் கிராமத்திற்கு அருகில் இது நேரடியாக இணைகிறது&lt;/li&gt;
&lt;li&gt;தண்டராம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தற்போது மேற்கொள்ள வேண்டிய சிரமமான 25 கிலோ மீட்டர் தூரத்திற்கான நீளமான பயணம், வெறும் 10 கிலோ மீட்டர் நேரடிப் பயணமாக மாற உள்ளது&lt;/li&gt;
&lt;li&gt;NH-38, NH-77 மற்றும் பல முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை (SH-236, SH-6, SH-9A, SH-9) புதிய புறவழிச்சாலை இணைக்கிறது&lt;/li&gt;
&lt;li&gt;பெங்களூரு, வேலூர், புதுச்சேரி மற்றும் சேலம் போன்ற முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிக்கும் சரக்கு வாகனங்களுக்குத் தடையற்ற மாற்றுப் பாதையை உருவாக்குகிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;இதனிடையே, திருவண்ணாமலை புறவழிச்சாலை பணிகள் முடிந்த பிறகு 10 ஆண்டுகளுக்கு நெடுஞ்சாலையைப் பராமரிக்கும் பொறுப்பும் ஒப்பந்ததாரரையே சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/02/61b5513611ab84e1bb6bf9a6ec840f851785642162388732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[25 ஆண்டுக்கால பிரச்சனைக்கு எண்ட் கார்டு! செவிலிமேடு பாலாறு மேம்பாலப் பணிகள் தொடங்கியது! எப்போது முடியும்?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-sevilimedu-palar-bridge-construction-to-complete-the-60-crore-project-by-2028-tnn-266250</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-sevilimedu-palar-bridge-construction-to-complete-the-60-crore-project-by-2028-tnn-266250#respond</comments><pubDate>Sun, 5 Jul 2026 10:20:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-sevilimedu-palar-bridge-construction-to-complete-the-60-crore-project-by-2028-tnn-266250</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;Vandavasi to Kanchipuram road update:&lt;/strong&gt; காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில், பாலாற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. நெடுஞ்சாலைத் துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த முக்கிய உள்கட்டமைப்புத் திட்டம், அப்பகுதி மக்களின் நீண்ட நாள் போக்குவரத்து தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அமையவுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னணியும் புதிய பாலத்தின் தேவையும் - Sevilimedu high level bridge&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் அமைந்துள்ள தற்போதைய பாலாறு பாலம், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த வழித்தடத்தில் கனரக வாகனங்களின் போக்குவரத்து கணிசமாக அதிகரித்ததால், காலப்போக்கில் பாலம் மிகவும் சேதமடைந்து மோசமான நிலையை எட்டியது. நெடுஞ்சாலைத் துறையினர் பலமுறை இந்த பாலத்தைச் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கவில்லை. இதன் காரணமாக, செவிலிமேடு பாலாறு பாலத்திற்கு மாற்றாக, அதன் அருகிலேயே புதிதாக ஒரு நவீன உயர்மட்டப் பாலத்தைக் கட்ட நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டனர். இதற்கான ஆரம்பக்கட்ட ஆய்வுப் பணிகளும் முன்னதாகவே முழுமையாக நிறைவடைந்தன.&lt;/p&gt;
&lt;h3&gt;செவிலிமேடு புதிய பாலத்தின் திட்ட மதிப்பீடு என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாலாற்றின் குறுக்கே புதிய உயர்மட்டப் பாலம் கட்டுவதற்காகத் தமிழக அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து, டெண்டர் நடைமுறைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி மாதம் இதற்கான பூமி பூஜை போடப்பட்டது. சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, தற்போது ஆற்றில் தூண்கள் அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினர் தீவிரமாகத் தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாலத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன ?&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிதாக அமைக்கப்பட உள்ள இந்த உயர்மட்டப் பாலம் பின்வரும் சிறப்பம்சங்களுடன் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நீளம்:&lt;/strong&gt; 885 மீட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஒட்டுமொத்த அகலம்:&lt;/strong&gt; 13.2 மீட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஓடு பாதையின் அகலம்:&lt;/strong&gt; 10.5 மீட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் வசதிகள்: பாலத்தின் இரு புறங்களிலும் பொதுமக்கள் பாதுகாப்பாகச் செல்வதற்கான நடைபாதையும் (Footpath), பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்களும் (Retaining walls) அமைக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செவிலிமேடு பாலத்தின் பணிகள் முடிவடைவது எப்போது ? Kanchipuram sevilimedu New Bridge Openning Date&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த புதிய மேம்பாலப் பணிகளை வரும் 2028-ஆம் ஆண்டுக்குள் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டு இலக்கு நிர்ணயித்துள்ளனர். அதுவரை, தற்போது பயன்பாட்டில் இருக்கும் பழைய பாலமே தடையற்ற போக்குவரத்திற்குத் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/05/6f87ee538400bcefa28cf8849b7b8d2417832269987591319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மொத்தமாய் மாறப்போகும் பழங்குடியினரின் எதிர்காலம்; தமிழக அரசின் அசத்தல் திட்டம் - அமைச்சர் வன்னியரசு சொன்ன சூப்பர் பிளான்]]></title><link>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-vanniarasu-study-to-find-solutions-to-the-problems-of-tribal-people-across-tamil-nadu-264710</link><comments>https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-vanniarasu-study-to-find-solutions-to-the-problems-of-tribal-people-across-tamil-nadu-264710#respond</comments><pubDate>Mon, 22 Jun 2026 12:29:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ திருவண்ணாமலை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tiruvannamalai/minister-vanniarasu-study-to-find-solutions-to-the-problems-of-tribal-people-across-tamil-nadu-264710</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடும் முழுவதும் பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுக்காண ஆய்வு செய்யப்பட்டு பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் தமிழக அரசின் &amp;nbsp;5 ஆண்டு தொலைநோக்கு திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளதாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருவண்ணாமலை மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்திற்கு வருகை தந்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, அப்பகுதியில் வசித்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்த கனிக்கர்(குடுகுடுப்பை) இன மக்களை சந்தித்து &amp;nbsp;அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/lzrKedBEc4A?si=eXznwIRkCFo1KTGd&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், &quot;திருவண்ணாமலை மாவட்டத்தில் அய்யம்பாளையம் பகுதியில் 65 ஆண்டுகாலமாக குடுகுடுப்பை தொழில் செய்யும் பழங்குடியினத்தை சேர்ந்த கனிக்கர் இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் நீண்டகாலமாக பழங்குடியின சாதி சான்று வேண்டி கோரிக்கை வைத்து வருகிறார்கள். அவர்களுக்கு சாதி சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கல்வி, வேலைவாய்ப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்..&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் பிரச்சனைகளை போக்க ஆய்வு செய்யப்பட உள்ளது. இந்த மக்களின் பிரதான கோரிக்கையான மனை, மனைப்பட்டா, சாதிசான்று இவற்றை வழங்கவும், பழங்குடியின மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்க தமிழக அரசின் 5 ஆண்டு கால தொலை நோக்கு பார்வையாக செயல்படுத்தப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சாதிவாரி கணக்கெடுப்பு தேவை. அதை விடுதலை சிறுத்தை கட்சி ஆதரிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா முழுவதும் நடத்த வேண்டும்&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சமூக நீதித்துறை அமைச்சராக வன்னியரசு பொறுப்பேற்றது முதல் பட்டியல் இனமக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். நீண்டகாலமாக கிடைக்காத வீட்டு மனை பட்டாக்கள், பல ஆண்டுகளாக சில கிராமங்களுக்கு விடப்படாத அரசுப் பேருந்துகள் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை அவர் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/best-electric-scooters-with-200-km-range-know-price-details-264203&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/22/bdb27d6bdd4582d31966f1608a300f601782111566196113_original.jpg" width="220"/></item></channel></rss>