திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2ஆம் தேதி முதல் 11ம் தேதி வரை வைகுண்ட வாயில் வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த 10 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என 2 லட்சம் டிக்கெட்கள் 24ஆம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு ரூ.300 சிறப்பு நுழைவு தரிசனம்  டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் http:// Tirupati Balaji. AP. gov.in/#/login என்ற தேவஸ்தான இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். ஏழுமலையான் கோவிலில் தினசரியும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இலவச தரிசனம் மட்டுமல்லாது சிறப்பு தரிசனம் கட்டண தரிசனங்களின் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.


விஐபிக்கள் பிரேக் தரிசனம் மூலம் அரசியல்வாதிகளும், பணக்காரர்களும் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர். அப்போது இலவச தரிசன அறைகளில் சில மணி நேரங்கள் பக்தர்கள் காத்திருப்பார்கள்.


அதிகாலை நேரத்தில் துவங்கி காலை எட்டு மணி வரை சுமார் 4000 பக்தர்களுக்கு விஐபி பிரேக் தரிசன அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தேவஸ்தானம் குழு எடுத்த முடிவின் அடிப்படையில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி முதல்,  காலை 8 மணிக்கு துவங்கி பக்தர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதனால் இலவச தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை மாறி அதிகாலை நேரத்தில் ஏழுமலையானை தரிசிக்க முடிகிறது. மேலும் தேவஸ்தான அறக்கட்டளைப்படி ரூபாய் 1000 அல்லது 500 செலுத்தி விஐபி பிரேக் தரிசனம் பெற முடிகிறது.