கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டீ கடையில் கடந்த மாதம் 17 ஆம் தேதி சமையல் கேஸ் சிலிண்டர் வெடி விபத்தில் 8 பேர் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. வாத்தியார்விளை பகுதியை சேர்ந்த சுப்பையன் 66 என்பவர் உயிரிழந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் கடந்த 3 ஆண்டுகளாக டீ கடை நடத்தி வருபவர்கள் ராஜேஷ் மற்றும் சபீக்(37). இவர்களது டீ கடை இரவு முழுவதும் செயல்படும். இந்நிலையில் கடந்த 17 ம் தேதி விடியற்காலையில் கடையில் டீ வியாபாரம் நடந்து கொண்டு இருந்த போது, கடையிலுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்தது. பலத்த சத்தத்துடன் சிலிண்டர் வெடித்து சிதறியதில் டீ குடிக்க வந்தவர்களில் 2 பெண்கள் உட்பட 8 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
