கோடை விடுமுறை ஸ்பெஷல்! திருநெல்வேலியிலிருந்து கோவாவுக்கு சுற்றுலா ரயில்: மிஸ் பண்ணிடாதீங்க!
கோடை விடுமுறையையொட்டி, திருநெல்வேலியில் இருந்து கோவாவுக்கு, IRCTC சுற்றுலா சிறப்பு ரயில் இயக்க உள்ளது.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது. இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது.
இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். சாதாரண புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், வந்தே பாரத் ரயில்கள், சரக்கு ரயில்கள் என இதில் ஏராளம். குறிப்பாக குறைந்த கட்டணத்தில் தொலை தூர இடங்களுக்கு களைப்பின்றி செல்ல முடியும் என்பதால் அனைவரும் ரயில் பயணத்தை நாடி வருகின்றனர். ரயில் செல்லும் பயணிகளுக்கு ஏற்றவாறு குறிப்பாக விடுமுறை தினங்கள், திருவிழாக்கால நேரங்களில் ரயில் சேவைகளில் பல்வேறு மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த நிலையில், IRCTC., வெளியிட்ட அறிக்கை. கோடை விடுமுறையையொட்டி, திருநெல்வேலியில் இருந்து, வரும் மே 1ம் தேதி துவங்கி, மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் வழியாக கோவாவுக்கு, சுற்றுலா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. ஏழு நாட்கள் சுற்றுலா தொகுப்பில், துாத்சாகர் நீர்வீழ்ச்சியை பார்வையிடுவது உள்ளிட்டவை அடங்கும்.

சுற்றுலா செல்ல ஒருவருக்கு, 26,300 ரூபாய் முதல் கட்டணம் இருக்கும். 3ம் வகுப்பு, 'ஏசி' பெட்டியில் பயணம், மூன்று நட்சத்திர ஹோட்டலில் தங்கும் வசதி உள்ளிட்டவை, இதில் அடங்கும். இது குறித்து மேலும் தகவல் பெற, சென்னை - 82879 31965, மதுரை - 82879 31962, திருச்சி - 82879 32070, கோவை - 90031 40655 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது www.irctctourism.com என்ற இணையதளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















