<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>thoothukudi</title><atom:link href="https://tamil.abplive.com/thoothukudi/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 20:04:23 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Thoothukudi Airport : ‘தூத்துக்குடியில் இருந்து வெளிநாட்டிற்கு விமான சேவை எப்போது?’ மத்திய அரசு அளித்த பதில் இதுதான்..!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/when-will-international-flights-start-from-tuticorin-airport-centre-explains-current-status-268407</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/when-will-international-flights-start-from-tuticorin-airport-centre-explains-current-status-268407#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 11:26:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ இராஜா சண்முகசுந்தரம் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/when-will-international-flights-start-from-tuticorin-airport-centre-explains-current-status-268407</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டின் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாக திகழும் தென் மாவட்டங்களுக்கென தற்போது மதுரை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மதுரையில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டிருந்தாலும் முத்து நகரமாக விளங்கும் தூத்துக்குடி விமான நிலையம் உள்நாட்டு விமான சேவைகளை மட்டுமே செய்து வருகிறது. அதுவும் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு மட்டுமே விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி விமான நிலையத்தை தரம் உயர்த்தி மும்பை, டெல்லி, ஹைதராபாத் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களுக்கும் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக தென் மாவட்ட மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில்,&amp;nbsp; தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் விமான சேவை தொடர்பாக மத்திய விமான போக்குவரத்துத் துறை ஒரு விளக்கம் அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;அதிமுகவின் இன்பதுரை எழுப்பிய கேள்விகள்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் இன்பதுரை நாடாளுமன்றத்தில் தூத்துக்குடி விமான நிலையம் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தார். அதில், தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானங்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டுமே இயக்கப்படுவதாக கூறப்படுவது உண்மையா ? தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்து, பெரிய ரக விமானங்கள் இங்கிருந்து புறப்படும் சூழலை ஏற்படுத்த மத்திய அரசிடம் ஏதும் திட்டம் உள்ளதா ? ஹைதராபாத், மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விமானங்களை தூத்துக்குடியில் இருந்தும் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இயக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா எனவும் கேள்விகளை அவர் எழுப்பியிருந்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;தூத்துக்குடி விமான நிலையம் குறித்து மத்திய அரசு சொன்னது என்ன ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதற்கு பதில் அளித்திருக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம், தற்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து ஏடிஆர் &amp;ndash; 72 வகை விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், இண்டிகோ நிறுவனம் மட்டும் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னை மற்றும் பெங்களூருவிற்கு வாரத்திற்கு 70 விமான சேவைகளை இயக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதே நேரத்தில், தூத்துக்குடி விமான நிலையம் ஆண்டுக்கு 21 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் புதிய திறன் கொண்ட முனைய கட்டடம் மேம்படுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர், ஒரு மணி நேரத்திற்கு 1.440 பயணிகள் வந்து செல்ல ஏதுவான கட்டமைப்பும் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;பெரிய விமானங்கள் இயக்கம் எப்போது ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் இயக்கப்படுவதற்காக 3 ஆயிரத்து 115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்ட ஓடுபாதை அமைக்கப்பட்டுள்ளதாகவும், தூத்துக்குடி விமான நிலையத்தில் இரவு நேர விமானங்கள் சேவையும் தொடக்கப்பட்டிருப்பதாகவும் அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், 1994ஆம் ஆண்டு உள்நாட்டு விமானப் போக்குவரத்து துறை தாராளமயமாக்கப்பட்டதிலிருந்து விமான நிறுவனங்கள் தங்களின் செயல்பாடு மற்றும் வணிக ரீதியாக வருவாய் ஈட்டக்கூடிய சாத்தியகூறுகள் அடிப்படையில் எந்த வகை விமானங்களை எந்தெந்த விமான நிலையங்களுக்கு இயக்க வேண்டும் என்ற முடிவை அவர்களே எடுத்து வருவதாகவும், எனவே புதிய விமான சேவைகள் தொடர்புடைய முடிவும், பெரிய விமானங்களை இயக்குவது பற்றிய முடிவும் அந்தத விமான சேவை நிறுவனங்களின் கைகளிலேயே உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/5d9f252cc9282186c599ad1e531199651784613352530108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்: ஜூலை 17 அன்று 200 தனியார் நிறுவன வேலைகள்! விபரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-job-fair-200-private-sector-jobs-on-july-17-267653</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-job-fair-200-private-sector-jobs-on-july-17-267653#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 21:27:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-job-fair-200-private-sector-jobs-on-july-17-267653</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற ஜூலை 17-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/94da08276838e7cb68d9dff0bd5035301784130943858193_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலை தேடும் இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, B.E., டிப்ளமோ, ஐ.டி.ஐ. உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை பெற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைக்கு ஏற்ற பணிகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். பல்வேறு துறைகளைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமின் மூலம் 200-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தெரிவித்துள்ளது. வேலை தேடிக்கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரம் (Resume), ஆதார் அட்டை மற்றும் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/550f24abcd616cc28e5f18a0e421cf4b1784130907773193_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமில் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நிறுவனங்கள் நேர்முகத் தேர்வு நடத்தி பணியாளர்களைத் தேர்வு செய்யும். இந்த வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் அறிவித்துள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/550f24abcd616cc28e5f18a0e421cf4b1784130907773193_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடியில் நாளை மின்தடை: உங்கள் பகுதி பாதிக்கப்படுகிறதா?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/power-outage-in-thoothukudi-tomorrow-is-your-area-affected-267312</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/power-outage-in-thoothukudi-tomorrow-is-your-area-affected-267312#respond</comments><pubDate>Mon, 13 Jul 2026 12:41:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/power-outage-in-thoothukudi-tomorrow-is-your-area-affected-267312</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/53a3920cab9a79c6f255aeed9c8b5f3c1783926424455193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் வினியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை&amp;nbsp; (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர்,&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/470e9d80f38b571c31a9d96df383b6e91783926391132193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/13/53a3920cab9a79c6f255aeed9c8b5f3c1783926424455193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி சிப்காட்: நாளை மறுநாள் மின் தடை! பாதிக்கும் பகுதிகள் இவை!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-sipcot-power-outage-the-day-after-tomorrow-here-are-the-affected-areas-267230</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-sipcot-power-outage-the-day-after-tomorrow-here-are-the-affected-areas-267230#respond</comments><pubDate>Sun, 12 Jul 2026 18:19:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-sipcot-power-outage-the-day-after-tomorrow-here-are-the-affected-areas-267230</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்த நிலையில், தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/3093f078a95003d94d2b39f0439b3b321783860494044193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி சிப்காட் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (14.7.2026, செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன்படி மடத்தூர், மடத்தூர் மெயின் ரோடு, முருகேசநகர், கதிர்வேல்நகர், தேவகிநகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜீவ் நகர், சின்னமணிநகர், 3வதுமைல், புதுக்குடி, டைமண்ட்காலனி, EB காலனி, ஏழுமலையான் நகர், மில்லர்புரம், ஹவுசிங் போர்டு பகுதிகள், அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், பத்தினாதபுரம்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சங்கர் காலனி, FCI குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், சோரிஸ்புரம், மதுரை பைபாஸ் ரோடு, ஆசீர்வாத நகர், சில்வர்புரம், சுப்பிரமணியபுரம், கங்கா பரமேஸ்வரி காலனி, லாசர் நகர், ராஜரத்தின நகர், பாலையாபுரம், வி.எம்.எஸ். நகர், முத்தம்மாள் காலனி, நேதாஜி நகர், லூசியா காலனி, மகிழ்ச்சி புரம், ஜோதி நகர், பால்பாண்டி நகர், முத்துநகர், கந்தன் காலனி, காமராஜ் நகர், NGO காலனி, அன்னை தெரசா நகர்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பர்மா காலனி, TMB காலனி, அண்ணாநகர் 2வது நகர் மற்றும் 3வது நகர், கோக்கூர், சின்னக்கண்ணுபுரம், பாரதி நகர், புதூர்பாண்டியபுரம் மெயின் ரோடு, கிருபை நகர், அகில இந்திய வானொலி நிலையம், ஹரிராம்நகர், கணேஷ்நகர், புஷ்பாநகர், ஸ்டெர்லைட் குடியிருப்புகள், கலெக்டர் அலுவலகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/9d866005d62e3f439abc8eca3e6c81851783860513661193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/12/c895e9b0cef4732d519048871863ea9e1783860351769193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடியில் ரெளடி கும்பல் மோதல்: வீட்டில் பதுக்கிய 8 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/clash-between-gangs-of-rowdies-in-thoothukudi-8-country-made-bombs-stashed-in-a-house-seized-266472</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/clash-between-gangs-of-rowdies-in-thoothukudi-8-country-made-bombs-stashed-in-a-house-seized-266472#respond</comments><pubDate>Mon, 6 Jul 2026 22:38:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/clash-between-gangs-of-rowdies-in-thoothukudi-8-country-made-bombs-stashed-in-a-house-seized-266472</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடியில் ரெளடி கும்பல் மோதல் எதிரொலியாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 நாட்டு வெடிகுண்டுகளை போலிசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த கும்பல் ஒன்று தனிப்பிரிவு போலிசாரிடம் சிக்கியது. அந்த கும்பலிடம் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கபில்தேவ், அஜித்குமார் ஆகிய இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/06/550ae7044e299574af60ea84da157bb91783357683235193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில், இருவரின் வீட்டிலும் சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அஜித்குமாரின் மனைவி எஸ்தர் மற்றும் மாமியார் ரீத்தம்மாள் ஆகியோர் வசித்து வரும் வீட்டின் வெளிப்புறத்தில் ஒரு பையில் 8 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த வெடிகுண்டுகளை பறிமுதல் செய்து வல்லநாடு மலை அடிவாரத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, தொழில்நுட்ப ரீதியாக செயலிழக்கச் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடந்த 2025-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ம் தேதி சீனு என்பவர் உப்பளத்தில் வைத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதில் கபில்தேவ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் சீனுவின் நண்பரான ஜப்பான் அஜித் என்பவருக்கும் கபில்தேவுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இருவரும் தனித்தனி கும்பலாக செயல்பட்டு வந்துள்ளனர். அஜித் கும்பலை பழிவாங்க கபில்தேவ் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. அஜித்குமார் மீது 8 வழக்குகளும், கபில்தேவ் மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. &amp;nbsp;வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளைபதுக்கி வைத்த சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/06/fdd127924347c7422a639af038d2e4281783357612631193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-power-outage-07-07-2026-which-areas-are-affected-and-for-how-long-266317</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-power-outage-07-07-2026-which-areas-are-affected-and-for-how-long-266317#respond</comments><pubDate>Sun, 5 Jul 2026 20:12:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-power-outage-07-07-2026-which-areas-are-affected-and-for-how-long-266317</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் நாளை மறுநாள் (7.7.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/05/5afa07deef8b86c604d5768a22676c231783262477059193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து தூத்துக்குடி நகர்ப்புற மின் விநியோக செயற்பொறியாளர் சின்னத்துரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி நகர்ப்புற துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை மறுநாள் (7.7.2026, செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நகரின் முக்கிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போல்பேட்டை, ஆண்டாள்தெரு, சத்திரம்தெரு, 1-ஆம் கேட், 2-ஆம் கேட், மட்டக்கடை, வடக்கு பீச்ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, எட்டையாபுரம் ரோடு, தெப்பகுளம் தெரு, சிவன் கோவில் தெரு, வ.உ.சி ரோடு, ஜெயிலானி தெரு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதர நகர், சண்முகபுரம், மேலசண்முகபுரம், ஸ்டேட் பேங்க் காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், முத்தம்மாள்காலனி, சுந்தரவேல்புரம், அம்பேத்கார்நகர், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி. மெயின் ரோடு, முனியசாமிபுரம், CGE காலனி, லெவிஞ்சிபுரம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பக்கீள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளில் மின்தடை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/05/80f6c14998e71b1f026b2a95ec5eaa771783262496126193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/05/61b08bfa6b1f70f25169242c9bc10d651783261991506193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூர் கோயிலில் ஜூலை 1 முதல் புதிய விதி: செல்போன் கொண்டு சென்றால் பறிமுதல்!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/new-rule-at-thiruchendur-temple-from-july-1-mobile-phones-will-be-confiscated-if-brought-inside-265793</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/new-rule-at-thiruchendur-temple-from-july-1-mobile-phones-will-be-confiscated-if-brought-inside-265793#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 22:14:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/new-rule-at-thiruchendur-temple-from-july-1-mobile-phones-will-be-confiscated-if-brought-inside-265793</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழங்கியுள்ள தீா்ப்பின்படி, இக்கோயில் உள்ளே பக்தா்கள் கைப்பேசிகளை பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 14.11.2022 முதல் திருக்கோயிலுக்குள் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தடை அமலில் உள்ளது. &amp;nbsp;தற்போது, நீதிமன்ற உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் பொருட்டு புதன்கிழமை இன்று (ஜூலை 1) முதல் கைப்பேசி பயன்படுத்துவதற்கான தடையை மிகத் தீவிரமாக அமல்படுத்தப்படும். அதன்படி பக்தா்கள் முழுமையாக பரிசோதனைக்குப் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/d79cc0b8ca5228841d9c78cde63f04e61782924153428193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, கோயிலுக்கு வரும் பக்தா்கள் தங்கள் கைப்பேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனத்துக்கு வர வேண்டும். கைப்பேசிகளை பாதுகாக்க கோயில் நிா்வாகம் சாா்பில் ஆங்காங்கே கைப்பேசி வைப்பிடங்கள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றை பக்தா்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். பரிசோதனையின் போது பக்தா்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கோயில் நிா்வாகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது அந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், பொதுத் தரிசன வரிசை, ரூ.100 விரைவு தரிசன வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்கள் தங்களது கைபேசிகளை தங்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு வருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிற்க்காக கோயில் வளாகத்தின் பல இடங்களில் கைபேசி வைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வசதிகளை பயன்படுத்தி கைபேசிகளை ஒப்படைத்து விட்டு தரிசனம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/c3e2d4ab2b459aab5b9f87836f412d611782924127428193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாதுகாப்பு பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அவசர தேவைகளுக்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் சேவை, பொது அறிவிப்பு அமைப்பு, மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இன்று ஜூலை 1 முதல் கோயிலுக்குள் கைபேசி இன்றி தரிசனம் செய்ய பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை கோவிலின் ஆன்மிக சூழலை பாதுகாப்பதற்கும், தரிசன ஒழுங்கை மேம்படுத்துவதற்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/c3e2d4ab2b459aab5b9f87836f412d611782924127428193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/three-arrested-for-harassing-school-girl-in-tuticorin-tnn-264891</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/three-arrested-for-harassing-school-girl-in-tuticorin-tnn-264891#respond</comments><pubDate>Tue, 23 Jun 2026 23:04:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/three-arrested-for-harassing-school-girl-in-tuticorin-tnn-264891</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;சிறுமியை காதலித்த இளைஞர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் , சிறுமி தனது பாட்டியின் அரவணைப்பில் வசித்து பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சஞ்சய், 21 வயதுடைய உபேஷ் தர்மா 18 வயதுடைய முத்தரசன் ஆகிய மூவருக்கும் தொழில் ரீதியாக சிறுமியின் தந்தையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மூவரும் பெயிண்டராக பணிபுரிந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் அடிக்கடி சிறுமியின் தந்தையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்திருக்கின்றனர். அப்போது சிறுமிக்கு மூவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு ரீதியாக பேசி வந்திருக்கிறார். தொடர்ந்து பழகி வந்த நிலையில் சிறுமிக்கு சஞ்சய் மீது காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;புதருக்குள் சிறுமியை அழைத்து சென்ற இளைஞர்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசி பழகி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை சஞ்சய் ஆத்திக்காடு பகுதிக்கு அழைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து முத்தரசன் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை ஆத்திக்காடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் மூவரும் சேர்ந்து மாணவியை ஆத்திக்காடு பகுதியில் உள்ள கருமேனி ஆற்றங்கரையோரம் உள்ள புதர்கள் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு மாணவியிடம் மூவரும் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், அவரது அலறல் சத்தம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பொதுமக்கள் வருவதை கண்ட மூவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;காவல் நிலையத்தில் புகார்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அவர்களை மடக்கிப் பிடித்த அப்பகுதி மக்கள் உடனடியாக மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் மூவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;விசாரணையில் மாணவியை காதலிப்பதாக கூறி தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றதும், பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து தவறாக நடக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து மாணவி சிறுமி என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சய், உபேஷ் தர்மா மற்றும் முத்தரசன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/23/235a2840275f119b04e60cfe60ef8beb17822360079891310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை தொடக்கம்!"]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/good-news-for-students-government-iti-admissions-have-begun-with-a-monthly-stipend-of-750-264631</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/good-news-for-students-government-iti-admissions-have-begun-with-a-monthly-stipend-of-750-264631#respond</comments><pubDate>Sun, 21 Jun 2026 13:28:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/good-news-for-students-government-iti-admissions-have-begun-with-a-monthly-stipend-of-750-264631</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/8ba4c926177af2b3692c28531aea02831782028685440193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி (கோரம்பள்ளம்), வேப்பலோடை, திருச்செந்தூர், உமறுப்புலவர் நாகலாபுரம் மற்றும் ஏரல் ஆகிய 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தகுதியான மாணவர்கள் நேரடியாகச் சென்று சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் (Trades) குறித்த விபரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரடிச் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயை அட்மிஷனின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ (UPI - Gpay, PhonePe) வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேரடிச் சேர்க்கைக்கு விரும்பும் மாணவர்கள் தங்களின் 8 அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் (Original) மற்றும் ஒரு செட் நகல்களுடன் (Xerox) மேலே குறிப்பிட்ட ஐ.டி.ஐ. மையங்களை நேரில் அணுக வேண்டும். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி (9499055810), வேப்பலோடை (9499055814), திருச்செந்தூர் (9499055812), நாகலாபுரம் (04638-242687), ஏரல் (7418165115) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/034d760a99c11882ab1f249be52c9e861782028657630193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு விலையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மாதந்தோறும் வருகை நாட்களுக்கு ஏற்ப ரூ.750 உதவித்தொகை. 3 வேளையும் இலவச உணவு மற்றும் தங்குவதற்கான உறைவிட வசதி. விலையில்லா லேப்டாப் (மடிக்கணினி), மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை (Bus Pass). தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 'புதுமைப் பெண் திட்டம்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்' கீழ் மாதந்தோறும் தலா ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் இந்த அரிய வாய்ப்பினைத் தகுதியுள்ள உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/034d760a99c11882ab1f249be52c9e861782028657630193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[crime: தூத்துக்குடி TASMAC அருகே கொடூர கொலை: பீகார் தொழிலாளி உயிரிழப்பு, 4 பேர் கைது..]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/brutal-murder-near-tasmac-outlet-in-thoothukudi-bihar-worker-killed-four-arrested-264543</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/brutal-murder-near-tasmac-outlet-in-thoothukudi-bihar-worker-killed-four-arrested-264543#respond</comments><pubDate>Sat, 20 Jun 2026 15:07:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/brutal-murder-near-tasmac-outlet-in-thoothukudi-bihar-worker-killed-four-arrested-264543</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பகுதியில் ஏற்பட்ட வாய்த்தகராறு, சில நிமிடங்களிலேயே கொடூர கொலை சம்பவமாக மாறியுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/206c4081f11eda1218f9fd5d2cef84f21781948239941193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொலை சம்பவம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (35), தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், மதுபானக் கடை அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகரை சேர்ந்த வட மாநில தொழிலாளி ராஜேஷ் (35) . இவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் தென்பாகம் போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொலையின் பின்னனி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் அருகில் ஒருவர் இறந்து கிடப்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்தனர் தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளி ராஜேஷ் (35) என்பவர்தான் இறந்து கிடப்பவர் என தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;போலீசார் விசாரணை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொலை குறித்த காரணம் குறித்து விசாரிக்கையில் மது அருந்தும்போது,அவருக்கும் அங்கே ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அரசு மதுபான கடையை விட்டு வெளியே வந்த வடமாநில தொழிலாளி ராஜேஷை 4 பேர் கொண்ட கும்பல் அரசு மதுபான கடை அருகே உள்ள பகுதியில் வைத்து அங்கு கிடந்த கட்டையால் எடுத்து தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த சிவா, ஜேம்ஸ், பூமிநாதன், கசாலி ஆகிய நான்குபேரை தென்பாகம் காவல்துறை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/2e45ca432036ff3628c83c32ec3b63121720071916727184_original.jpg" width="220"/></item></channel></rss>