<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>thoothukudi</title><atom:link href="https://tamil.abplive.com/thoothukudi/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 22:05:44 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[காதல் வலையில் வீழ்த்தி சிறுமியை புதருக்குள் அழைத்துச் சென்று பாலியல் அட்டூழியம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/three-arrested-for-harassing-school-girl-in-tuticorin-tnn-264891</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/three-arrested-for-harassing-school-girl-in-tuticorin-tnn-264891#respond</comments><pubDate>Tue, 23 Jun 2026 23:04:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/three-arrested-for-harassing-school-girl-in-tuticorin-tnn-264891</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;சிறுமியை காதலித்த இளைஞர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவி கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் , சிறுமி தனது பாட்டியின் அரவணைப்பில் வசித்து பள்ளிக்கு சென்று வந்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள ஆத்திக்காடு பகுதியை சேர்ந்த 19 வயதுடைய சஞ்சய், 21 வயதுடைய உபேஷ் தர்மா 18 வயதுடைய முத்தரசன் ஆகிய மூவருக்கும் தொழில் ரீதியாக சிறுமியின் தந்தையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மூவரும் பெயிண்டராக பணிபுரிந்து வருவதாக சொல்லப்படும் நிலையில் அடிக்கடி சிறுமியின் தந்தையை பார்க்க அவரது வீட்டிற்கு சென்று வந்திருக்கின்றனர். அப்போது சிறுமிக்கு மூவருடன் பழக்கம் ஏற்பட்டு நட்பு ரீதியாக பேசி வந்திருக்கிறார். தொடர்ந்து பழகி வந்த நிலையில் சிறுமிக்கு சஞ்சய் மீது காதல் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;புதருக்குள் சிறுமியை அழைத்து சென்ற இளைஞர்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இருவரும் அடிக்கடி வெளியில் சந்தித்து பேசி பழகி வந்த நிலையில் நேற்று முன்தினம் மாணவியை சஞ்சய் ஆத்திக்காடு பகுதிக்கு அழைத்திருக்கிறார். அதனை தொடர்ந்து முத்தரசன் மாணவியின் வீட்டிற்கு சென்று அவரை ஆத்திக்காடு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர் மூவரும் சேர்ந்து மாணவியை ஆத்திக்காடு பகுதியில் உள்ள கருமேனி ஆற்றங்கரையோரம் உள்ள புதர்கள் நிறைந்த இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சென்ற பிறகு மாணவியிடம் மூவரும் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி அங்கிருந்து தப்பிக்க முயன்ற நிலையில், அவரது அலறல் சத்தம் மற்றும் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கவனித்த அப்பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். பொதுமக்கள் வருவதை கண்ட மூவரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சி செய்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;காவல் நிலையத்தில் புகார்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;அவர்களை மடக்கிப் பிடித்த அப்பகுதி மக்கள் உடனடியாக மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் மூவரையும் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கிடையில் சம்பவம் குறித்து தகவலறிந்த மாணவியின் பெற்றோர், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சகாய சாந்தி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;விசாரணையில் மாணவியை காதலிப்பதாக கூறி தனிமையான பகுதிக்கு அழைத்துச் சென்றதும், பின்னர் நண்பர்களுடன் சேர்ந்து தவறாக நடக்க முயன்றதும் தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து மாணவி சிறுமி என்பதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் சஞ்சய், உபேஷ் தர்மா மற்றும் முத்தரசன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/23/235a2840275f119b04e60cfe60ef8beb17822360079891310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. மாதம் ரூ.750 உதவித்தொகையுடன் அரசு ITI சேர்க்கை தொடக்கம்!"]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/good-news-for-students-government-iti-admissions-have-begun-with-a-monthly-stipend-of-750-264631</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/good-news-for-students-government-iti-admissions-have-begun-with-a-monthly-stipend-of-750-264631#respond</comments><pubDate>Sun, 21 Jun 2026 13:28:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/good-news-for-students-government-iti-admissions-have-begun-with-a-monthly-stipend-of-750-264631</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/8ba4c926177af2b3692c28531aea02831782028685440193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி (கோரம்பள்ளம்), வேப்பலோடை, திருச்செந்தூர், உமறுப்புலவர் நாகலாபுரம் மற்றும் ஏரல் ஆகிய 5 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தகுதியான மாணவர்கள் நேரடியாகச் சென்று சேர்க்கை பெற்றுக்கொள்ளலாம். மாநிலம் முழுவதும் உள்ள சேர்க்கை மையங்களின் பட்டியல் மற்றும் தொழிற்பிரிவுகள் (Trades) குறித்த விபரங்களை www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஐ.டி.ஐ. மாணவர் சேர்க்கைக்கு 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2021-ல் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பின் 9-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும். நேரடிச் சேர்க்கைக்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயை அட்மிஷனின் போது டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ (UPI - Gpay, PhonePe) வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேரடிச் சேர்க்கைக்கு விரும்பும் மாணவர்கள் தங்களின் 8 அல்லது 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (TC), சாதிச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அடையாளச் சான்று ஆகியவற்றின் அசல் (Original) மற்றும் ஒரு செட் நகல்களுடன் (Xerox) மேலே குறிப்பிட்ட ஐ.டி.ஐ. மையங்களை நேரில் அணுக வேண்டும். மேலும் விபரங்களுக்கு தூத்துக்குடி (9499055810), வேப்பலோடை (9499055814), திருச்செந்தூர் (9499055812), நாகலாபுரம் (04638-242687), ஏரல் (7418165115) என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/034d760a99c11882ab1f249be52c9e861782028657630193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் பல்வேறு விலையில்லா நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி மாதந்தோறும் வருகை நாட்களுக்கு ஏற்ப ரூ.750 உதவித்தொகை. 3 வேளையும் இலவச உணவு மற்றும் தங்குவதற்கான உறைவிட வசதி. விலையில்லா லேப்டாப் (மடிக்கணினி), மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகங்கள் மற்றும் வரைபடக் கருவிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை (Bus Pass). தகுதியுள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் 'புதுமைப் பெண் திட்டம்' மற்றும் 'தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்' கீழ் மாதந்தோறும் தலா ரூ.1,000 உயர்கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகின்றன. மாணவர்களின் எதிர்காலத்தை வளர்க்கும் இந்த அரிய வாய்ப்பினைத் தகுதியுள்ள உள்ளூர் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/21/034d760a99c11882ab1f249be52c9e861782028657630193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[crime: தூத்துக்குடி TASMAC அருகே கொடூர கொலை: பீகார் தொழிலாளி உயிரிழப்பு, 4 பேர் கைது..]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/brutal-murder-near-tasmac-outlet-in-thoothukudi-bihar-worker-killed-four-arrested-264543</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/brutal-murder-near-tasmac-outlet-in-thoothukudi-bihar-worker-killed-four-arrested-264543#respond</comments><pubDate>Sat, 20 Jun 2026 15:07:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/brutal-murder-near-tasmac-outlet-in-thoothukudi-bihar-worker-killed-four-arrested-264543</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடியில் வடமாநில தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அரசு மதுபானக் கடை பகுதியில் ஏற்பட்ட வாய்த்தகராறு, சில நிமிடங்களிலேயே கொடூர கொலை சம்பவமாக மாறியுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/206c4081f11eda1218f9fd5d2cef84f21781948239941193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொலை சம்பவம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஷ் (35), தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், மதுபானக் கடை அருகே நான்கு பேர் கொண்ட கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகரை சேர்ந்த வட மாநில தொழிலாளி ராஜேஷ் (35) . இவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடை அருகில் வைத்து 3 பேர் கொண்ட கும்பல் மது போதையில் கட்டையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள சூழலில் தென்பாகம் போலீசார் இந்த கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொலையின் பின்னனி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபான கடையில் அருகில் ஒருவர் இறந்து கிடப்பதாக மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்தனர் தென்பாகம் காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார். காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில், தூத்துக்குடி வின் பாஸ்ட் கார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் பீகார் மாநிலத்தைச் சார்ந்த தொழிலாளி ராஜேஷ் (35) என்பவர்தான் இறந்து கிடப்பவர் என தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;போலீசார் விசாரணை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொலை குறித்த காரணம் குறித்து விசாரிக்கையில் மது அருந்தும்போது,அவருக்கும் அங்கே ஏற்கனவே மது அருந்தி கொண்டிருந்த மூன்று பேர் கொண்ட கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து அரசு மதுபான கடையை விட்டு வெளியே வந்த வடமாநில தொழிலாளி ராஜேஷை 4 பேர் கொண்ட கும்பல் அரசு மதுபான கடை அருகே உள்ள பகுதியில் வைத்து அங்கு கிடந்த கட்டையால் எடுத்து தலையில் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியைச் சேர்ந்த சிவா, ஜேம்ஸ், பூமிநாதன், கசாலி ஆகிய நான்குபேரை தென்பாகம் காவல்துறை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/04/2e45ca432036ff3628c83c32ec3b63121720071916727184_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[NEET மறு தேர்வு 2026: தூத்துக்குடியில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு. முக்கிய அறிவுறுத்தல்கள் வெளியீடு..]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/neet-re-exam-2026-special-buses-arranged-in-thoothukudi-key-instructions-released-264541</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/neet-re-exam-2026-special-buses-arranged-in-thoothukudi-key-instructions-released-264541#respond</comments><pubDate>Sat, 20 Jun 2026 14:57:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/neet-re-exam-2026-special-buses-arranged-in-thoothukudi-key-instructions-released-264541</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாளை நடைபெற உள்ள நீட் மறு தேர்வினை தூத்துக்குடி மாவட்டத்தில் 5 மையங்களில் 2,015 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய தேர்வு முகமை (NTA) மூலம் நீட் மறு தேர்வு 21.6.2026 அன்று மதியம் நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/d1c71e19d35e786edadd94ff393cbdaa1781947613015193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தேர்வு தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் எட்டையபுரம் ஆகிய வட்டங்களில் மொத்தம் 5 தேர்வு மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை மொத்தம் 2,015 தேர்வர்கள் எழுதவுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார். இது குறித்த மாவட்ட ஆட்சியர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீட் மறு தேர்விற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை, தீயணைப்பு துறை, போக்குவரத்து துறை, மின்சார வாரியம், சுகாதாரத்துறை, பள்ளி கல்வித்துறை, கல்லூரி கல்வித்துறை ஆகிய தொடர்பு துறைகளுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட&amp;nbsp; ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறைகளும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். மேலும் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மூலம் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/dc9e17a7de00d15c0563f25d75e67e721781947529921193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வில் கலந்து கொள்ளும் விண்ணப்பதாரர்கள் NTA-ஆல் நிர்ணயிக்கப்பட்டுள்ளவாறு தேர்வு நாளான 21.6.2026 அன்று காலை 11 மணிக்கு முன்னரே தேர்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்குள் ஆஜராகிட வேண்டும். உரிய நேரமான மதியம் 1.30 மணிக்கு பின்னர் வருகை தரும் தேர்வர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். தேர்வு எழுத வரும் தேர்வர்கள் தேர்வுக்கூடத்திற்குள் பேஜர், செல்போன், கால்குலேட்டர், Smart Watch, தகவல்கள் பதிவு செய்யும் மின் சாதனங்கள். குறிப்பேடு, புத்தகங்கள், உறைகள் மற்றும் கைப்பைகள் போன்றவை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/20/dc9e17a7de00d15c0563f25d75e67e721781947529921193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்: கைபேசி வைத்திருந்தால் பறிமுதல் – புதிய அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/tiruchendur-subramaniaswamy-temple-mobile-phones-to-be-confiscated-new-announcement-264349</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/tiruchendur-subramaniaswamy-temple-mobile-phones-to-be-confiscated-new-announcement-264349#respond</comments><pubDate>Fri, 19 Jun 2026 11:02:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/tiruchendur-subramaniaswamy-temple-mobile-phones-to-be-confiscated-new-announcement-264349</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் கைபேசி பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு, வரும் ஜூலை 1 முதல் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2022 நவம்பர் 14 முதல் கோவிலுக்குள் கைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/19/ab68d2f47b1d1123dbf24a141f5f9bfe1781847136148193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது அந்த உத்தரவை முழுமையாக செயல்படுத்தும் வகையில், பொதுத் தரிசன வரிசை, ரூ.100 விரைவு தரிசன வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பக்தர்கள் தங்களது கைபேசிகளை தங்கும் இடங்களிலோ அல்லது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு கோவிலுக்கு வருமாறு கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தின் பல இடங்களில் கைபேசி வைப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வசதிகளை பயன்படுத்தி கைபேசிகளை ஒப்படைத்து விட்டு தரிசனம் செய்யலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/19/a619058cf359e72a73a1731f2ec508731781847109842193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாதுகாப்பு பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அவசர தேவைகளுக்காக மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் சேவை, பொது அறிவிப்பு அமைப்பு, மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, ஜூலை 1 முதல் கோவிலுக்குள் கைபேசி இன்றி தரிசனம் செய்ய பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை கோவிலின் ஆன்மிக சூழலை பாதுகாப்பதற்கும், தரிசன ஒழுங்கை மேம்படுத்துவதற்கும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/19/a619058cf359e72a73a1731f2ec508731781847109842193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தெற்கு ரயில்வேயில் மதுரைக்கு மட்டும் 5 கேடயம்..  பரிசுகளை தட்டித் தூக்கிய மதுரை கோட்டம் !]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/southern-railway-madurai-division-railway-week-celebration-performance-operating-efficiency-tnn-263551</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/southern-railway-madurai-division-railway-week-celebration-performance-operating-efficiency-tnn-263551#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 21:50:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/southern-railway-madurai-division-railway-week-celebration-performance-operating-efficiency-tnn-263551</guid><description><![CDATA[&lt;p&gt;தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம் சாதனை: 5 கேடயங்கள் வென்று அசத்தல்!&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மதுரை கோட்டம் ஐந்து கேடயங்களை வென்றுள்ளது.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;2025&amp;ndash;26 ஆம் ஆண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் ஐந்து கேடயங்களை வென்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;71வது ரயில்வே வார விழா &amp;ldquo;விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் &amp;ndash; 2026&amp;rdquo; நிகழ்ச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சென்னையில் நடைபெற்ற 71வது ரயில்வே வார விழா &amp;ldquo;விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் &amp;ndash; 2026&amp;rdquo; நிகழ்ச்சியில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) ஓம்பிரகாஷ் மீனா மற்றும் கோட்ட அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் அவர்களிடமிருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் மற்றும் தலைமைத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5 விருதுகளையும் மதுரை கோட்டம் பெற்றுள்ளது.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை கோட்டம், சென்னை மற்றும் சேலம் கோட்டங்களுடன் இணைந்து செயல்பாட்டு திறன் (Operating Efficiency) கேடயத்தையும், திருச்சிராப்பள்ளி கோட்டத்துடன் இணைந்து இயந்திரவியல் திறன் (Mechanical Efficiency) கேடயத்தையும் வென்றது. மேலும், RailMadad சேவைக்கான இரண்டாம் இட கேடயம், சிறந்த ரயில்வே பள்ளிக்கான கேடயம் (மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி), மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட Running Room-க்கான கேடயம் (மதுரை) ஆகிய விருதுகளையும் மதுரை கோட்டம் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/042ac2b9f19d56a078ffa268d654b3b51781194745534184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூர் கோயில் செயல்பாடுகள் மீது கண்காணிப்பு! உயர்மட்ட அதிகாரிகள் குழு அமைப்பு.]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/oversight-of-thiruchendur-temple-operations-high-level-committee-of-officials-formed-262905</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/oversight-of-thiruchendur-temple-operations-high-level-committee-of-officials-formed-262905#respond</comments><pubDate>Sat, 6 Jun 2026 14:48:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/oversight-of-thiruchendur-temple-operations-high-level-committee-of-officials-formed-262905</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைமுறையில் உள்ள அன்னதானத் திட்டம், பக்தர்கள் தங்கும் விடுதி முன்பதிவு மற்றும் கோயில் நிர்வாகம் தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் அதிரடியாக உயர்மட்ட ஆய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/ffe75d4d95863cdc760f6e5fd28a4fca1780737481213193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்செந்தூர் திருக்கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் அன்னதானத் திட்டத்தின் தரம், அதன் செயல்பாடுகள், மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான விடுதிகளில் பக்தர்கள் தங்குவதற்காக செய்யப்படும் அறை முன்பதிவு நடைமுறைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளனவா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;மேலும், கோயில் நிர்வாகம் தொடர்பான ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் சீரமைக்கும் நோக்கில் இந்த ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆய்வுக் குழுவில் இந்து சமய அறநிலையத்துறையின் பல்வேறு நிலைகளில் உள்ள முக்கிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோ.ஜெயப்பிரியா, இணை ஆணையர் (சட்டம்), ஆணையர் அலுவலகம். கு.தங்கம், துணை ஆணையர்-3, ஆணையர் அலுவலகம். பா.பாஸ்கரன், உதவி ஆணையர்-6, ஆணையர் அலுவலகம். சி.கார்த்திகேயன், முதுநிலை கணக்கு அலுவலர், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், இராமேஸ்வரம்.மு.பகவதி, மேலாளர், இணை ஆணையர் அலுவலகம், தூத்துக்குடி. மாயக்கண்ணன், திட்டப்பொறியாளர், ஆணையர் அலுவலகம். இந்த ஆய்வுக்குழுவினர் திருக்கோயிலுக்குச் சென்றால், அவர்களுக்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும், வசதிகளையும் வழங்க வேண்டும் என்று திருச்செந்தூர் திருக்கோயில் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலருக்கு, அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/e2022ac513eedde0e0012f13cd75994b1780737444902193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வுப் பணிகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதில் நிர்வாகம் உறுதியாக உள்ளது. அறநிலையத்துறை அமைச்சர் கடந்த மே 29-ம் தேதி வழங்கிய ஆய்வுக்குறிப்பின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுக்குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டு, அது குறித்த விரிவான அறிக்கையை வரும் ஜூன் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் ஆய்வு மற்றும் குழு அமைப்பு, திருச்செந்தூர் திருக்கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதற்கும், பக்தர்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.&amp;nbsp; ஆய்வுக்குப் பிறகு எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் பக்தர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/06/e2022ac513eedde0e0012f13cd75994b1780737444902193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[விஜய் கட்சி நிர்வாகியின் விஸ்வரூப மோசடி - தூத்துக்குடியில் நிலத்தை அமுக்க பார்த்த தவெக பிரமுகர் மனைவியுடன் கம்பி எண்ணுகிறார்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-land-fraud-case-tvk-functionary-arrested-along-with-wife-tamil-news-262601</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-land-fraud-case-tvk-functionary-arrested-along-with-wife-tamil-news-262601#respond</comments><pubDate>Wed, 3 Jun 2026 17:59:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-land-fraud-case-tvk-functionary-arrested-along-with-wife-tamil-news-262601</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வங்கிக்கடனில் இருந்த நிலத்தை மீட்டுத் தருவதாக கூறி ரூ.72 லட்சம் பண மோசடி செய்த புகாரில், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தவெக நகரச் செயலாளர் &amp;nbsp;ராஜா மனைவியுடன் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏரல் பகுதியின் நகரச் செயலாளராக இருக்கிறார். இவர், தனக்கு சொந்தமான இடத்தை வங்கியில் வைத்து பணம் பெற்று இருக்கிறார். இதனிடையே, பணத்தை கட்டத்தவறியவர்களின் இடம் ஏலம் விடப்படும் என்று வங்கி சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஏரலில் ஜவுளிக்கடையில் பணிபுரியும் சாத்தான்குளத்தைச் சேர்ந்த &amp;nbsp;பாபு என்பவர், ரூ.72 லட்சம் பணத்தை வங்கியில் செலுத்தி ராஜாவின் இடத்தை மீட்க உதவியுள்ளார். அந்தப் பணத்திற்காக அந்த இடத்தை பாபுவிடம் விற்பனை செய்ததாக ராஜா சொன்னதாக கூறப்படுகிறது. இதன்பிறகு, நிலத்தை எழுதி கொடுக்கும்படி பாபு கூறியுள்ளார். ஆனால், ராஜா முறையாக பதில் அளிக்காமல் அங்கிருந்து தலைமறைவாகி இருக்கிறார். சுமார், ஒரு வருடமாக தலைமறைவாகி இருந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/h4XB-yPyMgs?si=-B0v0nr0vXlM4tmJ&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த உடன்,நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் ஊர் திரும்பிய ராஜா, ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சரவணன் உடன் &amp;nbsp;இணைந்து கட்சி பணி செய்து வந்துள்ளார். அதன்பிறகு, பாபு தனது பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, வாங்கிய பணத்தையும், நிலத்தையும் தம்மால் கொடுக்க முடியாது என்று ராஜா மறுத்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a title=&quot;இதையும் படிங்க: கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tiruvannamalai/tiruvannamalai-girivalam-women-threatened-and-robbed-tamil-news-262590&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படிங்க: கிரிவலம் செல்லும் பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய கொடூர கும்பல்; திருவண்ணாமலையில் பயங்கரம் - நடந்தது என்ன?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, நிலம் தொடர்பாக பாபு, ஏரல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரைத் தொடர்ந்து, ரூ.72 லட்சம் ரூபாய் நிலம் மோசடி சம்பவம் என்பதால், இந்த வழக்கு தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராஜா மற்றும் மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தவெக ஆட்சி அமைந்த உடன் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மிகவும் மோசமடைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டை வைத்து வருகிறது. மேலும், குற்றத்தில் ஈடுபட்டுவர்கள் சிலர் &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; உறுப்பினர்களாக இருந்ததால் அக்கட்சியின் மீது தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த விஷயத்தில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tata-tiago-ev-the-new-master-of-ev-cars-auto-news-262460&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/cae4db92fdbebc0e6a93bc5b3b21a36a1780489743778113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruchendur-temple-priests-caught-taking-rs-4000-bribe-from-minister-ramesh-tamil-news-261942</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruchendur-temple-priests-caught-taking-rs-4000-bribe-from-minister-ramesh-tamil-news-261942#respond</comments><pubDate>Fri, 29 May 2026 10:16:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruchendur-temple-priests-caught-taking-rs-4000-bribe-from-minister-ramesh-tamil-news-261942</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Minister Ramesh:&lt;/strong&gt; திருச்செந்தூரில் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அமைச்சரிடமே ரூ.4,000 லஞ்சம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்து சமய அறநிலைய அமைச்சராக ரமேஷ் பொறுப்பேற்றது முதலே, மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை என பல்வேறு வடிவங்களில் பக்தர்களிடமிருந்து பணம் பறிக்கப்படுவதாக நீண்ட காலமாக பல புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதையறிந்து பொதுமக்களில் ஒருவராக சாதாரண உடையணிந்து அமைச்சர் ரமேஷ் கோயிலுக்கு சென்றுள்ளார். உடன் அதிகாரிகள் யாரையும் அவர் அழைத்துச் செல்லாமல், உதவியாளர் உடன் மட்டும் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அமைச்சரை அடையாளம் தெரியாமல் அவரது உதவியாளரை அணுகிய அர்ச்சகரில் ஒருவர், நான்காயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தால் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அவருடன் தொடர்புடைய அனைவரையும் கூண்டோடு பிடிப்பதற்காக அமைச்சரும் ஜி-பே மூலம் பணத்தை செலுத்தி விரைவு தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது பணம் பெற்ற அர்ச்சகர் மற்றும் அவருடன் தொடர்புடைய அனைவரையும் கையுள் களவுமாக பிடித்துள்ளார். மேலும், கைப்பட மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கியுள்ளார். மேலும் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணையை முடுக்கி விடவும் அமைச்சர் உத்தரவிட்டுள்ளாராம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/which-company-is-the-oldest-manucturer-of-cars-details-in-pics-261940&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அதிகாரிகளிடமும் அமைச்சர் விசாரணை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அர்ச்சகர்களை தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் உள்ள நிர்வாக அலுவலகத்திலும் அமைச்சர் ரமேஷ் ஆய்வு மேற்கொண்டார். பின்பு அங்கு பணியாற்றி வரும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்தும் பணியிலும் ஈடுபட்டுள்ளாராம். இதற்காக கோயில் ஊழியர்கள் அனைவரையும் அங்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளாராம். இதன் மூலம் நீண்டகாலமாக பொதுமக்கள் முன்வைத்து வந்த குற்றச்சாட்டுகள் தற்போது நிரூபனமாகியுள்ளது. இத்தகைய பணம் பறிப்பு நடவடிக்கைகள் எதிர்காலத்தில் நிகழாமல் இருப்பதை தடுக்க, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/0xUOKMA9Edo?si=HvaN_QWpvx7U18xN&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பக்தர்களிடம் கட்டணக் கொள்ளை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சுவாமி தரிசனம், விஐபி சாமி தரிசனம் மற்றும் அர்ச்சனை என அனைத்து கோயில் நடைமுறைகளுக்கும் விதிகளை மீறி, அர்ச்சர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் பணம் பறிப்பில் ஈடுபடுவதாக பக்தர்கள் நீண்டகாலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே, வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் நலன் கருதி ரூ.100 கட்டண தரிசனம் முறையும் ரத்து செய்யப்பட்டு கட்டணமில்லா தரிசன முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Hardik Pandya: &amp;rdquo;நீ கிளிச்ச வரைக்கும் போதும்&amp;rdquo; சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை&quot; href=&quot;https://tamil.abplive.com/sports/cricket/ipl-2026-hardik-pandya-to-leave-mumbai-indians-rohit-sharma-s-blessings-crucial-for-next-captain-sources-261938&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: Hardik Pandya: &amp;rdquo;நீ கிளிச்ச வரைக்கும் போதும்&amp;rdquo; சொந்த காசில் சூனியம் - ஹர்திக்கிற்கு கும்புடு, ரோகித்தை நாடும் மும்பை&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;குற்றசாட்டுகள் மற்றும் அரசு அறிவிப்புகள் இருந்தும், அமைச்சரிடமே தற்போது பணம் வசூலிக்கப்பட்டு இருப்பது, கோயில் நிர்வாகம் எவ்வளவு சீட்கெட்டு போயுள்ளது என்பதை காட்டுகிறது. இதுதொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கை எடுத்து, பக்தர்களிடம் நடைபெறும் பணம் பறிப்பு நடவடிக்கையை ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/29/b4fa69499dcfc97f05250a45f9e8b5921780029915390732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[குடிநீர் தேவைக்கு போராடும் பழனி: அணைகளின் தற்போதைய நிலை என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/palani-struggles-for-drinking-water-what-is-the-current-status-of-the-dams-260192</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/palani-struggles-for-drinking-water-what-is-the-current-status-of-the-dams-260192#respond</comments><pubDate>Wed, 13 May 2026 19:56:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/palani-struggles-for-drinking-water-what-is-the-current-status-of-the-dams-260192</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் மற்றும் விவசாய தேவைகளை பூர்த்தி செய்து வரும் முக்கிய நீராதாரங்களான பாலாறு&amp;ndash;பொருந்தலாறு, வரதமாநதி, குதிரையாறு அணைகளில் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த சில வாரங்களாக நிலவி வரும் கடும் கோடை வெப்பம் மற்றும் மழையின்மை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுள்ள நிலையில், தற்போது உள்ள நீரையே சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/64d567fceffa06ba7b2fd7b5950809611778682323752193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் கவலை அதிகரித்துள்ளது. பழனி வட்டாரத்தின் மிகப்பெரிய நீராதாரங்களில் ஒன்றாக விளங்கும் பாலாறு&amp;ndash;பொருந்தலாறு அணையின் மொத்த கொள்ளளவு 65 அடியாகும். ஆனால் தற்போது அணையில் 35.5 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அணைக்கு கடந்த சில நாட்களாக புதிய நீர்வரத்து இல்லாத நிலையில், பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு வினாடிக்கு 16 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தினந்தோறும் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. அதேபோல் பழனி நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள வரதமாநதி அணையின் மொத்த கொள்ளளவு 66.47 அடியாகும். தற்போது இதில் 38.5 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாததுடன், வெளியேற்றமும் மேற்கொள்ளப்படாமல் அமைதியான நிலை காணப்படுகிறது. இருப்பினும் மழையின்மை நீடித்தால் இந்த அணையிலும் நீர்மட்டம் மேலும் குறையும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பழனி வட்டார விவசாய நிலங்களுக்கு முக்கிய ஆதாரமாக விளங்கும் குதிரையாறு அணையின் மொத்த கொள்ளளவு 80 அடியாக இருந்தாலும், தற்போது 47 அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இங்கும் புதிய நீர்வரத்து இல்லை. வெளியேற்றமும் மேற்கொள்ளப்படாததால், எதிர்கால நீர் தேவையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/d95e5c8c5815813b50ab1282478a4d921778682340973193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கமாக ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும். அந்த மழை போதுமான அளவில் பெய்தால் மட்டுமே இந்த அணைகளின் நீர்மட்டம் மீண்டும் உயர வாய்ப்பு உள்ளது. அதுவரை இருக்கும் நீரை திட்டமிட்டு பயன்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளின் நீர்மட்டத்தை தினசரி கண்காணித்து வருகின்றனர்.இதற்கிடையில், பல கிராமப்புற பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில பகுதிகளில் கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் கிணறுகளில் நீர் அளவு குறைந்து காணப்படுவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/acbed852d8997c5ff519c519aca886ac1778682362801193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோடை காலத்தில் குடிநீர் தேவை அதிகரிக்கும் நிலையில், அணைகளில் நீர் இருப்பு தொடர்ந்து குறைந்து வருவது எதிர்காலத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் பாசனத்திற்கு பெரும் சவாலாக மாறக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், தேவையற்ற நீர் வீணாவதை தவிர்க்க வேண்டும், விவசாயிகளும் குறைந்த நீரில் பயிரிடும் முறைகளை பின்பற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். வரவிருக்கும் பருவமழை மட்டுமே பழனி வட்டார மக்களின் நீர் தேவைக்கு நம்பிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/c8ea769ef560d5e4272d37b3ff6baae41778682260538193_original.JPG" width="220"/></item></channel></rss>