<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>thoothukudi</title><atom:link href="https://tamil.abplive.com/thoothukudi/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 05:12:00 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை: உண்மையை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி - கனிமொழி எம்.பி கடும் தாக்கு!]]></title><link>https://tamil.abplive.com/elections/sathankulam-father-son-murders-edappadi-palaniswami-attempted-to-cover-up-the-truth-kanimozhi-mp-launches-fierce-attack-257034</link><comments>https://tamil.abplive.com/elections/sathankulam-father-son-murders-edappadi-palaniswami-attempted-to-cover-up-the-truth-kanimozhi-mp-launches-fierce-attack-257034#respond</comments><pubDate>Tue, 21 Apr 2026 12:04:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/sathankulam-father-son-murders-edappadi-palaniswami-attempted-to-cover-up-the-truth-kanimozhi-mp-launches-fierce-attack-257034</guid><description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி : சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது, அந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி: சாத்தான்குளத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி பேச்சு.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜை ஆதரித்து, சாத்தான்குளம் காமராஜர் சிலை அருகில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;அப்போது பேசிய கனிமொழி கருணாநிதி எம்.பி.; சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் நிலையத்தில் அநியாயமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டபோது, அந்தச் சம்பவத்தை மூடிமறைக்க முயன்றவர் எடப்பாடி பழனிசாமி. நாம் அனைவரும் ஒன்றாக நின்று போராடினோம்.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தக் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் வழக்கு தொடர்வோம் என்று மு.க. ஸ்டாலின் கூறிய பிறகுதான், அந்த வழக்கை சிபிஐக்கு மாற்றினர். அதுவரை, யார்மீது குற்றச்சாட்டு இருந்ததோ அவர்களைப் பாதுகாத்தனர். இதேபோல், பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெற்றபோதும், எடப்பாடி பழனிசாமி அந்தக் குற்றவாளிகளை காப்பதற்காகத்தான் பாடுபட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டனர். அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டபோது, &amp;ldquo;எனக்கு தெரியாது; தொலைக்காட்சியைப் பார்த்துதான் தெரிந்துகொண்டேன்&amp;rdquo; என்று பதில் அளித்தார். எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருந்தும், இதுதான் பதிலாக வந்தது. இப்படிப்பட்ட ஒருவர் தமக்கு எதிராக இருக்கக்கூடியவர்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/21/19f6e0cdfb67ea86d5867592ef421b3f1776753227943194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூரே மாறப்போகுது... வந்தே பாரத் ரயில்.. பக்தர்களுக்கு இதுவரை கிடைக்காத வசதிகள்.. கேஆர்எம்- ன் தேர்தல் வாக்குறுதிகள்]]></title><link>https://tamil.abplive.com/elections/tn-election-tiruchendur-bjp-candidate-krm-radhakrishnan-released-his-election-manifesto-255902</link><comments>https://tamil.abplive.com/elections/tn-election-tiruchendur-bjp-candidate-krm-radhakrishnan-released-his-election-manifesto-255902#respond</comments><pubDate>Thu, 9 Apr 2026 12:56:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tn-election-tiruchendur-bjp-candidate-krm-radhakrishnan-released-his-election-manifesto-255902</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் கேஆர்எம் ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அந்த தொகுதி மக்களுக்கான பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;திருச்செந்தூர் தொகுதி பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தேர்தல் அறிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூரிலிருந்து காயல்பட்டிணம், ஆறுமுகநேரி, தலைவன்வடலி, புன்னக்காயல், முத்தையாபுரம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய இரயில் போக்குவரத்து அமைத்து தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்செந்தூர் முதல் சென்னைக்கு தினந்தோறும் வந்தே பாரத் இரயில் சேவையும், இரயில்வே மேம்பாலமும் கொண்டு வருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதியில் டாக்டர். அம்பேத்கர் சட்டக்கல்லூரி மற்றும் அரசு தொழில் நுட்பக்கல்லூரி, இலவச IAS, IPS, TNPSC அகடாமி அமைத்து தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதிக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகளும் தரம் உயர்த்தப்பட்டு மத்திய அரசின் நவோதயா பள்ளியை நிறுவி அதில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூர் முருகன் கோவில் வழிப்பாதையை சீரமைத்து நவீன பாதாள சாக்கடைத் திட்டத்தை மேம்படுத்தி, வருகை தரும் பக்தர்களுக்கு அதிக தங்கும் விடுதிகளை உருவாக்கி 24 மணி நேர குடிநீர் சேவையை பெற்றுத் தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/09/625082413123e9ab9069d0bbbd305e971775718998847113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூர் நகரில் அதிக படுக்கை வசதிகள் கொண்ட, 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரிகின்ற அளவில் நவீன Multi-Speaciality Upgrade W அமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* நிலம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு 3 சென்ட் நிலமும், பட்டா இல்லாத இடத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச பட்டா மற்றும் வீடுகள் கட்டித்தர உடனடி நடவடிக்கை எடுப்பேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதிக்குட்பட்ட மெஞ்ஞானபுரம், உடன்குடி, பரமன்குறிச்சி, நாசரேத், தென்திருப்பேரை, குரும்பூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய நகரங்களுக்கு 24 மணி நேர மொபைல் ஆம்புலன்ஸ் சேவை செய்து தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதி முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குடிநீர் இணைப்பு வழங்கி, அதில் தினந்தோறும் சுகாதாரமான குடிநீர் வழங்குவேன். ஒவ்வொரு வீட்டின் மின் இணைப்புடன் மத்திய அரசு திட்டத்தின் மானிய சூரிய ஒளி இணைப்பு ஏற்படுத்தி மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருச்செந்தூர் தொகுதிக்குட்பட்ட பொதுமக்கள் விரைவு தரிசனம் செய்யவும், கோவில் வளாகத்தில் திருமணம் செய்யவும் MLA Pass வழங்குவேன். நவீன கார் பார்க்கிங் வசதி செய்து தருவேன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தொகுதிகுட்பட்ட முக்கிய பேருந்து நிறுத்தங்களில் குளிர்சாதன வசதி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்டுகள் கட்டித் தருவேன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/achar-side-effects-disadvantages-eating-pickles-in-summer-health-know-in-tamil-255886&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/12/17b37fbbec3c859de3f5c009b6271e26_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடியில் வேட்புமனுக்கள் ஆய்வு: அதிக தள்ளுபடி நடந்த தொகுதி எது?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/scrutiny-of-nominations-in-thoothukudi-which-constituency-saw-the-highest-number-of-rejections-255852</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/scrutiny-of-nominations-in-thoothukudi-which-constituency-saw-the-highest-number-of-rejections-255852#respond</comments><pubDate>Wed, 8 Apr 2026 20:59:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/scrutiny-of-nominations-in-thoothukudi-which-constituency-saw-the-highest-number-of-rejections-255852</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான கூர்ந்தாய்வு (பரிசீலனை) நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் மொத்தம் பெறப்பட்ட 188 மனுக்களில் 121 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/08/1f202e137b0c7d7c813c951ba44b0d631775662108584193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்டம் முழுவதும் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. நேற்று அந்தந்தத் தொகுதி தலைநகரங்களில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 33 வேட்பு மனுக்களில் 27 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 35 வேட்பு மனுக்களில் 14 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 21 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 18 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 28 வேட்பு மனுக்களில் 21 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 7 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 36 வேட்பு மனுக்களில் 23 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 13 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தூத்துக்குடி மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட மொத்த வேட்பு மனுக்கள் 188-ல் 121 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 67 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/08/fddf239286af7069c68c2a4a9faa74fb1775661891444193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு தற்போது 121 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். தங்களது வேட்புமனுக்களைத் திரும்பப் பெற விரும்பும் வேட்பாளர்கள், நாளை வியாழக்கிழமை அலுவலக நேரத்திற்குள் தங்களது மனுக்களை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை மாலை வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு முடிந்தவுடன், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் அவர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு குறித்த விபரங்களைத் தேர்தல் ஆணையம் வெளியிடும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/08/fddf239286af7069c68c2a4a9faa74fb1775661891444193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு: ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 பேருக்கு இன்று தண்டனை? எதிர்பார்ப்பில் நீதிமன்றம்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/sathankulam-father-son-murder-case-judge-muthukumar-sentencing-announcement-today-tnn-255532</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/sathankulam-father-son-murder-case-judge-muthukumar-sentencing-announcement-today-tnn-255532#respond</comments><pubDate>Mon, 6 Apr 2026 09:58:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/sathankulam-father-son-murder-case-judge-muthukumar-sentencing-announcement-today-tnn-255532</guid><description><![CDATA[&lt;p&gt;சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9 பேருக்கு இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறார் நீதிபதி முத்துகுமரன்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வணிகர்களான&amp;nbsp; தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கடந்த 2020 ஜூன் 19 ல் காவல்துறை விசாரணைக்காக அழைத்து சென்ற சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த வழக்கு கொலை வழக்காக சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்களான முருகன், சாமத்துரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் 5 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக தீர்ப்பு வாசிப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த கொலை வழக்கில் 9 காவலர்களும் குற்றவாளிகளாக கருதப்படுவதாக கடந்த 23 ஆம் தேதி மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் தீர்ப்பு வாசித்தார். குற்றவாளிகளான 9 பேருக்கும் தண்டனை அளிப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன. இந்நிலையில் இன்று காலை ஐந்தரை ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்த சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துகுமரன் அறிவிக்கவுள்ளார். சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவுள்ள நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த வழக்கு விசாரணையின் போது 9 பேருக்கும் உச்சபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை அல்லது சாகும்வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பிலும், ஜெயராஜ் குடும்பத்தினர் தரப்பில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் நீதிபதியிடம் முறையிட்டதும், குற்றவாளிகளில் தரப்பில் முறையிட்டபோது திட்டமிட்டு உயிரிழப்பு ஏற்படவில்லை எனவே குறைந்தபட்ச தண்டனை அளிக்க வேண்டும் என முறையிட்டிருந்தனர். இந்நிலையில் 9 பேருக்கு இன்று தண்டனை விவரங்களை அறிவிக்கிறார் நீதிபதி முத்துகுமரன்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/06/c4cdcf8ff8decfc70776608521841f5a1775449689283184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[TVK Srinath: விஜய் ஏன் தூத்துக்குடியில் போட்டியிட சொன்னார்? - அஜிதாவுடன் மோதலா? - ஸ்ரீநாத் பரபர பேட்டி]]></title><link>https://tamil.abplive.com/elections/tn-election-2026-tvk-ajitha-vs-srinath-why-vijay-asked-srinath-to-contest-thoothukudi-255198</link><comments>https://tamil.abplive.com/elections/tn-election-2026-tvk-ajitha-vs-srinath-why-vijay-asked-srinath-to-contest-thoothukudi-255198#respond</comments><pubDate>Thu, 2 Apr 2026 14:19:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tn-election-2026-tvk-ajitha-vs-srinath-why-vijay-asked-srinath-to-contest-thoothukudi-255198</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரும், நடிகருமான ஸ்ரீநாத், மதுரை விமான நிலையம் வழியாக தூத்துக்குடிக்கு வருகை தந்தார். வழியெங்கும் அவருக்குத் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். தொடர்ந்து புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்&lt;/p&gt;
&lt;h2&gt;மண்ணின் மைந்தன் நான்!&lt;/h2&gt;
&lt;p&gt;தூத்துக்குடி தொகுதியில் தனது வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருப்பதாகத் தெரிவித்த ஸ்ரீநாத், தன்னை 'வெளியூர் வேட்பாளர்' என்று விமர்சிப்பவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தார். &quot;நான் இந்த மண்ணின் மைந்தன். நான் பிறந்த மருத்துவமனைக்குத்தான் இப்போது நேராகச் செல்கிறேன். எனது மனைவியும், மகளும் இதே ஊரைச் சேர்ந்தவர்கள். எனவே, என்னை வெளியூர் காரன் என்று கூறுவதை ஏற்க முடியாது,&quot; மேலும் அரசியலுக்காக என்னை வெளியூர் வேட்பாளர் என்று கூறுவார்கள் ஆனால் கனிமொழி எங்கே இருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்&lt;/p&gt;
&lt;h2&gt;தளபதி விஜய் மீது நம்பிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தென் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து விரைவில் தூத்துக்குடிக்கு வந்து பிரச்சாரம் செய்வார் என உறுதியளித்த ஸ்ரீநாத், &quot;எங்கள் தலைவர் தளபதி விஜய் மீது எனக்குத் தனிப்பட்ட அன்பும், மரியாதையும் உண்டு. அவர் செய்ய வேண்டிய கடமையைச் செய்வார். இதுவரை இருந்த அரசியல் தலைவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனர், ஆனால் எங்கள் தளபதி சொன்னதைச் செய்து காட்டுவார்,&quot; என்று குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;h2&gt;'தீய சக்திகளை விரட்டுவோம்'&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டங்களில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் என்ற போர்வையில் ஊடுருவி சிலர் அராஜகத்தில் ஈடுபடுவதை ஸ்ரீநாத் கடுமையாகக் கண்டித்தார். இது குறித்து அவர் பேசுகையில்:&quot;தவெக ஆதரவாளர்கள் என்ற பெயரில் வந்து அராஜகத்தில் ஈடுபடும் செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு காவல்துறை உரிய பதிலடி கொடுக்க வேண்டும். இதிலிருந்தே தெரிகிறது யார் அந்தத் 'தீய சக்தி' என்பது. எங்கள் தலைவர் ஏன் அந்தத் தீய சக்தியை விரட்ட வேண்டும் என்று கூறுகிறார் என்பது இப்போது புரியும். நாம் அனைவரும் 'தூய சக்தி', அந்தத் தீய சக்தியை நிச்சயம் விரட்டுவோம்.&quot;&lt;/p&gt;
&lt;h2&gt;அஜிதா குறித்து சொன்னது என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;அஜிதா ஆக்னல் விவகாரம் குறித்து பேசிய அவர், இது முற்றிலும் தனிப்பட்ட விஷயம், இது குறித்து தங்கையிடம் தான் கேட்க வேண்டும் எனப் பதிலளிக்காமல் தவிர்த்தார். மேலும் தளபதி விஜய் ஏற்கனவே கூறிவிட்டார், இது ஏ டீம் அல்லது பி டீம் கிடையாது, இது மக்களின் டீம் என்று ஸ்ரீநாத் தெளிவுபடுத்தினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&quot;முன்பு அமைச்சர்களாக இருந்தவர்கள் சாதாரண மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான், ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்து பாருங்கள், மாற்றம் என்னவென்று காட்டுகிறோம்,&quot; என்று சவால் விடுத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;18 வயது முதல் 80 வயது வரை உள்ள அனைத்துத் தரப்பு மக்களும் தளபதி &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் பக்கம் இருப்பதாகவும், அவர் ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்றும் நம்பிக்கையுடன் கூறினார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/1a96c8ae87322768b227c0d5dc766c5317751196875641131_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மாற்றம் நிச்சயம்.. தூத்துக்குடியில் ஸ்ரீநாத்: தலைவர் மீதான நம்பிக்கையும், மக்களின் எதிர்பார்ப்பும்!]]></title><link>https://tamil.abplive.com/elections/actor-srinath-talks-about-thalapathy-vijay-s-thamilaga-vetri-kazhagam-thuthukudi-election-tnn-255113</link><comments>https://tamil.abplive.com/elections/actor-srinath-talks-about-thalapathy-vijay-s-thamilaga-vetri-kazhagam-thuthukudi-election-tnn-255113#respond</comments><pubDate>Wed, 1 Apr 2026 17:27:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/actor-srinath-talks-about-thalapathy-vijay-s-thamilaga-vetri-kazhagam-thuthukudi-election-tnn-255113</guid><description><![CDATA[&lt;p&gt;மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை. அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். -மதுரை விமான நிலையத்தில் ஸ்ரீநாத் பேட்டி.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மதுரையில் நடிகர் ஸ்ரீநாத்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் போட்டியிடப் போகும் நடிகர் ஸ்ரீநாத் அவர்கள் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தொகுதிக்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு மதுரை மாநகரத்தில் தவெக சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர் சந்தித்து அவர் கூறுகையில்...,&amp;rdquo;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முதல் முறையா தேர்தல்ல களம் இறங்குறீங்க, தூத்துக்குடியை தேர்ந்தெடுக்க காரணம் என்ன எந்த அடிப்படையில உங்களை அங்க நிறுத்தினாங்க குறித்த கேள்விக்கு:&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இது கழகம் முடிவு பண்ண ஒரு விஷயம், தலைவர் முடிவு பண்ண ஒரு விஷயம். ஏன்னா ஓவ்வொரு வேட்பாளரும் எங்கு போட்டியிட வேண்டும், என்று நம்மளுடைய விருப்பம் என்னவா இருந்தாலும், கழகத்தினுடைய விருப்பத்துக்கு தகுந்த மாதிரி செயல்படுறதுதானே அடிப்படை தொண்டன்ல இருந்து பொறுப்புல இருக்கிற நம்மளுடைய கடமை.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு சார்? தூத்துக்குடி மற்றும் தமிழகம் முழுவதும் எப்படி இருக்குன்னு குறித்த கேள்விக்கு&lt;/strong&gt;:&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழகம் முழுவதும் கண்டிப்பா ஒரு மாற்றத்தை எல்லாருமே... அந்த மாற்றத்துக்காக வெயிட் பண்றாங்க. ஒரு மாற்றம் நிகழும் அப்படின்னு கண்டிப்பா நம்புறாங்க தூத்துக்குடியிலயும் அந்த மாற்றம் ஏற்படும் அப்படின்றத ஆணித்தரமா நான் நம்புறேன்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஏற்கனவே முன்னாள் அமைச்சர் இருக்காங்க அதிமுக-ல, இப்ப திமுக-லயும் அமைச்சர் இருக்காங்க. அதனால உங்களுக்கு போட்டி எந்த மாதிரி இருக்கும்னு நினைக்கிறீங்க&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கடுமையா இருக்கும், ரொம்ப... என்ன சொல்றது..விறுவிறுப்பாக இருக்கும் நாங்க ரொம்ப ரொம்ப உறுதிய இருக்கோம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அறிமுகக் கூட்டத்துல முத்தம் கொடுத்து அனுப்பி வச்சாரு (&lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;), ஏதாவது பர்சனலா அட்வைஸ் சொல்லி அனுப்பி வச்சார?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வெற்றியோட வா நண்பா&quot; அப்படின்றத மட்டும் சொன்னாரு.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தூத்துக்குடியில 'தவெக'-க்கு மக்கள் ஏன் ஓட்டு அளிக்கணும் என்ன காரணமா இருக்கும்னு எதிர்பார்க்கிறீங்க மக்கள் என்ன விரும்புறாங்க&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மாற்றத்துக்காக எங்க தலைவர் மேல வச்சிருக்க நம்பிக்கை... அந்த ஒரு முகம், அந்த முகம் கண்டிப்பா பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த தமிழ்நாட்டுல அப்படின்றது தான் எங்களோட நம்பிக்கை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மக்களுக்கு என்ன வாக்குறுதிகள் கொடுக்குறீங்க&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பெருசா வாக்குறுதி இது வரைக்கும் இருந்தவங்க செய்யாத விஷயங்கள், பண்ணாத விஷயங்களை நாங்க செய்வோம். எங்க தலைவர் செய்வாரு. புதுசா வாக்குறுதியைத் தாண்டி, அது என்னென்ன நாங்க செய்யணும்னு நாங்க எல்லாம் ஒரு பட்டியலே வச்சிருக்கோம். எங்களுடைய அடிப்படை நோக்கம் என்ன அப்படின்னா, இதுவரைக்கும் இருந்தவர்கள் செய்யாத விஷயத்தை, தவறவிட்ட விஷயத்தை நாங்க செய்வோம்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;இப்ப முதல்வர் சகோதரி (கனிமொழி) அங்க இருக்காங்க, திமுக-வோட அலை அங்க அதிகமா இருக்கு. நீங்க இந்த போட்டியை எப்படி முன்னெடுக்கப் போறீங்க?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கடுமையா இருக்கும், ஆரோக்கியமாக இருக்கும். நாங்க ரெடி, எதையும் சந்திக்கிறதுக்கு தயாராக இருக்கோம். அந்த நோக்கத்தோடு தானே தலைவர் களம் இறங்கியிருக்கிறார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;உங்கள் தலைவர் பிரசாரம் பண்ற இடத்துக்கு அனுமதி மறுக்கப்படுது, தொடர்ந்து பிரச்னைகள் வந்துகிட்டே இருக்கு. நேத்து கூட ஒரு கூட்டத்துல பெண்கள் மேல பாட்டில் எறிஞ்சு ஒரு பிரச்னை வந்தது. இதை எப்படி பேஸ் பண்ண ரெடியா இருக்கீங்க?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதை ரொம்ப நாகரிகமா நாங்க பேஸ் பண்றோம். அநாகரிகமா அவங்க நடந்துக்கிறாங்க அப்படின்னா, எங்க கழகமும் எங்க தலைவரும் இதை ரொம்ப ஒரு நாகரிகமா பேஸ் பண்ணுவாரு. அப்படித்தான் எங்களை ட்ரெய்ன் பண்ணிருக்காரு. அதுதான் எங்களுடைய இயல்பான ஒரு மூவ்மென்ட் ஆகவும் இருக்கும்&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறாங்களா?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அது அவங்களோட கடமை, அதை செய்யணும் அவங்க. ஒவ்வொரு இடங்கள்ல செய்றாங்க அப்படின்னு நாங்க நம்புறோம். எங்கேயாவது கொஞ்சம் அதுல சில பிசிறுகள் எல்லாம் இருந்ததுன்னா அதை சரி செய்யணும். அரசாங்கம் தான் சரி செய்யணும். உங்கள மாதிரி ஆட்கள் அது எங்க தவறுகள் நடக்குதோ, ஊடக நண்பர்கள் அதை வெளிச்சத்துக்கு கொண்டு வரணும், அதை எடுத்து மக்களுக்கு தெரிவிக்கணும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தென் மாவட்டங்கள்ல அடிக்கடி சாதி மோதல் போன்ற சம்பவங்கள் நடக்குது. அதைத் தடுக்க தவெக கிட்ட ஏதாவது புதிய திட்டங்கள் இருக்கா?&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எல்லாமே இருக்குது, ஒரு பட்டியலே இருக்கு. அது ஸ்லோவா ஒவ்வொன்னா நாங்க டிஸ்க்ளோஸ் (Disclose) பண்றோம் என்றார்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/01/d5092637b4fd57b6882f84c811ece65d1775044622584184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: முனீஸ்வரனுக்கு எதிரான மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது !]]></title><link>https://tamil.abplive.com/crime/madurai-vilathikulam-student-murder-case-parents-seek-inclusion-in-elderly-woman-murder-case-tnn-255038</link><comments>https://tamil.abplive.com/crime/madurai-vilathikulam-student-murder-case-parents-seek-inclusion-in-elderly-woman-murder-case-tnn-255038#respond</comments><pubDate>Tue, 31 Mar 2026 23:19:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/madurai-vilathikulam-student-murder-case-parents-seek-inclusion-in-elderly-woman-murder-case-tnn-255038</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முனீஸ்வரன் தொடர்பான மூதாட்டி கொலை வழக்கில் தங்களையும் சேர்க்க கோரி விளாத்திகுளம் மாணவியின் பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத்தாக்கல் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தூத்துக்குடியைச் சேர்ந்த குடும்பத்தினர் உயர்நீதிமன்ற மதுரை மனுவினைத் தாக்கல் செய்துள்ளனர். அதில், &quot;விளாத்திகுளம் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட 12 ஆம் வகுப்பு சிறுமி எனது மகள். பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த எங்கள் வீட்டில் தனி கழிப்பறையை அமைத்துக் கொள்ளும் வசதி இல்லை உயிரிழந்த எனது நன்கு படிப்பவர். 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த சூழலில் கடந்த 10ஆம் தேதி மாலை 6 மணி அளவில் அருகில் உள்ள சீமை கருவேல தோப்பிற்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக சென்றிருந்தார். அவர் வீடு திரும்பாததால் முதலில் குளத்தூர் காவல் நிலையத்தை அணுகினோம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அவர்கள் எங்களை மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசியதுடன், குழந்தையை கண்டிபிடிக்க நடவடிக்கையை எடுக்காமல், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு செல்லுமாறு திருப்பி அனுப்பினர். விளாத்திகுளம் காவல் நிலையத்திலும் வழக்கை பதிவு செய்யாமல் மீண்டும் குளத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பினார்கள். இதற்கிடையே எங்கள் உறவினர்கள் எனது மகளை இறந்த நிலையில் கண்டுபிடித்தனர். அவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். பிறர் இது தொடர்பாக தர்மமுனீஸ்வரன் என்பவனை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே மூதாட்டி&amp;nbsp; பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கடந்த ஆண்டு நிறுத்தி வைத்ததோடு, ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவின் அடிப்படையில் வெளியே இருந்த போது தான் எங்களது மகளை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். ஆகவே, மூதாட்டி கொலை வழக்கிலும் எங்களை எதிர் மனுதாரராக இணைத்தும், முனீஸ்வரனுக்கு வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்கி உத்தரவை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும்&quot; என கூறியுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/01/a31ffc2c13ddaddc40f5f62aba977dbb_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தவெக வேட்பாளாராக  விஜயின் கல்லூரி நண்பர் ஶ்ரீநாத்..எந்த தொகுதியில் நிற்கிறார் தெரியுமா]]></title><link>https://tamil.abplive.com/elections/tvk-candidate-list-vijay-college-friend-srinath-to-contenst-in-tuticorin-constituency-254776</link><comments>https://tamil.abplive.com/elections/tvk-candidate-list-vijay-college-friend-srinath-to-contenst-in-tuticorin-constituency-254776#respond</comments><pubDate>Sun, 29 Mar 2026 12:57:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tvk-candidate-list-vijay-college-friend-srinath-to-contenst-in-tuticorin-constituency-254776</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக கட்சி சார்பாக போட்டியிட இருக்கும் வேட்பாளர்கள் பட்டியலை விஜய் இன்று வெளியிட்டார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட இருக்கிறார். இந்த வேட்பாளர் பட்டியலில் விஜயின் நண்பர் மற்றும் நடிகரான ஶ்ரீநாத் பெயரும் இடம்பெற்றுள்ளது&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விஜயின் கல்லூரி&amp;nbsp; கால நண்பர்களில் ஒருவர் ஶ்ரீநாத் . &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; திரைக்கு அறிமுகமான நாளையத் தீர்ப்பு படத்தில் விஜயின் நண்பராக நடித்தது முதல் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படம் வரை அவருடன்&amp;nbsp; பயனித்துள்ளார். தற்போது விஜயின் அரசியல் பயணத்திலும் ஶ்ரீநாத் ஒரு அங்கமாக இடம்பெற்றுள்ளார். தூத்துக்குடி தொகுதியில் ஶ்ரீநாத் தவெக சார்பாக போட்டியிட இருக்கிறார். விஜய் அரசியல் கட்சித் தொடங்கியது முதல் தூத்துகுடியில் தவெக சார்பாக பரப்புரைகளில் ஶ்ரீநாத் கலந்துகொண்டு வந்தார். தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பாக சமூக நலத்துறை அமைச்சர் பி கீதா ஜீவன் போட்டியிட இருக்கிறார். அதிமுக சார்பாக எஸ்.டி செல்லப்பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;தவெக வேட்பாளர்களின் முழு பட்டியல்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆற்காடு - விஜய் மோகன்&lt;br /&gt;ஆத்தூர் - செல்வபாரதி&lt;br /&gt;ஆத்தூர் - கலைச்செல்வி&lt;br /&gt;ஆலந்தூர் - ஹரிஷ்&lt;br /&gt;ஆலங்குடி - துரை கந்தசாமி&lt;br /&gt;ஆலங்குளம் - விபின் சக்ரவர்த்தி&lt;br /&gt;ஆவடி - ஆர். ரமேஷ் குமார்&lt;br /&gt;ஆம்பூர் - இம்தியாஸ்&lt;br /&gt;ஆரணி - வெங்கடேசன் குமார்&lt;br /&gt;ஆர்.கே. நகர் - மரிய வில்சன்&lt;br /&gt;அண்ணா நகர் - ராம்குமார்&lt;br /&gt;அம்பத்தூர் - ஜி. பாலமுருகன்&lt;br /&gt;அம்பாசமுத்திரம் - ராஜகோபால்&lt;br /&gt;அரக்கோணம் - காந்திராஜ்&lt;br /&gt;அரவக்குறிச்சி - கார்த்திகேயன்&lt;br /&gt;அரியலூர் - சிவக்குமார்&lt;br /&gt;அரூர் - ராகேஷ்&lt;br /&gt;அறந்தாங்கி - முகமது பர்வேஷ்&lt;br /&gt;அயிரம் விளக்கு - ஜே.சி.டி. பிரபாகர்&lt;br /&gt;அவிநாசி - கமலி&lt;/p&gt;
&lt;p&gt;இடப்பாடி - அருண்குமார்&lt;br /&gt;ஈரோடு கிழக்கு - என். விஜய் பாலாஜி&lt;br /&gt;ஈரோடு மேற்கு - ஆனந்த் மோகன்&lt;/p&gt;
&lt;p&gt;உடுமலைப்பேட்டை - சங்கர்&lt;br /&gt;உத்திரமேரூர் - முனிரத்தினம்&lt;br /&gt;உளுந்தூர்பேட்டை - சுதாகர்&lt;br /&gt;உசிலம்பட்டி - விஜய் மகாலிங்கம்&lt;/p&gt;
&lt;p&gt;ஊத்தங்கரை - குமரவேல்&lt;/p&gt;
&lt;p&gt;எடப்பாடி - அருண்குமார்&lt;br /&gt;எழும்பூர் - ராஜ்மோகனன்&lt;/p&gt;
&lt;p&gt;ஏற்காடு - லட்சுமி&lt;/p&gt;
&lt;p&gt;ஓமலூர் - அதியமான்&lt;br /&gt;ஓட்டபிடாரம் - மதன் ராஜா&lt;br /&gt;ஒட்டன்சத்திரம் - மோகன்&lt;/p&gt;
&lt;p&gt;கடையநல்லூர் - அப்துல் ஜலீல்&lt;br /&gt;கடலூர் - ராஜ்குமார்&lt;br /&gt;கண்ணியாகுமரி - மாதவன்&lt;br /&gt;கந்தர்வக்கோட்டை - சுப்ரமணியன்&lt;br /&gt;கம்பம் - ஜெகன்நாத் மிஸ்ரா&lt;br /&gt;கரூர் - மதியழகன்&lt;br /&gt;கலசப்பாக்கம் - ஏழுமலை&lt;br /&gt;கள்ளக்குறிச்சி - அருள் விக்னேஷ்&lt;br /&gt;காங்கேயம் - மணி&lt;br /&gt;காஞ்சிபுரம் - ரஞ்சித் குமார்&lt;br /&gt;காரைக்குடி - டி.கே. பிரபு&lt;br /&gt;கிணத்துக்கடவு - விக்னேஷ்&lt;br /&gt;கீழ்வேளூர் - செந்தில் பாண்டியன்&lt;br /&gt;கீழ் பெண்ணத்தூர் - ராஜா&lt;br /&gt;குமாரபாளையம் - விஜயலட்சுமி&lt;br /&gt;கும்மிடிப்பூண்டி - எஸ். விஜயகுமார்&lt;br /&gt;குடியாத்தம் - சிந்து&lt;br /&gt;குன்னம் - ரேவதி&lt;br /&gt;குன்னூர் - தங்கராஜு&lt;br /&gt;கூடலூர் - தீபக் சாய் கிஷோர்&lt;br /&gt;குறிஞ்சிப்பாடி - ராஜ்குமார்&lt;br /&gt;கெங்கவள்ளி - சுஜாதா&lt;br /&gt;கே.வி. குப்பம் - தென்றல் குமார்&lt;/p&gt;
&lt;p&gt;கோவை வடக்கு - சம்பத்குமார்&lt;br /&gt;கோவை தெற்கு - செந்தில் குமார்&lt;br /&gt;கோபிசெட்டிபாளையம் - கே.ஏ. செங்கோட்டையன்&lt;br /&gt;கோவில்பட்டி - பாலசுப்ரமணியன்&lt;/p&gt;
&lt;p&gt;சங்ககிரி - செந்தில்குமார்&lt;br /&gt;சங்கரன் கோவில் - ராமராஜன்&lt;br /&gt;சங்கராபுரம் - ஜெகதீஷன்&lt;br /&gt;சாத்தூர் - அஜித்&lt;br /&gt;சேலம் மேற்கு - லட்சுமணன்&lt;br /&gt;சேலம் வடக்கு - சிவக்குமார்&lt;br /&gt;சேலம் தெற்கு - விஜய் தமிழன் பார்த்திபன்&lt;br /&gt;சேப்பாக்கம் - டி. செல்வா&lt;br /&gt;சோழிங்கநல்லூர் - சரவண மூர்த்தி&lt;br /&gt;சோளிங்கர் - கபில்&lt;br /&gt;சோழவந்தான் - கருப்பையா&lt;/p&gt;
&lt;p&gt;தஞ்சாவூர் - விஜய் சரவணன்&lt;br /&gt;தருமபுரி - சிவன்&lt;br /&gt;தாராபுரம் - கௌரி சித்ரா&lt;br /&gt;தாம்பரம் - சரத்குமார்&lt;br /&gt;திட்டக்குடி - ஏ. ராஜசேகர்&lt;br /&gt;திண்டுக்கல் - நஜீர் ராஜா&lt;br /&gt;திருச்சி மேற்கு - ராமமூர்த்தி&lt;br /&gt;திருச்செங்கோடு - அருண்ராஜ்&lt;br /&gt;திருச்செந்தூர் - முருகன்&lt;br /&gt;திருச்சுசி - சமயன்&lt;br /&gt;திருப்பத்தூர் - திருப்பதி&lt;br /&gt;திருப்பத்தூர் - ஸ்ரீனிவாச சேதுபதி&lt;br /&gt;திருப்பரங்குன்றம் - சி.டி.ஆர். நிர்மல் குமார்&lt;br /&gt;திருப்பூர் வடக்கு - சத்யபாமா&lt;br /&gt;திருப்பூர் தெற்கு - பாலமுருகன்&lt;br /&gt;திருப்போரூர் - விஜயராஜ்&lt;br /&gt;திருவண்ணாமலை - அருள் ஆறுமுகம்&lt;br /&gt;திருவள்ளூர் - டி. அருண்குமார்&lt;br /&gt;திருவாடனை - ராஜீவ்&lt;br /&gt;திருவாரூர் - வீரமணி&lt;br /&gt;திருவிடைமருதூர் - பிரபாகரன்&lt;br /&gt;திருவொற்றியூர் - என். செந்தில்குமார்&lt;br /&gt;திருவெறும்பூர் - நவல்பட்டு விஜி&lt;br /&gt;திருவைகுண்டம் - சரவணன்&lt;br /&gt;திருத்தணி - சத்தியகுமார்&lt;br /&gt;திருத்துறைப்பூண்டி - பாண்டியன்&lt;br /&gt;திருக்கோவிலூர் - விஜய் பரணிபாலாஜி&lt;br /&gt;திருநெல்வேலி - ஆர்.எஸ். முருகன்&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி - ஸ்ரீநாத்&lt;/p&gt;
&lt;p&gt;நாகப்பட்டினம் - சுகுமார்&lt;br /&gt;நாகர்கோவில் - பிரவீன் கிங்ஸ்&lt;br /&gt;நாமக்கல் - திலீப்&lt;br /&gt;நத்தம் - ரமேஷ்&lt;br /&gt;நன்னிலம் - பிரபாகர்&lt;br /&gt;நெய்வேலி - ஆனந்த்&lt;/p&gt;
&lt;p&gt;பட்டுக்கோட்டை - மதன்&lt;br /&gt;பரமக்குடி - கோபிநாதன்&lt;br /&gt;பரமத்திவேலூர் - நந்தகுமார்&lt;br /&gt;பர்கூர் - முரளிதரன்&lt;br /&gt;பல்லாவரம் - காமாட்சி&lt;br /&gt;பல்லடம் - ராம்குமார்&lt;br /&gt;பழனி - பிரவீன்குமார்&lt;br /&gt;பாப்பிரெட்டிபட்டி - திலகவதி&lt;br /&gt;பாப்பநாசம் - அசாருதீன்&lt;br /&gt;பாலக்கோடு - கோபி&lt;br /&gt;பவானி - பாலகிருஷ்ணன்&lt;br /&gt;பவானிசாகர் - தமிழ்செல்வி&lt;br /&gt;பாளையங்கோட்டை - மரிய ஜான்&lt;br /&gt;புதுக்கோட்டை - ஷெரிஃப்&lt;br /&gt;பூந்தமல்லி - பிரகாஷம்&lt;br /&gt;பூம்புகார் - விஜாயலயன்&lt;br /&gt;பெரம்பலூர் - சிவகுமார்&lt;br /&gt;பெருந்துறை - அருணாச்சலம்&lt;br /&gt;பெரியகுளம் - சபரி&lt;br /&gt;பொன்னேரி - எம்.எஸ். ரவி&lt;br /&gt;பொள்ளாச்சி - ராமநாதன்&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை கிழக்கு - கார்த்திகேயன்&lt;br /&gt;மதுரை வடக்கு - கல்லாணை&lt;br /&gt;மதுரை தெற்கு - ஜோ பீட்டர்&lt;br /&gt;மதுரை மத்தி - முஸ்தஃபா&lt;br /&gt;மதுரை மேற்கு - எஸ்.ஆர்.தங்கபாண்டி&lt;br /&gt;மதுராந்தகம் - எழில் கேத்ரீன்&lt;br /&gt;மதுரவாயல் - ரேவந்த் சரண்&lt;br /&gt;மணப்பாறை - ஆர். கதிரவன்&lt;br /&gt;மணச்சநல்லூர் - சரவணன்&lt;br /&gt;மன்னார்குடி - ராஜராஜன்&lt;br /&gt;மயிலாடுதுறை - அருண் ரஷித்&lt;br /&gt;மயிலாப்பூர் - பி வெங்கட்ரமனன்&lt;br /&gt;மாதவரம் - எம்.எல். விஜய் பிரபு&lt;br /&gt;மாநாமதுரை - இளங்கோவம்&lt;br /&gt;முசிறி - விக்னேஷ்&lt;br /&gt;முதுகுளத்தூர் - மலர்விழி ஜெயபாலா&lt;br /&gt;மேட்டூர் - செல்வம்&lt;br /&gt;மேட்டுப்பாளையம் - சுனில் ஆனந்த்&lt;br /&gt;மேலூர் - மதுரை வீரன்&lt;/p&gt;
&lt;p&gt;ராமநாதபுரம் - சாஹுல் அமீத்&lt;br /&gt;ராசிபுரம் - லோகேஷ் தனபால்&lt;br /&gt;ராஜபாளையம் - ஜெகதீஸ்வரி&lt;br /&gt;ராயபுரம் - விஜய் தாமு&lt;/p&gt;
&lt;p&gt;லால்குடி - கு.ப. கிருஷ்ணன்&lt;/p&gt;
&lt;p&gt;வந்தவாசி - உதயகுமார்&lt;br /&gt;வாணியம்பாடி - சையது ஃபுர்ஹாதின்&lt;br /&gt;வாசுதேவநல்லூர் - அமுதா ராணி&lt;br /&gt;வால்பாறை - ஸ்ரீதரன்&lt;br /&gt;விக்கிரவாண்டி - விஜய் வடிவேல்&lt;br /&gt;விழுப்புரம் - மோகன் ராஜ்&lt;br /&gt;விருகம்பாக்கம் - சபரிநாதன்&lt;br /&gt;விருதாச்சலம் - விஜய்&lt;br /&gt;விருதுநகர் - செல்வம்&lt;br /&gt;வில்லிவாக்கம் - ஆதவ் அர்ஜுனா&lt;br /&gt;விளாத்திக்குளம் - காசிராம்&lt;br /&gt;விளவங்கோடு - மைக்கல் குமார்&lt;br /&gt;வீரபாண்டி - பழனிவேல்&lt;br /&gt;வேடச்சந்தூர் - நாகஜோதி&lt;br /&gt;வேளச்சேரி - ஆர். குமார்&lt;br /&gt;வேலூர் - வினோத் கண்ணன்&lt;br /&gt;வேப்பனஹள்ளி - சம்பங்கி&lt;br /&gt;வேதாரணயம் - கிங்ஸ்லி ஜெரால்ட்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/how-can-women-use-apple-vinegar-daily-254447&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;&lt;/h2&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/29/5237e8cf23495d155bba39010d965b9817747693323451270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விளாத்திகுளம் மாணவி கொலை: கொலையாளியை கைது செய்தது எப்படி? - தூத்துக்குடி எஸ்பி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்கள்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-student-murder-case-accused-dharma-muneeswaran-arrest-explained-by-thoothukudi-sp-madhan-253827</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-student-murder-case-accused-dharma-muneeswaran-arrest-explained-by-thoothukudi-sp-madhan-253827#respond</comments><pubDate>Thu, 19 Mar 2026 19:18:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-student-murder-case-accused-dharma-muneeswaran-arrest-explained-by-thoothukudi-sp-madhan-253827</guid><description><![CDATA[&lt;p&gt;விளாத்திகுளம் மாணவி வழக்கில் கொலையாளியை கைது செய்தது எப்படி? என்பது குறித்து தூத்துக்குடி எஸ்பி மதன் விளக்கம் அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே பாலியல் கொலை வழக்கில் சிறைத்தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;தற்போதைய வழக்கில் தர்ம முனீஸ்வரம் கைது செய்யப்பட்டது குறித்து தூத்துக்குடி எஸ்பி மதன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்தார். அதில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;எஸ்பி அளித்த பேட்டியில், &amp;ldquo;விளாத்திகுளம் பிளஸ் டூ மாணவி கொலை வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேர்த்தியான தொழில்முறை விசாரணை மூலம் அனைத்தையும் ஒருங்கிணைத்து குற்றவாளியை கைது செய்துள்ளோம். அறிவியல்பூர்வமான விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். எந்தவித அழுத்தத்துக்கும் ஆளாகாமல், அறிவியல் ரீதியாக விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடித்துள்ளோம். பாலியல் குற்றத்தில் தண்டிக்கப்பட்டு, மேல்முறையீடு நிலுவையில் இருந்தபோது குற்றவாளி பிணையில் வெளியே வந்துள்ளார். ஏற்கனவே தண்டிக்கப்பட்ட கைதிகள், ஜாமினில் வெளியே வந்த கைதிகள் என அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தினோம். விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள், ஆய்வாளர்கள் உள்பட அனைவரையும் ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றினார்கள்.&lt;/p&gt;
&lt;h2&gt;98 சிசிடிவிக்களை ஆராய்ந்து குற்றவாளி கைது&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவி கொலை வழக்கில் 98 சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்து குற்றவாளியை கைது செய்துள்ளோம். வேடநத்தம் கிராமத்தில் வசிக்கும் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். ஒவ்வொரு விசாரணையையும் தனித் தனியாக, தனிப்படைகள் அமைத்து மேற்கொண்டோம். 461 குற்றவாளிகள் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் குற்றத்தில் ஈடுபடவில்லை என்பதை உறுதிப்படுத்தினோம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். கைது செய்யப்பட்ட நபரிடம் ரத்த மாதிரி எடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். சந்தேகத்தின் பேரில் 5 பேரிடம் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்.&lt;/p&gt;
&lt;h2&gt;குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தருவோம்&lt;/h2&gt;
&lt;p&gt;குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்று தர நடவடிக்கை எடுப்போம் தருவோம். ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தபட்சம் 10 சிசிடிவி கேமராக்கள் பொருந்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம். பெண் காவலர்கள் மூலமாக கிராமப் புறங்களில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு கிராமங்களிலும் சிறப்பு மகளிர் காவல் குழுக்கள் அணிவகுப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிறுமி பெயர், படத்தை பயன்படுத்தினால் நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை பயன்படுத்துவது சட்டவிரோதம், விதிமீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்&amp;rdquo; என்று எச்சரிக்கை விடுத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/black-cardamom-benefits-and-easy-tips-to-grow-it-at-home-253768&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/19/659dd2d4eb5d1d3122e2c8b6420072291773927917564113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி மாணவி கொலை வழக்கு: ராமநாதபுரம் இளைஞர் கைது! அதிர்ச்சி தரும் காரணம் என்ன? தீவிர விசாரணை!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-student-murder-case-youth-from-ramanathapuram-arrested-what-is-the-shocking-motive-intense-interrogation-underway-253794</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-student-murder-case-youth-from-ramanathapuram-arrested-what-is-the-shocking-motive-intense-interrogation-underway-253794#respond</comments><pubDate>Thu, 19 Mar 2026 15:28:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-student-murder-case-youth-from-ramanathapuram-arrested-what-is-the-shocking-motive-intense-interrogation-underway-253794</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மாணவி கொலை சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டு வாகனத்தில் வந்த நபர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படும் நிலையில் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்திப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/19/13ab2e45760a9707ec589c8239ba26061773914276183193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி கடந்த 10ம் தேதி வீட்டில் இருந்து இரவு வேளையில் வீட்டின் அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு இயற்கை உபாதைக் கழிக்க சென்ற நிலையில் காணாமல் போனார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் ஒரு நாள் முழுவதும் தேடிய நிலையில் கடந்த 11ஆம் தேதி அதே காட்டுப் பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவியின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு, இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து மாணவியின் உறவினர்கள், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்தப் பகுதி அருகே வேலை பார்த்த வட மாநில தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள் என சுமார் 50-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடைபெற்றது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், கிராமம் முழுவதும் வீடு வீடாக சல்லடை போட்டு விசாரணை நடத்தினர். இருப்பினும் குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை தொடர்ந்து திணறி வந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் ஆறு பேருக்கு டிஎன்ஏ மருத்துவ பரிசோதனையும் காவல்துறையினர் எடுத்து அதன் முடிவுகளுக்கு காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தரபாண்டியன் நியமனம் செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்ய விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/19/3a009257d43685d2e0437cf690c764651773914162558193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நிலையில் வேடநத்தம் கிராமம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள ஒரு காற்றாலையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்வதில், சம்பவம் நடந்த அன்று அந்தப் பகுதியில் ஒரு இருசக்கர வாகனம் இருப்பதை காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். அந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கண்டுபிடித்ததில் அந்த இருசக்கர வாகனம் ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பகுதியில் இருந்து மர்ம நபரால் திருடி கொண்டுவரப்பட்டது தெரிய வந்தது. அந்த இருசக்கர வாகனம் திருடு போயிருப்பதாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு இருந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் சென்ற காவல்துறையினர் அங்கே இருசக்கர வாகன சிசிடிவி குறித்து ஆய்வு செய்ததில் அந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் திருடி வந்திருப்பது தெரிய வந்தது. திருடிய இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் அந்த காட்டு பகுதிக்கு எதற்கு வந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர் அந்த மர்ம நபர் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/19/e21e3738db285edea1dd1dbca9c066531773914292274193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதைத்தொடர்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த 30 வயதான தர்ம முனீஸ்வரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தர்ம முனீஸ்வரன் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவியை ஏன் கொலை செய்தார்? எப்படி கொலை செய்தார்? என்பது குறித்து போலீசா தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து விரிவான விளக்கம் விரைவில் வெளியிடப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/19/3a009257d43685d2e0437cf690c764651773914162558193_original.JPG" width="220"/></item></channel></rss>