<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>thoothukudi</title><atom:link href="https://tamil.abplive.com/thoothukudi/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 05:33:17 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[முதல்வர் விஜய் பிரதமராகலாம்; ஆனால்,  - இயக்குநர் கெளதமன் சொன்னது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/v-gauthaman-says-cm-vijay-ban-alcohol-in-tamil-nadu-273878</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/v-gauthaman-says-cm-vijay-ban-alcohol-in-tamil-nadu-273878#respond</comments><pubDate>Tue, 8 Sep 2026 09:06:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/v-gauthaman-says-cm-vijay-ban-alcohol-in-tamil-nadu-273878</guid><description><![CDATA[&lt;p&gt;&amp;ldquo;முதல்வர் விஜய் பிரதமராவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தமிழ்நாட்டை ஆண்ட ஒருவர் நாட்டின் பிரதமராவது மகிழ்ச்சியே. ஆனால் அதற்கு முன்பு முதலமைச்சர் விஜய் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்&amp;rdquo; என்று தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளரும் திரைப்பட இயக்குனருமான வ. கெளதமன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் &amp;nbsp;நகராட்சி சொந்தமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் &amp;nbsp;தமிழ் பேரரசு கட்சியின் &amp;nbsp;பொதுச் செயலாளர் திரைப்பட இயக்குனர் வ. கெளதமன் ஆய்வு மேற்கொண்டார். அதேபோன்று எட்டையாபுரம் சாலையில் அரசு நூலகம் அருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தையும் ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில்பட்டி நகராட்சி தினசரி சந்தை இயங்காமல் முடங்கிக் கிடப்பதை பார்க்கும்போது உண்மையிலேயே மனது சொல்ல முடியாத அளவுக்கு சங்கடமாக இருக்கிறது. &amp;nbsp;நகராட்சி நிர்வாகத்துறை முதலமைச்சர் விஜய் கையில் இருக்கிறது. ஆகவே இந்த பிரச்சினையை உடனடியாக முதலமைச்சர் விஜய் கையில் எடுத்து பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். கோவில்பட்டி எட்டையபுரம் சாலையில் உள்ள அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்து டிஜிட்டல் நூலகமாக மாற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/qSBIWBtlOKg?si=t5vF9n3WMiNWBN2b&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;முதல்வர் விஜய் பிரதமராவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தமிழ்நாட்டை ஆண்ட ஒருவர் நாட்டின் பிரதமராவது மகிழ்ச்சியே. ஆனால் அதற்கு முன்பு முதலமைச்சர் விஜய் தமிழகத்தை காப்பாற்ற வேண்டும். மது இல்லாத, போதை இல்லாத தமிழ்நாட்டை முதலில் உருவாக்க வேண்டும். எங்கிருந்தோ எடுத்து வரக்கூடிய கஞ்சா, அபின் போன்ற போதை பொருட்களை தடுப்பது நல்ல விஷயம்தான். எல்லாவற்றையும் நாங்கள் தடுத்து விட்டோம், ஆனால் சாராயத்தை நாங்கள் தான் வாயில் ஊற்றுவோம் என்பதைப் போன்று செயல்படுவது சரியல்ல. சாராயத்தை தடுத்தால் தான் மது, போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க முடியும்.&amp;nbsp;சாராயம் விற்காத தமிழ்நாட்டை தூக்கி நிறுத்தினால்தான் ஒரு நல்ல முதலமைச்சர் என்கிற பெயர் இருக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு 13 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. இந்த நிலையில் தற்போதுள்ள அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்துவதற்குள் தமிழ்நாட்டின் கடன் 20 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிடும் என சொல்கிறார்கள். எந்த அரசு கடன் வாங்குகிறதோ அந்த அரசு ஆட்சி முடிவதற்குள் கடனை அடைக்க வேண்டும். அதற்கு யோகியதை இருந்தால் கடன் வாங்கலாம். சாராயம் விற்காத, கடனும் வாங்காத தமிழ்நாட்டை யார் ஒருவர் கட்டி எழுப்புகிறாரோ அவர்தான் வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய முதலமைச்சர். இதற்கு முன்பு உள்ள முதலமைச்சர்கள் யாரும் இதனை செய்யவில்லை. &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; இதனை செய்தால் அவர் மரியாதைக்குரியவர். இதை செய்ய அவர் முயற்சி செய்ய வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கேரளா, புதுச்சேரியில் கள்ளு கடை உள்ளது. கள்ளு கடை திறக்கப்பட்டால் லட்சக்கணக்கான விவசாயிகள் முதலாளிகளாக மாறுவார்கள். கள்ளு குடித்து யாரும் இறந்ததாக வரலாறு இல்லை. சாராயம் குடித்து இறப்பதை விட, கள்ளு குடித்தால் உடம்புக்கு நல்லது. கள்ளு கடை திறக்கப்பட்டால் இந்த மண்ணில் இருக்கக்கூடிய பல லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே தமிழ்நாட்டில் கள்ளு கடை திறக்கப்பட்டால் வரவேற்கக் கூடியது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஒரு ஆட்சி அமைந்து 100 நாட்களுக்குள் மொத்தத்தையும் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லாத விஷயம். ஆனால் இன்னும் ஒரு வருடத்திற்கு பிறகும் கடந்த ஆட்சியில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாக நடந்தது என்று கூறிக்கொண்டு இருந்தால், நாங்கள் தோற்று விட்டோம் என இரண்டு கைகளையும் தூக்கிக் கொள்வதற்கு சமம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சாராயத்தை அரசே விற்பனை செய்கிற வரைக்கும் தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கும். என்றைக்கு அரசாங்கம் சாராயம் விற்பதை நிறுத்துகிறதோ அன்றைக்கு தான் குற்றச்சம்பவங்கள் குறையும். தமிழ்நாட்டில் முழுவதுமாக மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/eat-this-red-food-to-improve-eyesight-fast-and-sharp-vision-tips-details-in-pics-273874&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/08/d4cb823868adcc79dcfdf9b1991615411788838135372113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருச்செந்தூர் ஆவணித் திருவிழா கோலாகலம்: கொடியேற்றம், தேரோட்டம் எப்போது?]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/grandeur-of-the-tiruchendur-avani-festival-when-are-the-flag-hoisting-and-chariot-procession-273246</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/grandeur-of-the-tiruchendur-avani-festival-when-are-the-flag-hoisting-and-chariot-procession-273246#respond</comments><pubDate>Wed, 2 Sep 2026 08:49:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/grandeur-of-the-tiruchendur-avani-festival-when-are-the-flag-hoisting-and-chariot-procession-273246</guid><description><![CDATA[&lt;p&gt;முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விளங்கி வருகிறது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசித் திருவிழா, ஆவணித் திருவிழா, கந்தசஷ்டி, தைப்பூசம் &amp;nbsp;உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/02/98819b108cfb2d7b605fbab2a047fce01788319133541193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா திங்கள்கிழமை அதிகாலை (ஆக. 31) கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. அரோகரா முழக்கத்துடன் திரளான பக்தர்கள் கொடியேற்ற நிகழ்வைக் கண்டு மகிழ்ந்தனர். 12 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 9ஆம் தேதி தேரோட்டம் நடக்க உள்ளது. முன்னதாக திங்கள்கிழமை அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து, காலை 5.15 மணிக்கு திருவிழா கொடியேற்றப்பட்டது.தொடர்ந்து&amp;nbsp; மாலை அப்பா் சுவாமிகள் கோயிலில் இருந்து தங்கச் சப்பரத்தில் புறப்பட்டு வீதிகளில் உழவாரப்பணி செய்யும் நிகழ்ச்சி, இரவு ஸ்ரீபெலி நாயகா் அஸ்திர தேவருடன் பல்லக்கில் 9 சந்திகளில் வீதியுலா வரும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/02/ebded46258549251cec75a789bbec1681788319084872193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செப். 4 ஆம் தேதி ஐந்தாம் திருவிழாவை முன்னிட்டு மேலக் கோயிலில் இரவு 7.30 மணிக்கு குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்று சுவாமியும், அம்மனும் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதியுலா வருதல், செப். 5 காலை கோ ரதம், இரவு வெள்ளி ரதம் வீதியுலா வருதல், செப். 6 அதிகாலை 5 மணிக்கு சண்முகப் பெருமானின் உருகு சட்டசேவை நிகழ்ச்சி, 9 மணிக்கு சுவாமி சண்முகப் பெருமான் வெட்டி வோ் சப்பரத்தில் பிள்ளையன் கட்டளை மண்டபத்தை சேருதல், மாலை 4 மணிக்கு சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியில் வீதியுலா வருதல், செப். 7 காலை 5 மணிக்கு பெரிய வெள்ளிச் சப்பரத்தில் வெள்ளை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து மேலக்கோயில் சேருதல், நண்பகல் 12 மணிக்கு பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியில் சுவாமி வீதியுலா வந்து கோயில் சேருதல், செப். 9 காலை 7 மணிக்கு தேரோட்டம் ஆகியவை நடைபெறுகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/02/ebded46258549251cec75a789bbec1681788319084872193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி - மதுரை சாலையில் பயணம் செய்யப் போறீங்களா? முதல்ல இதை படிச்சுட்டு போங்க!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/madurai-thoothukudi-highway-traffic-snarls-delayed-nhai-underpasses-flyovers-cause-massive-jams-tnn-273111</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/madurai-thoothukudi-highway-traffic-snarls-delayed-nhai-underpasses-flyovers-cause-massive-jams-tnn-273111#respond</comments><pubDate>Mon, 31 Aug 2026 22:45:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/madurai-thoothukudi-highway-traffic-snarls-delayed-nhai-underpasses-flyovers-cause-massive-jams-tnn-273111</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடியை இணைக்கும் இரண்டு முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெற்று வரும் கீழ்ப்பாலம் (Underpass) மற்றும் மேம்பாலக் (Flyover) கட்டுமானப் பணிகள் மிகவும் தாமதமடைந்து வருவதால், அப்பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தாமதமாகும் பணிகள் மற்றும் போக்குவரத்து முடக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி - மதுரை நான்கு வழிச் சாலையில் மாடத்தூர், எப்பொழுதும்வென்றான் மற்றும் கீழஈரால் ஆகிய மூன்று இடங்களில் கீழ்ப்பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல, தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோரம்பள்ளம், மங்களகிரி சந்திப்பு மற்றும் வாசவப்பபுரம் ஆகிய பகுதிகளில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் தீவிரமாக முடங்கிப்போயுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் பணிகளுக்காக பிரதான சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, சாலையின் இருபுறமும் தற்காலிகச் சேவைச் சாலைகள் (Service roads) அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தச் சேவைச் சாலைகள் மிகக் குறுகியதாகவும், சீரமைக்கப்படாமல் மிகவும் மோசமான நிலையிலும் இருப்பதால், தினமும் பயணிக்கும் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ராட்சத வாகனங்களால் ஸ்தம்பிக்கும் சேவைச் சாலைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கமாகச் செல்லும் 40 அடி நீளக் கொள்கலன் (Container) லாரிகள் இந்த குறுகலான பாதைகளில் எச்சரிக்கையுடன் கடந்து சென்றுவிடுகின்றன. ஆனால், வஉசி துறைமுகம் வழியாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்படும் காற்றாலை இறக்கைகளைச் (Windmill blades) சுமந்து செல்லும் சுமார் 290 அடி நீளமுள்ள ராட்சத லாரிகள் இந்தச் சேவைச் சாலைகளில் திரும்ப முடியாமல் அடிக்கடி சிக்கிக் கொள்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் அகம்படி வந்தபோதிலும், குறுகிய வளைவுகளிலும் கீழ்ப்பாலப் பணிகளின் எல்லைகளிலும் இந்த லாரிகள் மாட்டிக்கொள்வதால் பல மணி நேரம் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்து விடுகிறது. குறிப்பாக கயத்தாறு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அதிகளவில் அமைக்கப்பட்டு வருவதால், இதுபோன்ற ராட்சத வாகனங்களின் நடமாட்டம் அண்மைக்காலமாகப் பெருமளவு அதிகரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் கோரிக்கை மற்றும் சுங்கக் கட்டணப் புகார்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பகல் நேரங்களில் ஏற்படும் இந்தத் தொடர் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, காற்றாலைப் உதிரிபாகங்களை ஏற்றிச் செல்லும் ராட்சத வாகனங்களின் பயண நேரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இரவு நேரங்களில் மட்டும் இத்தகைய வாகனங்களை அனுமதிக்க காவல்துறை நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பகல் நேரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு கிடைக்கும் என்று மாடத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மற்றொருபுறம், வாகைகுளம் சுங்கச்சாவடியில் கார்கள் மற்றும் ஜீப்புகளுக்கு ரூ.120 வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் போதிலும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) இந்தச் சேதமடைந்த சேவைச் சாலைகளைப் பராமரிக்காமல் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மோசமான சேவைச் சாலை வழியே நாள்தோறும் உயராதிகாரிகள் பயணித்தபோதிலும், அங்கு தொடரும் விபத்துகளையும் குழி விழுந்த பாதைகளையும் சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிறைவடையும் காலம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் கூறுகையில், தற்போது நடைபெற்று வரும் கீழ்ப்பாலங்கள் மற்றும் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் வரும் 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என்று தெரிவித்துள்ளனர். அதுவரை இந்தச் சாலைகளில் கூடுதல் கவனம் செலுத்திப் போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/31/c287ecea2bfd536cd44b7d3bc536202917881964709291319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பிரம்மாண்டமாக மாறும் தூத்துக்குடி துறைமுகம்! ரூ.500 கோடிக்கும் அதிகமான மெகா திட்டம் – வணிகர்களுக்கு செம செய்தி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tuticorin-voc-port-infrastructure-upgrades-517-crore-container-terminal-major-expansion-projects-announced-tn-272897</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tuticorin-voc-port-infrastructure-upgrades-517-crore-container-terminal-major-expansion-projects-announced-tn-272897#respond</comments><pubDate>Sat, 29 Aug 2026 18:17:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tuticorin-voc-port-infrastructure-upgrades-517-crore-container-terminal-major-expansion-projects-announced-tn-272897</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை நவீனமயமாக்கும் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் அதிகரித்து வரும் தேவைகளைச் சமாளிக்கும் வகையில், சரக்குகளை விரைவாகக் கையாளுதல், பாதுகாப்பாகச் சேமித்தல் மற்றும் தடையின்றி வெளியேற்றுதல் ஆகிய வசதிகளைத் துறைமுக நிர்வாகம் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. இத்திட்டங்கள் குறித்து துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் விரிவான அறிக்க ஒன்றை வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சரக்குப் பெட்டக முனைய நவீனமயமாக்கல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துறைமுகத்தின் 7-வது சரக்கு தளம், ₹517 கோடி மதிப்பீட்டில் அதிநவீன சரக்குப் பெட்டக முனையமாக மாற்றப்பட்டு வருகிறது. 370 மீட்டர் நீளமுள்ள இந்தத் தளம், ஆண்டிற்கு 4,20,000 சரக்குப் பெட்டகங்களை (TEUs) கையாளும் திறன் கொண்டதாக உருவாக்கப்படுகிறது. மேலும், பெரிய சரக்குக் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் இதன் ஆழம் 11.70 மீட்டரிலிருந்து 14.20 மீட்டராக அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் அதிகபட்சமாக 12,100 சரக்குப் பெட்டகங்களைக் சுமந்து வரும் பிரம்மாண்ட கப்பல்களை இங்கு எளிதாகக் கையாள முடியும். இப்பணிகள் அனைத்தும் 2029-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் உள்கட்டமைப்பு மற்றும் சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதேபோல், ₹87.38 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வரும் 10-வது சரக்கு தளத்தின் பணிகள் தற்போது 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மேலும், துறைமுக வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் ₹61.64 கோடி செலவில் கூடுதலாக 40 ஏக்கர் பரப்பளவில் புதிய சுங்கக் கட்டுப்பாட்டுப் பகுதி (Customs Bound Area) உருவாக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துறைமுகத்தின் தற்போதைய மற்றும் எதிர்காலக் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, ₹72.66 கோடி மதிப்பீட்டில் கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலை அமைக்கப்பட்டு வருகிறது. 'தலைகீழ் சவ்வூடுபரவல்' (Reverse Osmosis) தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த ஆலை மூலம் நாளொன்றுக்கு 30 லட்சம் லிட்டர் நன்னீர் உற்பத்தி செய்ய முடியும். இக்குடிநீர்த் திட்டம் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/29/eae07cad54ef9e762d7e4b3755162f2117880076423201319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தூத்துக்குடி–நரசாபூர் சிறப்பு ரயில் இயக்கம்: செப்டம்பர் மாதம் 4 சேவைகள் – முழு விவரம் இதோ!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-narasapur-special-train-operation-4-services-in-september-full-details-here-271976</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-narasapur-special-train-operation-4-services-in-september-full-details-here-271976#respond</comments><pubDate>Fri, 21 Aug 2026 20:39:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/tuticorin-narasapur-special-train-operation-4-services-in-september-full-details-here-271976</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில், Trains on Demand (TOD) திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மற்றும் ஆந்திராவின் நரசாபூர் இடையே 4 சேவை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/21/f950023877a968af249de1b41e5dcecf1787324934161193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வண்டி எண் (06019) தூத்துக்குடி, நரசாபூர் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், செப்டம்பர் மாதம் 7, 14, 21, 28 ஆகிய திங்கட்கிழமைகளில் தூத்துக்குடியில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்படும். இந்த ரயில் நரசாபூரை மூன்றாவது நாள் அதிகாலை 12.20 மணிக்கு சென்றடையும். மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மறுமார்க்கத்தில் வண்டி எண் (06020) நரசாபூர், தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில், செப்டம்பர் மாதம் 9, 16, 23, 30 ஆகிய புதன்கிழமைகளில் நரசாபூரில் இருந்து அதிகாலை 4.00 மணிக்கு புறப்படும். இந்த ரயில் அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும். இந்த மார்க்கத்திலும் மொத்தம் 4 சேவைகள் இயக்கப்படும். இந்த ரயில்கள் தூத்துக்குடி, துடிமெலூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், நெல்லூர், ஓங்கோல், சிராலா, பாபட்லா, தெனாலி, விஜயவாடா, குடிவாடா, கைகலூர், அகிவிடு, பீமவரம் டவுன் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும். தூத்துக்குடியில் இருந்து புறப்படும் (06019) சிறப்பு ரயில், அதிகாலை 2.00 மணிக்கு மதுரை வந்தடைந்து, 2.05 மணிக்கு புறப்படும். மறுமார்க்கத்தில், (06020) சிறப்பு ரயில் அதிகாலை 1.20 மணிக்கு மதுரை வந்தடைந்து, 1.25 மணிக்கு புறப்படும்.தூத்துக்குடி &amp;ndash; நரசாபூர் இடையே சிறப்பு ரயில்கள் (southern railway)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/02/74f24775bc7244b35625f8b9ece2a0791775131704024113_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தூத்துக்குடியில் இருந்து புறப்படும் ரயில் பிற்பகல் 1.00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைந்து, 1.15 மணிக்கு புறப்படும். அதே போல் மறுமார்க்கத்தில் நரசாபூரில் இருந்து தூத்துக்குடி நோக்கி வரும் ரயில், பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைந்து, 3.15 மணிக்கு புறப்படும். இந்த ரயில்களில், இரண்டடுக்கு குளிர்சாதன பெட்டி 1, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் 2, இரண்டாம் வகுப்பு படுத்தி வசதி பெட்டிகள் 8, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் உட்பட பொதுப் பெட்டிகள் 5, சரக்கு பெட்டிகள் இரண்டு 2 என மொத்தம் 18 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (ஆகஸ்ட் 22) காலை 8 மணிக்கு தொடங்கும் என தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள், தூத்துக்குடி, மதுரை, திருச்சி டெல்டா மாவட்டங்கள், சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களுக்கு இடையேயான பயணிகளுக்கு கூடுதல் போக்குவரத்து வசதியை வழங்கும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/31/7941054f720a12ac4aba52c41a79c5221711902771958102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஜி.பி.முத்து மீது ஊர் மக்கள் பரபரப்பு புகார்: சமூக வலைதளத்தில் பெண்களை இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/youtuber-gp-muthu-complaint-social-media-women-false-information-270617</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/youtuber-gp-muthu-complaint-social-media-women-false-information-270617#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 17:25:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/youtuber-gp-muthu-complaint-social-media-women-false-information-270617</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;யூடியூபர் ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக தவறான தகவல்களை பரப்புவதாகவும் பெண்களை பற்றி சமூக வலைதளத்தில் தவறாக பேசி வருவதாகவும் குலசேகரன் பட்டினம் காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ஜி.பி.முத்து. இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது மூலம் மேலும் பிரபலமானார். சில படங்களிலும் நடித்துள்ளார். ஜி.பி.முத்து, தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பெருமாள்புரத்தில் வசித்து வருகிறார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இவருக்கும் அந்தப் பகுதியில் உள்ள உச்சிமாகாளி அம்மன் பட்டறை அம்மன் கோயில் கட்டுவதற்கும் பிரச்சனை இருந்து வந்தது. இதனால் அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அப்பகுதி மக்கள் கோயில் கட்டும் பணியை தொடங்கினர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊர் பொதுமக்கள் மாந்திரீக வேலை செய்வதாக ஜி.பி.முத்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி பெரும் பேசும் பொருளாக மாறியது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/MN0BXbnLkag?si=2wgGG91LELUPV9kM&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதி ஊர் பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் குலசேகரன்பட்டினம் காவல் நிலையத்திற்கு இரண்டு வேனில் வந்தனர். காவல் நிலையத்தில் ஜி.பி. முத்து மீது புகார் அளித்தனர். அந்தப் புகாரில், சமூக வலைதளத்தில் வரக்கூடிய வருமானத்திற்காக ஜி.பி. முத்து கோயிலில் நடந்த சிறப்பு பூஜையை மாந்திரீக பூஜை நடப்பதாக வீடியோ வெளியிட்டு தவறான தகவல்களை பரப்பி அந்த வீடியோவை வைரலாகியதாகவும், மேலும் அந்தப் பகுதியில் உள்ள சில பெண்களைப் பற்றி பேசி வீடியோ வெளியிட்டதாகவும் மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி கோவில் பணிகள் கட்டப்பட்டு வருவதை பொதுப் பாதையில் கட்டப்படுவதாக கூறி தவறான தகவல்களை சமூகவலைதளத்தில் பரப்பி வந்ததாகவும், ஜி.பி.முத்து மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டிஎஸ்பி மகேஷ் குமார் புகார் மனு கொடுக்க வந்த பொது மக்களிடம் விசாரணை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/09/8cbe254f19c6983fe78f9393e19804f71786276277758113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["விஜய் பக்குவமா நடந்துக்கணும்” - ஜாமீனில் வந்த பிறகும் மீண்டும் முதல்வர் குறித்து மார்க்கண்டேயன் சர்ச்சை பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-markandeyan-press-meet-dmk-he-talk-about-government-tamil-nadu-chief-minister-investments-budget-270511</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-markandeyan-press-meet-dmk-he-talk-about-government-tamil-nadu-chief-minister-investments-budget-270511#respond</comments><pubDate>Sat, 8 Aug 2026 14:02:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/vilathikulam-markandeyan-press-meet-dmk-he-talk-about-government-tamil-nadu-chief-minister-investments-budget-270511</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை என்று சமீபத்தில் முதலமைச்சர் குறித்து சர்ச்சையாகி பேசி சிறைக்கு சென்று வந்த திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் அவருக்கு மிரட்டல் விடுக்கும் வகையிலும் கோவில்பட்டி பொதுக் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த 20 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஆகஸ்ட் 3ந் தேதி வரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கவும் நீதிபதி சுமதி உத்தரவு பிறப்பித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர், தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனுக்கு கடந்த 3ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பின்னர், ஜாமீன் வழங்கியதையடுத்து 4ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/LXMFMfdXY5g?si=pLwLXtEO6AJfrjE3&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், சட்டசபை நாட்களைத் தவிர தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் நேற்று சட்டசபை தினம் என்பதால் அவருக்கு கையெழுத்திட விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் இன்று மார்க்கண்டேயன் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வருகை தந்து கையெழுத்திட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், &amp;ldquo;மேற்கு வங்கத்திற்கு 75 சதவீதம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு முதலீடுகள் போய்விட்டது. தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்து இருக்கிறது. தமிழகத்திற்கு தொழில் செய்ய வந்தால் வழக்கு போட்டு விடுவார்களோ என்று &amp;nbsp;பயப்படுகிறார்கள். மேலும், திமுகவினரை கைது செய்து முடக்க முடியுமா? அப்படி எல்லாம் முடக்க முடியாது. திமுக அச்சப்படும் கட்சி கிடையாது. ஜனநாயகத்தில் கருத்துக்களை சரியான முறையில் எடுத்து வைக்க கூடிய அரசியல் கட்சி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/3612edca8e095617b9c54b0a637d80ec1786177820390113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக முதல்வர் பக்குவமாக நடந்து கொண்டால் பிரச்சனை இல்லை. இந்த அரசு தீவிரவாதவாதிகளை நடத்துவது போன்று &amp;nbsp;நடத்துகிறது. ஜனநாயகத்தின் மிகப்பெரிய தூணாக இருப்பது சட்டமன்றம் அது அடைக்கப்படும் என்று சொன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கான எதிர்வினை அரசியல் ரீதியாக சந்தித்திருக்கலாம் அல்லது வழக்கு போட்டு இருக்கலாம். ஆனால், பெரிய தீவிரவாதி போல இன்டர்நேஷனல் கிரிமினல் போல எங்கு திரும்பினாலும் போலீஸ் போட்டு எங்களையெல்லாம் பயம் காட்டுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை. மக்கள் எதிர்பார்த்தது பட்ஜெட்டில் இல்லை. ரயிலில் &amp;nbsp;வந்து விடும் என்று நினைத்தார்களோ என்று தெரியவில்லை. வாலியில் இருந்தால்தான் அகப்பைக்குள் வரும். தேர்தல் வாக்குறுதி சொன்ன எந்தவித திட்டங்களும் பட்ஜெட்டில் இல்லை. திமுக தனிப்பெரும் இயக்கம், ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அது வெற்றிடமாக ஆகிவிடும்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;முன்னாள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவை திருத்தணியில் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள் இதுகுறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? &amp;ldquo;பகவான் காத்திருக்கக்கூடிய நிலையை கொடுத்திருக்கிறார். ஆகவே காத்திருக்கிறார் அவர் பக்திமான் பொறுமையாக இருந்து சாமி கும்பிடுகிறார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நேற்று சட்டசபையில் நான் பேசிய பேச்சை மறந்து விடுங்கள் என்று சபாநாயகரிடம் மார்க்கண்டேயன் கூறினார். இதுகுறித்த கேள்விக்கு? தூத்துக்குடி மண்ணிற்கு இருக்கும் வேகம் விவேகமும் நான் சொல்லி இருக்கின்றேன். இதைப்போய் தேவையில்லாமல் சட்டசபையில் இழுக்க வேண்டாம். ஆகவே நேரத்தை வீணடிப்பதால் மறந்து விடுங்கள் என்று சொன்னேன்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/08/e3fbcb0b55486c08c368e8de727cdd351786177881309113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நாகப்பட்டினம் - தூத்துக்குடி 4 வழிச் சாலை: புது ரூட் மேப் தயார்! நிலம் கையகப்படுத்த 'பிரேக்'!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-thoothukudi-green-coastal-road-alternative-route-agricultural-lands-wetlands-268928</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-thoothukudi-green-coastal-road-alternative-route-agricultural-lands-wetlands-268928#respond</comments><pubDate>Sat, 25 Jul 2026 09:20:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-thoothukudi-green-coastal-road-alternative-route-agricultural-lands-wetlands-268928</guid><description><![CDATA[&lt;p&gt;ராமநாதபுரம்: விவசாய நிலங்கள் மற்றும் ஈர நிலங்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நாகப்பட்டினம் - தூத்துக்குடி இடையேயான நான்கு வழி பசுமை கடற்கரை சாலைத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன&lt;/p&gt;
&lt;h2&gt;பாரத் மாலா திட்டம்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அரசின் &amp;lsquo;பாரத் மாலா&amp;rsquo; திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் முதல் தூத்துக்குடி வரை ₹7,000 கோடி மதிப்பீட்டில் புதிய 4 வழி பசுமை கடற்கரை சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த மாதம் அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.&lt;/p&gt;
&lt;h2&gt;331 கி.மீ. நீள சாலை&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த புதிய பசுமைச் சாலையானது தமிழகத்தின் 6 கடலோர மாவட்டங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;நாகப்பட்டினம் - 28.7 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;திருவாரூர் - 40.3 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;தஞ்சாவூர் - 40.6 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;புதுக்கோட்டை - 39.6 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;ராமநாதபுரம் - 138.6 கி.மீ.&lt;/li&gt;
&lt;li&gt;தூத்துக்குடி - 44 கி.மீ.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;என மொத்தம் 331 கி.மீ. தொலைவுக்கு இந்த பிரம்மாண்ட சாலை அமைய உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;₹11 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த மொத்தம் ₹11 கோடியே 22 லட்சத்து 41 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, தொண்டி, ஆர்.எஸ்.மங்கலம், ராமநாதபுரம், கீழக்கரை, கடலாடி உள்ளிட்ட பகுதிகளில் நிலம் கையகப்படுத்த ₹4 கோடியே 92 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இப்பணிக்காக கடந்த 2024-ம் ஆண்டு முதல் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர்கள், கண்காணிப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தன.&lt;/p&gt;
&lt;h2&gt;மாற்றுப் பாதை திட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த நிலையில், தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள பாதையில் சாலை அமைத்தால் ஏராளமான விளைநிலங்களும், ஈர நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து, விவசாய நிலங்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் நோக்கில், இத்திட்டத்தை மாற்று பாதையில் (Alternative Route) செயல்படுத்த மத்திய அரசு திடீரென முடிவு செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;அதிகாரிகள் திரும்பப் பெறல்&lt;/h2&gt;
&lt;p&gt;மாற்றுப் பாதை தேர்வு செய்யப்படும் வரை, தற்போது நடைபெற்று வந்த நிலம் கையகப்படுத்தும் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் மீண்டும் தங்களின் தாய் துறைக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பில் புதிய மாற்றுப் பாதைகள் ஆய்வு செய்யப்பட்டு, மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் ஒப்புதல் பெறப்படும். அதன்பின்னர், புதிய பாதையில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் மீண்டும் விரைவாகத் தொடங்கும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/08/cc4c5cea6cc0cec52d621c3564d09af91736299684873739_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிரித்து ‘ஜனநாயகன்’ பார்த்த அமைச்சர்கள் - மகனை இழந்த தாய் கண்ணீர் "விசிலுக்கு ஓட்டு போட்டவங்க அனுபவிக்கிறாங்க"  - நயினார்]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/nainar-nagendran-meet-thoothukudi-police-custody-death-arunachalam-parents-268876</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/nainar-nagendran-meet-thoothukudi-police-custody-death-arunachalam-parents-268876#respond</comments><pubDate>Fri, 24 Jul 2026 17:06:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/nainar-nagendran-meet-thoothukudi-police-custody-death-arunachalam-parents-268876</guid><description><![CDATA[&lt;p&gt;&quot;விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்&quot; என்று தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை சந்தித்தபின் &amp;nbsp;நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடியில் காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த இளைஞர் அருணாசலத்தின் &amp;nbsp;பெற்றோரை பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், &amp;ldquo;ஏழ்மை நிலையில் உள்ள இந்த குடும்பத்தை காப்பாற்றுவதற்காக வேலைக்கு சென்ற இளைஞரை விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள், காலையிலிருந்து சென்ற மகன் திரும்பவில்லை என தேடி வந்துள்ளனர். &amp;nbsp;காவல்துறையினர் விசாரணையின்போது உயிரிழந்து விட்டதாக போன் செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/uMGRpdUgyIU?si=h1Hciqm6X0gE-4o2&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;காவலர் மீது நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;விசாரணையின்போது, காவல்துறையினர் தாக்கியதில் அருணாசலம் உயிரிழந்துள்ளார். காவல்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்திலும் &amp;nbsp;விசாரணையின்போது, &amp;nbsp;விசாரணை கைதியை கொன்றுள்ளனர். தாயிடம் தலையில் அடிபட்டதால் மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளனர். தொடர்ந்து காவல்துறை அத்துமீறல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது. காவல்துறை அடித்து கொலை செய்துள்ளது. தொடர்புடைய காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அருணாச்சலத்தை கொலை செய்த காவலர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/9a22867319f1170eff8cb2facc1af2e11784892799763113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;ஜனநாயகன் பார்ப்பதில் ஆர்வம்&lt;/h2&gt;
&lt;p&gt;விசில் சின்னத்தில் வாக்களித்தவர்கள் அதன் பயனை தற்போது அனுபவித்து வருகிறார்கள்.&lt;br /&gt;அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜனநாயகம் படம் பார்ப்பதில் ஆர்வம் காட்டுகிறார்களே தவிர வாக்களித்த மக்கள் தங்கள் உரிமைகளை பெறுவதற்கு அக்கறை செலுத்தவில்லை. இதனை பொதுமக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அப்போது இருந்த ஆட்சி மாற்றப்பட்டது தூக்கி எறியப்பட்டது. அதன் பிறகு சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் இளைஞர் கொல்லப்பட்டதால் அப்போதிருந்த ஆட்சியும் தூக்கி எறியப்பட்டது. இப்போது இந்த ஆட்சியில் ஆரம்பத்திலேயே காவல்துறை மரணங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. &amp;nbsp;அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களை எலி கடித்துள்ளது. அந்த அளவிற்கு மருத்துவமனை வசதிகள் உள்ளன&amp;rdquo; என்று கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;பேட்டியின்போது நயினார் நாகேந்திரன் அருகில் நின்ற அருணாசலத்தின் தாய் பரமேஸ்வரி, &amp;ldquo;எனது மகன் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர்கள் சிரித்து படம் பார்த்து கொண்டிருக்கிறார்கள்&amp;rdquo; என ஆதங்கத்துடன் கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/which-is-the-oldest-country-in-the-world-268826&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/b3a76ff38170bd1f1629c5b677be4c1e1784892670855113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம்  இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!]]></title><link>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-arunachalam-lock-up-death-full-timeline-legal-process-post-mortem-updates-what-happens-next-268812</link><comments>https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-arunachalam-lock-up-death-full-timeline-legal-process-post-mortem-updates-what-happens-next-268812#respond</comments><pubDate>Fri, 24 Jul 2026 11:45:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அரூபி ]]></dc:creator><category><![CDATA[ தூத்துக்குடி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thoothukudi/thoothukudi-arunachalam-lock-up-death-full-timeline-legal-process-post-mortem-updates-what-happens-next-268812</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; ஆட்சியில் லாக்கப் மரணங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனை முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; கண்டும் காணததுபோல் இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், நேற்று தூத்துக்குடி தென்பாகம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளது தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தன் மகனை காவலர்கள் அடித்துக் கொலை செய்துவிட்டதாக பெற்றோர்களும் உறவினர்களும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று அருணாச்சலத்தின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/OEVWHQ-ReYo?si=RPEeiRD6RKPkhob0&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;இந்த சம்பவத்தில் தொடக்கம் முதல்வர் அவரின் இறுதி வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம் :&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;strong&gt;&lt;em&gt;&amp;nbsp;&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்தவர்கள் நாகராஜ் &amp;ndash; பரமேஸ்வரி தம்பதி. இவர்களது மகன் தான் அருணாச்சலம் என்ற 26 வயதே ஆன இளைஞர். தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கான பாரில் வேலை செய்து வந்தார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;கடந்த 17ஆம் தேதி தென்பாகம் காவல்நிலைய காவல்துறையினர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அருணாச்சலம் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவரை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 180 மில்லி லிட்டர் அளவிலான 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக அவர் மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதனால் ,அவர் மீது மதுவிலக்கு சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;இதனையடுத்து அவரை கைது செய்ததும் அவருக்கு முழு உடல் பரிசோதனையை காவல்துறையினர் செய்தனர். அந்த பரிசோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைது குறித்தும் அவரின் குடும்பத்திற்கு எழுத்துப் பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;17ஆம் தேதி மாலை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவர் அருணாச்சலம் பூரண உடலநலத்துடன் இருப்பதாக சான்றிதழித்தப்பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஆவணங்களை தயார்படுத்த மீண்டும் அவர் தூத்துக்குடி தெற்கு காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அந்த நேரத்தில், மற்ற கைதிகளுடன் காவல்நிலையத்தில் இருந்த லாக்-அப்பில் அருணாச்சலம் அடைப்பட்டிருக்கிறார். அப்போது மற்ற கைதிகளுடன் அவர் இயல்பாக நின்றுகொண்டு பேசியிருக்கிறார். அப்படி அவர் சக கைதிகளிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அருணாச்சலம் திடீரென மயங்கி விழுந்திருக்கிறார். இது காவல்நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த பதிவையும் நேற்று காவல்துறை வெளியிட்டுள்ளது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அவர் மயங்கி விழுந்ததும் லாக்கப்பை திறந்து அருணாச்சலத்தை வெளியில் கொண்டுவந்து அவருக்கு தேவையான முதலுதவி சிகிச்சையை காவல்துறையினர் செய்திருக்கின்றனர். அந்த நேரத்தில் காவல்நிலையம் வெளியே இருந்த அவரது தாயாரும் உள்ளே வந்திருக்கிறார். அப்போது அவர் மயக்கம் தெளிந்து இயல்பாக இருந்திருக்கிறார். இருப்பினும் காவல்துறையினர் முன்னெச்சரிக்கையாக சொந்த ஜாமினில் அவரது உடல்நிலையை கருத்தில்கொண்டு விடுவித்து அவரது தாயாருடன் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அதன்பின்னர் மருத்துவமனைக்கு அருணாச்சலம் அழைத்துச் செல்லும்போதே மீண்டும் மயங்கி விழுந்திருக்கிறார். அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (23 &amp;ndash; 07 &amp;ndash; 2026) அவர் உயிரிழந்துள்ளார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;இது தொடர்பாக அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;/ul&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம்: 23.07.2026&lt;br /&gt;&lt;br /&gt;தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய சம்பவம் குறித்து மாவட்ட காவல்துறையின் விளக்கம்.&lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#தூத்துக்குடிமாவட்டகாவல்துறை&lt;/a&gt;&lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#தென்பாகம்காவல்நிலையம்&lt;/a&gt;&lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#விளக்கம்&lt;/a&gt;&lt;a href=&quot;https://x.com/tnpoliceoffl?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@tnpoliceoffl&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/SouthZoneTNpol?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@SouthZoneTNpol&lt;/a&gt; &lt;a href=&quot;https://t.co/lP5WklUEw5&quot;&gt;pic.twitter.com/lP5WklUEw5&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Thoothukudi District Police (@TUTICORINPOLICE) &lt;a href=&quot;https://x.com/TUTICORINPOLICE/status/2080230493338161654?ref_src=twsrc%5Etfw&quot;&gt;July 23, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li type=&quot;mce-no/type&quot;&gt;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;அருணாச்சலம் தரப்பு குற்றச்சாட்டுகள் என்ன ?&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருணாச்சலத்தை அவர்கள் நண்பர்கள் பார்கச் சென்று, என்ன நடந்தது என்று அவரிடம் கேட்டபோது, பைபாஸ் சாலையில் உள்ள தான் வேலைபார்க்கும் டாஸ்மாக் பாருக்கு அருகே வைத்து தன்னை காவல்துறையினர் மூன்று மணி நேரம் கடுமையாக அடித்து தாக்கியதாக அவர் தன்னுடைய நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;அப்படி போலீஸ் தாக்கியதில் அருணாச்சலத்தின் தலையில் கடுமையான காயம் பட்டதாகவும் அதற்கு சிகிச்சை அளிக்கவே அவருக்கு உடனடியாக மொட்டை அடிக்கப்பட்டதாகவும் அவரது தாய் தெரிவித்துள்ளார்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;ul style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;li&gt;இதனையடுத்து, அருணாச்சலம் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்புடைய காவல்துறையினரை கைது செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், அருணாச்சலத்தின் உடல் கூராய்வு செய்யப்பட்டு இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/24/2d346a21978cc411b7c8ee75160c551d1784873722831108_original.jpg" width="220"/></item></channel></rss>