மேலும் அறிய

எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்

அனைத்து விவசாய கடன்களையும் பயிர் கடன்களையும் நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.  மேட்டூர் அணை வருகின்ற 12-ம் தேதி வழக்கம் ோல் திறக்க வேண்டும்.

தஞ்சாவூா்: மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து தஞ்சாவூரில் தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட தலைவர் மகேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில செய்தி தொடர்பாளர் ஜெய்னுதீன் வரவேற்றார் .
 
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில தலைவர் முகமது இப்ராஹிம் தொடங்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து மாநில பொருளாளர் கிருஷ்ணன், மாநிலத் துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆகியோர்  உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் காவிரி குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் கூட்டுறவு வங்கியில் விவசாயிகளின் பயிர், நகைக்கடன் அனைத்தையும் தமிழக அரசு  தள்ளுபடி செய்ய வேண்டும் , ஜூன் 12-ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டும், தஞ்சை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களில் உள்ள பாசன, ஏரி, குளங்கள், வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

திருவையாறு, பாபநாசம் பகுதியில் வாழை ஆராய்ச்சி நிலையங்கள் உருவாக்க வேண்டும், உர விலையை மத்திய அரசு உடனே குறைக்க வேண்டும்  என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் அய்யம்பேட்டை நகர தலைவர் ஜெய்லாலுதீன், அய்யம்பேட்டை நகர செயலாளர் சேக் தாவூத், அரியலூர் ஒன்றிய செயலாளர் தனஞ்செயன் மற்றும் மாநில, மாவட்ட, வட்டார ,ஒன்றிய ,நகர, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து நன்றி கூறினார். 

பின்னர் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் நிருபர்களிடம் கூறுகையில், விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துடைய நோக்கம் கர்நாடக அரசு தொடர்ந்து  மேகதாது ஆணையிலே நாங்கள் அணை கட்டியே தீருவோம் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். அணை விவசாயிகள் கட்ட விடமாட்டோம். அதேோல் தமிழக முதல்வர் அவர்கள் தேர்தல் அறிக்கையிலே கூட்டுறவு கடனையும் பயிர் கடனையும் தள்ளுபடி செய்வதாக சொன்னார். ஆனால், அதை முழுமையாக செய்யவில்லை.

எனவே, அனைத்து விவசாய கடன்களையும் பயிர் கடன்களையும் நகை கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.  மேட்டூர் அணை வருகின்ற 12-ம் தேதி வழக்கம் ோல் திறக்க வேண்டும். முதல்வர் விஜய் அதுகுறித்து எந்த அறிவிப்பும் செய்யாமல் உள்ளார். குறுவை விவசாயிகள் இன்றைக்கு மிகவும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறுவை சாகுபடி பணிகள் தொடங்கிவிட்டது. எனவே, விவசாயிகளுடைய நலன் கருதி உடனடியாக முதல்வர் விஜய் ஜூன் 12-ல் தண்ணீர் திறக்க ஏற்பாடு பண்ண வேண்டும்.

மத்திய அரசு உரவிலை, டீசல் விலை, பெட்ரோல் விலை, கேஸ் விலை என்று எல்லாவற்றையும் உயர்த்தி உள்ளது. விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும். ​மேகதாது அணை கட்டும் பணிகள் நடந்தால் அங்கு தமிழகத்தில் உள்ள  விவசாயிகளும் ஒன்று சேர்ந்து போராட்டத்தை இன்னும் கடுமையாக நடத்துவோம். எங்கள் உயிரை கூட  விடுவோம். அணை கட்ட விட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
"தமிழகத்தில் நடப்பது என்ன ஆட்சி?" - அனல் பறக்கும் அரசியல் விமர்சனத்தை முன்வைத்த பாஜக கருப்பு முருகானந்தம்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக
Yuvaraja resigns from TMC | ”தமாகா-வில் இருந்து விலகுகிறேன்” யுவராஜா அதிரடி அறிவிப்பு! தவெகவில் இணைகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shipbuilding Thoothukudi : தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
தூத்துக்குடி மக்களுக்கு ஜாக்பாட்.! 38,000 கோடி முதலீடு.. 15,000 பேருக்கு வேலை- மெர்சல் காட்டிய விஜய்
Mithun Palanisamy : ’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
’மகனுக்காக அதிமுகவை காவு வாங்கும் எடப்பாடி?’ கட்சியில் நடப்பது என்ன..?
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
வேறு துறை கேட்கும் விசிக? திருமாவளவன் MASTERPLAN.. குழம்பி நிற்கும் தவெக!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
பள்ளிக் கல்வித்துறையே.. இதெல்லாம் செய்ங்க- பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு 9 முக்கிய கோரிக்கைகள்!
TN BY-Election: 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
Thangam Thennarasu: ’’தவெக இதை செஞ்சா பதவியில் இருந்தே விலகறேன்’’ தங்கம் தென்னரசு ஓப்பன் சவால்!
ADMK vs TVK : அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
அதிமுகவின் 4 MLA-க்கள் மட்டுமல்ல சென்னையின் 2 மா.செயலாளர்களும் ரெடி.? எடப்பாடியை அலற விடும் விஜய்
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்குவது சாத்தியமா? வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசின் செயல்திட்டம் என்ன? அன்புமணி கேள்வி
Embed widget