மேலும் அறிய

ஏக்கருக்கு ரூ.10,000 நஷ்டமா? டெல்டாவை உலுக்கும் புதிய உர விலை உயர்வு பின்னணி!

உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தால், இந்தியாவில் ரசாயன உரங்களின் விலையை நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன.

கும்பகோணம்: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் ரசாயன உரங்களின் விலை மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் நேரடி விளைவாக விவசாயத்திற்கான சாகுபடிச் செலவு ஏக்கருக்குப் பல்லாயிரக் கணக்கில் அதிகரித்துள்ளதால், தமிழக விவசாயிகள், குறிப்பாக டெல்டா மாவட்டப் பகுதி விவசாயிகள் பெரும் திகைப்பிலும் கவலையிலும் ஆழ்ந்துள்ளனர்.

சர்வதேசப் பதற்றமும் உர விலை உயர்வும்

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றச் சூழலால் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நம் நாட்டுக்கான கச்சா எண்ணெய் (பெட்ரோல், டீசல்) வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், உரத் தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருள்களான அமோனியா மற்றும் சல்பர் ஆகியவற்றின் விலையும் சர்வதேச சந்தையில் எகிறியுள்ளது. உலகளாவிய உர விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இந்த முடக்கத்தால், இந்தியாவில் ரசாயன உரங்களின் விலையை நிறுவனங்கள் அதிரடியாக உயர்த்தியுள்ளன.

விலை உயர்வு விபரம் (மூட்டை ஒன்றுக்கு):

உரத்தின் வகை பழைய விலை (ரூ.) புதிய விலை (ரூ.) உயர்வு (ரூ.)
NPK 20:20:0:13 1,750 2,150 400
NPK 10:26:26 2,200 2,450 250
NPK 17:17:17 1,900 2,200 300
MOP (பொட்டாஷ்) 1,975 2,250 275
அமோனியம் சல்பேட் 1,200 1,400 200
DAP 1,450 2,000 550

இது தவிர, பயிர்களைப் பாதுகாக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் விலையும் சத்தமில்லாமல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது விவசாயிகளுக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.

ஏக்கருக்கு ரூ. 10,000 வரை கூடுதல் செலவு: கள நிலவரம்

இதுகுறித்து தஞ்சாவூர், கும்பகோணம் பகுதி விவசாயிகள் விவரித்தபோது சாகுபடிச் செலவின் உண்மையான நிலவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

"ஒரு பயிருக்கு மூன்று முறை உரமிட வேண்டும். முன்பு ஏக்கருக்கு ரூ. 2,050 ஆக இருந்த அடியுரச் செலவு, தற்போது ரூ. 2,600 முதல் ரூ. 3,000 ஆக உயர்ந்துள்ளது. மேலுரத்திற்கான பொட்டாஷ் மற்றும் யூரியா செலவு ரூ. 1,140-லிருந்து ரூ. 1,275 ஆகவும், சல்பேட் செலவு ரூ. 600-லிருந்து ரூ. 700 ஆகவும் அதிகரித்துள்ளது."

உரங்கள் மட்டுமின்றி, டீசல் விலை உயர்வால் டிராக்டர் உழவுப் பணிக்கு ஏக்கருக்கு ரூ. 1,000-லிருந்து ரூ. 1,500 ஆகவும், அறுவடை இயந்திரக் கூலி ரூ. 2,800-லிருந்து ரூ. 3,200 ஆகவும் உயர வாய்ப்புள்ளது. பூச்சிக்கொல்லி மருந்து செலவு ரூ. 2,000-லிருந்து ரூ. 3,000 ஆக மாறியுள்ளது. விலைவாசி உயர்வால் தொழிலாளர் கூலியும் ஏக்கருக்கு ரூ. 1,500 வரை கூடுதலாக உயரும் சூழல் உள்ளது.

ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால், ஒரு ஏக்கருக்குச் சாகுபடிச் செலவு சுமார் ரூ. 10,000 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகளும், இறுதி நுகர்வோரான பொதுமக்களுமே கடுமையாகப் பாதிக்கப்படப் போகிறார்கள் என்று அவர் கவலை தெரிவித்தார்.

ஏமாற்றம் அளிக்கும் கொள்முதல் விலை

செலவுகள் இந்த அளவுக்குக் கூடிவிட்ட போதிலும், அதற்கேற்ப விளைபொருட்களுக்குக் கிடைக்கும் விலை திருப்திகரமாக இல்லை என்பதுதான் விவசாயிகளின் ஆகப்பெரும் வேதனை.

தற்போது தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து நெல் குவிண்டாலுக்கு பொது ரகத்திற்கு ரூ. 2,500-ம், சன்ன ரகத்திற்கு ரூ. 2,545-ம் கிடைக்கிறது. ஆனால், வரும் பருவத்திற்கு மத்திய அரசு குவிண்டாலுக்கு வெறும் ரூ. 72 மட்டுமே உயர்த்தியுள்ளது. சாகுபடிச் செலவோடு ஒப்பிடும்போது இந்த உயர்வு யானைப் பசிக்குச் சோளப்பொறி போன்றது என்கிறார்கள் விவசாயிகள்.

தமிழக அரசிடம் எதிர்பார்ப்பு: "வாக்குறுதியை நிறைவேற்றுக!"

மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலை குறைவாக உள்ள நிலையில், நடப்பு பருவத்திற்கான ஊக்கத்தொகை குறித்த அறிவிப்பைத் தமிழக அரசு இதுவரை வெளியிடாதது விவசாயிகளிடையே சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலத்தில் வாக்குறுதி அளித்தபடி, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ம், கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ம் அரசு அறிவித்து வழங்கினால் மட்டுமே இந்த இக்கட்டான சூழலில் விவசாயம் கட்டுப்படியாகும் என அவர்கள் திட்டவட்டமாகக் கூறுகின்றனர்.

மேலும் சட்டீஸ்கர், ஒடிசா, கேரளா போன்ற அண்டை மாநிலங்கள் தங்களின் விவசாயிகளுக்குக் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கி வருவதைச் சுட்டிக்காட்டும் டெல்டா விவசாயிகள், தமிழக அரசும் அதேபோல ஊக்கத்தொகையை கணிசமாக உயர்த்தி தங்களைக் காப்பாற்ற வேண்டும் எனப் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget