மேலும் அறிய

சிறுமிக்கு பாலியல் தொல்லை... டிரைவரை போக்சோவில் கைது செய்து போலீசார் அதிரடி

சௌகத் அலி தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பாபநாசம்: உறவுக்கார சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தஞ்சாவூர் மாவட்டத்தில் உறவுக்காரரின் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிரைவர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம். சௌகத் அலி (40) என்பவர் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது உறவினரான பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். அந்த பெண்ணின் மகனுக்கு கடந்த மே மாத இறுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச்சைக்காக புதுக்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மகனை கவனிப்பதற்காக அவர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அப்போது தனது 11 வயது மகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில், உறவினரான சௌகத் அலியின் வீட்டில் தங்கவைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. மகனை மருத்துவமனையில் கவனித்துக் கொண்டிருந்த நிலையில், சிறுமி தனது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கதறி அழுதுள்ளார்.

அப்போது, சௌகத் அலி தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்து கொண்டதாகவும், தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் சிறுமி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் உடனடியாக தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார்.

புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுமியிடம் தனியாக விசாரணை நடத்தப்பட்டதுடன், சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆதாரங்களும் சேகரிக்கப்பட்டன.

விசாரணையின் முடிவில், சிறுமிக்கு சௌகத் அலி பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதாக தெரியவந்தது. இதையடுத்து குழந்தைகள் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு சட்டமான (போக்சோ) சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சௌகத் அலியை கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட சௌகத் அலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. உறவினர் வீட்டிலேயே சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பெற்றோர்கள் மத்தியில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

பேராவூரணி கல்லூரியில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி
பேராவூரணி கல்லூரியில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்: மாணவ, மாணவிகள் அவதி
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
தஞ்சாவூரில் இன்னைக்கு இப்படிதாங்க இருந்துச்சு வானிலை... இரவு மழை பெய்யுமா?
Thanjavur power cut 08.07.2026:  
Thanjavur power cut 08.07.2026:  "நாளைக்கு கரண்ட் லீவ் போட்டுருக்கு... நீங்க இன்னைக்கே ரெடி ஆயிடுங்க"  தஞ்சையில் 8 மணி நேர மின்தடை
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
ஆதவ் அர்ஜூனாவை விட மாட்டோம்.! சிபிஐயிடம் பட்டியலிட்டு புகார் கொடுத்த திமுக- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TASMAC SHOP : மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
மதுப்பிரியர்களுக்கு குஷியோ குஷி.! தலைகீழாக மாறப்போகுது டாஸ்மாக் கடை- கலக்கும் தமிழக அரசு
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Embed widget