ரூ.60,000 ஆரம்ப சம்பளத்தில் பொதுத்துறை நிறுவன வேலை: கோல் இந்தியா லிமிடெட் அதிரடி அறிவிப்பு!
மத்திய அரசு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணிபுரிய விரும்பும் தகுதியான இளம் பொறியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தஞ்சாவூர்: இந்திய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் புகழ்பெற்ற 'மகாரத்னா' பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட் (Coal India Limited), தற்போது காலியாக உள்ள மேலாண்மை பயிற்சி (Management Trainee) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை (ஜூன் 7) கடைசி நாளாகும்.
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாகவும், இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த நிலக்கரியில் சுமார் 75 சதவீதத்தை உற்பத்தி செய்யும் நிறுவனமாகவும் திகழ்கிறது. சுமார் 2.12 லட்சம் பணியாளர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய பெருநிறுவன வேலைவாய்ப்பு வழங்குநர்களில் ஒன்றாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலைவாய்ப்பு குறித்த முழுமையான விபரங்கள் பின்வருமாறு:
பணி மற்றும் காலியிடங்கள் விபரம்
அறிவிப்பு எண்: 01/2026
பணியின் பெயர்: மேலாண்மை பயிற்சியாளர் - சுரங்கவியல் (Management Trainee - Mining)
மொத்த காலியிடங்கள்: 276 இடங்கள்
மாதச் சம்பளம்
இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஆரம்ப கால அடிப்படையாக மாதம் ரூ.60,000 முதல் ரூ.80,000 வரை கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும்.
வயது வரம்பு மற்றும் தளர்வுகள்
30.04.2026 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
அரசு விதிமுறைப்படி வயது வரம்பு தளர்வு:
எஸ்சி (SC) / எஸ்டி (ST) பிரிவினருக்கு - 5 ஆண்டுகள்
ஓபிசி (OBC) பிரிவினருக்கு - 3 ஆண்டுகள் வரை உச்ச வயது வரம்பில் சலுகை வழங்கப்படும்.
கல்வி மற்றும் தொழில்நுட்பத் தகுதி
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் பொறியியல் துறையில் சுரங்கவியல் பிரிவில் (B.E அல்லது B.Tech - Mining) குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதனுடன், கேட் - 2025 (GATE - 2025) தேர்வு எழுதி தகுதி பெற்றிருப்பது கட்டாயமாகும்.
தேர்வு செய்யப்படும் முறை
விண்ணப்பதாரர்கள் 'கேட் - 2025' தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Shortlist) தயாரிக்கப்படும். இதன் அடிப்படையில் தகுதியான நபர்கள் அடுத்த கட்டமாக நேர்முகத்தேர்விற்கு (Interview) அழைக்கப்படுவர்.
நேர்முகத்தேர்வு குறித்த விபரங்கள் விண்ணப்பதாரர்களின் மின்னஞ்சல் (E-mail) முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.
நேர்முகத்தேர்வின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் (Original Certificates) சரிபார்ப்பிற்காக சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000 (கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும்).
எஸ்சி (SC), எஸ்டி (ST), மாற்றுத்திறனாளிகள் (PwBD) மற்றும் முன்னாள் ராணுவத்தினர் (ESM) பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
தகுதியுடைய நபர்கள் கோல் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.coalindia.in என்ற முகவரிக்குச் சென்று, ஆன்லைன் (Online) முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 07.06.2026
மத்திய அரசு நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் பணிபுரிய விரும்பும் தகுதியான இளம் பொறியாளர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்






















