மேலும் அறிய

முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!

பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் முன்பட்ட குறுவை இதுவரை 3 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் தற்போது முன்பட்ட குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்காக விவசாயிகள் நாற்றங்கால் தயாரிப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் நெல் களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா, குருவை, கோடை என மூன்று போகும் சாகுபடி நடைபெறும். தஞ்சையின் முக்கிய சாகுபடி பயிராக நெல் உள்ளது. கரும்பு, நிலக்கடலை, உளுந்து, சோளம் என்று பயிரிடப்பட்டாலும் அதிக பரப்பளவில் நெல் சாகுபடியை தான் விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

நெல் அதிகம் விளையும் தஞ்சை மாவட்டத்தில் தற்போது சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் ஒரு சில பகுதிகளில் தாளடி சாகுபடியும் நடைபெறும். தற்போது தஞ்சை மாவட்டத்தில் முற்பட்ட குறுவை சாகுபடி நடைபெற்று வருகிறது. 

தஞ்சை மாவட்டம் திருவையாறு, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, பாபநாசம், அம்மாபேட்டை, மாரியம்மன் கோவில், சூரக்கோட்டை, வாளமரக்கோட்டை, காட்டூர், உள்ளூர், மடிகை, வாண்டையார் இருப்பு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கோடை சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே விவசாயிகள் நடவு செய்யப்பட்ட பகுதியில் தற்போது உரம் தெளிப்பது, களை எடுப்பது உள்ளிட்ட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒரு சில பகுதியில் தற்போது நாற்றங்கால் தயாரிக்கப்பட்டு நடவு பணியும் நடைபெற்று வருகிறது.

அதன்படி பூச்சி தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஒரு சில பகுதிகளில் விவசாயிகள் மருந்து தெளிக்கும் பணிகளும் மேற்கொண்டுள்ளனர். பூதலூர் பகுதியில்  முன்பட்ட குறுவை சாகுபடியில் களை எடுக்கும் பணியில் பெண் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பூதலூர் வட்டாரத்தில் 3,750 ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி நடந்து வருகிறது. கல்லணை தலைப்பில் அமைந்துள்ள பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் காவிரி கரையோர பகுதிகளில் முன்பட்ட குறுவை சாகுபடி நடந்து வருகிறது. கோடை வெப்பத்தை தாங்கி வளரும் அம்பை 16 நெல் ரகத்தை பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். அக்னி நட்சத்திர வெயில் கொளுத்தியபோதும் விவசாயிகள் கண்ணும் கருத்துமாக பயிர் செய்த நெற்பயிரை கவனித்து வருகின்றனர்.

தற்போது நடவு செய்த முன்பட்ட குறுவை நெல் வயல்களில் மேலும் இடும் பணிகள், களை எடுக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் திருக்காட்டுப்பள்ளி, அகரப்பேட்டை ஆகிய பகுதிகளில் ஆழ்துளை கிணறு வசதி உள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடி செய்துள்ளனர். 

பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் முன்பட்ட குறுவை இதுவரை 3 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வப்போது கோடை மழை பெய்து வருவது பயிர்களுக்கு நன்மையாக இருக்கும் என்றும், நடவு செய்யப்பட்ட முன்பட்ட குறுவைப் பயிர்கள் நல்ல நிலையில் வளர்ந்து வருவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
புதிய கட்சியை நாளை அறிவிக்கிறார் அண்ணாமலை.? மதியம் 12 மணிக்கு மக்களுடன் பேசுவதாக பதிவு
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
Hyundai i20 Facelift: டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
டக்கரான ஒரு கார் விரைவில் டாப் டக்கரா வரப் போகுது; தரமான ஐ20 ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஹூண்டாய்
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Maruti Flex Fuel Car: பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
பெட்ரோல், டீசல் பத்தின கவலைய விட்டுடுங்க; வந்துடுச்சு நாட்டின் முதல் Flex Fuel கார்; அசத்திய மாருதி
Embed widget