நாகையில் அரியவகை ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர். மகிழ்ச்சியாக கடலை நோக்கி ஆமை குஞ்சுகள் நீந்தி சென்றன. 58 ஆயிரத்து143 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு,  50 ஆயிரம் ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளது.

 

நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கோடியக்கரை முதல் கொள்ளிடம் வரை 182 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரை பகுதிக்கு வரும் ஆமை இனங்கள் அங்குள்ள மணல் குன்றுகளில் முட்டையிட்டு செல்கின்றன. இந்நிலையில் முட்டைகளை சேகரித்து வரும் மாவட்ட வனச்சரக அலுவலர்கள் சீர்காழி, நாகை, கோடியக்கரை உள்ளிட்ட எட்டு இடங்களில் குஞ்சு பொரிப்பகம் அமைத்து முட்டைகளை 45 நாட்கள் முதல் 60 நாட்கள் வரை அடைகாத்து குஞ்சு பொறிக்க செய்து கடலில் விடுகின்றனர்.



 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நாகை, சாமந்தான்பேட்டை, நாகூர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முட்டைகளில் சாமந்தான்பேட்டை செயற்கை குஞ்சு பொரிப்பகத்தில்  இருந்து விடப்பட்ட நிலையில் இன்று  109 ஆலிவ் ரெட்லி ஆமைகள் குஞ்சு பொரித்தன. இதனை இன்று  வனச்சரக அலுவலர் ஆதிலிங்கம், வனக்காப்பாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கடலில் விட்டனர். அப்போது  குஞ்சுகள் தாய்வீடு திரும்பும் உற்சாகத்துடன் கடலில் நீந்தி சென்றன. 



 

நாகை மாவட்டம் முழுவதும் இதுவரை இல்லாத அளவாக இவ்வாண்டு 58 ஆயிரத்து143 ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு இதுவரை சுமார் 50 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகவும், ஆலிவ் ரெட்லி ஆமை குஞ்சுகள் கடலில் விடுவதில் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இதில் வேட்டை தடுப்பு காவலர் சசிகுமார், கடல் ஆமை முட்டை சேகரிக்கும் அலுவலர் அருணாச்சலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண