தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ நேரில் மனு அளித்தார். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க.அன்பழகன் அதற்கான கோரிக்கை மனுவை வழங்கினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 23ம் தேதி, “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்துக்காக, செயல்படுத்தப்பட வேண்டிய 10 அம்சங்கள் அடங்கிய பட்டியலை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கும்பகோணம் தொகுதியில் பொதுமக்களின் நீண்டகால, மிக முக்கிய கோரிக்கைகளை ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. இதில், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய வருவாய் மாவட்டம் அறிவிக்க வேண்டும். கும்பகோணம் பேருந்து நிலையத்துக்கு, நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கும்பகோணத்தில் புதிதாக இடம் தேர்வு செய்து, நிலம் கையகப்படுத்தி, அரசின் நிதியுதவியின் மூலம், மத்திய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டும்.
கும்பகோணத்தில் மத்திய பேருந்து நிலையம்... கலெக்டரிடம் கோரிக்கை பட்டியல் கொடுத்த எம்எல்ஏ
என்.நாகராஜன் | 08 Sep 2022 06:06 PM (IST)
மத்திய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் கும்பகோணம் தொகுதி எம்எல்ஏ நேரில் மனு அளித்தார்.
தஞ்சை கலக்டர் தினேஷ் பொன்ராஜ்
Published at: 08 Sep 2022 06:06 PM (IST)