மேலும் அறிய

1.38 லட்சம் ஏக்கரை தாண்டி குறுவை சாகுபடி பணி: இறுதிக்கட்ட பணியில் விவசாயிகள் மும்முரம்

டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா 13 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 1.38 லட்சம் ஏக்கரை தாண்டி நடவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள பகுதிகளிலும் விவசாயிகள் நடவுப்பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர். வரும் 31ம் தேதியுடன் குறுவை சாகுபடி பருவகாலம் நிறைவடைகிறது என்பதால் விவசாயிகள் வெகு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை விளங்குகிறது. இந்த மாவட்டங்கள் காவிரி டெல்டா பகுதி என அழைக்கப்படுகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு ஜூன் 15ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் தண்ணீர் பிரித்து விடப்பட்டது.

இதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா 13 லட்சம் ஏக்கர் சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை பகுதிகளில் தற்போது குறுவை சாகுபடி பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறுவை நடவு மற்றும் நேரடி நெல் விதைப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 1 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது இறுதி கட்ட நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 38 ஆயிரம் ஏக்கரை தாண்டி நடவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் குறுவை சாகுபடி நடைபெறும் என்பதால் இலக்கை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுவை சாகுபடிக்காக தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து அவ்வப்போது உரங்கள் சரக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கிறது. யூரியா, டிஏபி, காம்ப்ளக்ஸ், பொட்டாஸ் உரங்கள் சாகுபடிக்கு தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் விற்பனை நிலையங்களில் விதை நெல்கள் மற்றும் உரங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் கோடை சாகுபடி அறுவடை பணிகளும் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் தஞ்சை மாவட்டத்தில் உள்ள சேமிப்பு கிடங்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து லாரிகள் மூலம் அரவைக்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

மேலும் அரவைக்கு பின் நெல்கள் மீண்டும் தஞ்சையில் உள்ள சேமிப்பு இடங்களுக்கு கொண்டு வரப்பட்டு பொது விநியோகத் திட்டத்திற்காக லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்திற்கும், சரக்கு ரயில் மூலம் வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் சில தினங்களில் கோடை அறுவடை பணிகள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இம்மாத இறுதி வரை மட்டுமே குறுவை சாகுபடி பணிகள் நடக்கும். ஆனால் விவசாயப்பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காத நிலையே நீடித்து வருகிறது. இதனால் நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ள தொழிலாளர்களை மாவட்ட நிர்வாகம் சார்பில் விவசாய பணிக்கு அனுப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |
சினிமா காதலன் AVM சரவணன் காலமானார் அதிர்ச்சியில் திரையுலகம் | AVM Studios AVM Saravanan Death
OPS Delhi Visit |20 நிமிட பேச்சுவார்த்தை!DEAL-ஐ முடித்த குருமூர்த்திOPS அமித்ஷா சந்திப்பின் பின்னணி?
OPS Delhi Visit | OPS டெல்லி விசிட்!தனிக்கட்சியா? பாஜகவா?அரசியலில் திடீர் ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
‘We are not allowing’  இந்து முன்னணியினரை தடுத்து நிறுத்திய போலீஸ் கமிஷனர் - யார் இந்த  லோகநாதன் IPS?
‘We are not allowing’ யார் இந்த மதுரை கமிஷனர் லோகநாதன் IPS..?
Sengottaiyan TVK: :  ‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
‘டெலிட் செய்த அட்மின் – கடுப்பான செங்கோட்டையன்’ மீண்டு வந்த ஜெ.போஸ்ட்ர்..!
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
சென்னை விமான நிலையத்தில் 39 விமானங்கள் ரத்து: பயணிகள் கடும் அவதி! காரணம் என்ன?
Amit Shah TN Visit : ‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
‘திருப்பரங்குன்றம் விவகாரத்தை கையிலெடுக்கும் பாஜக’ தமிழ்நாடு வருகிறார் அமித் ஷா..!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
எடப்பாடி பழனிசாமி - பாமக: கூட்டணி அமைக்குமா அதிமுக? பரபரப்பை கிளப்பிய அரசியல் நகர்வு!
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Fastest Bikes: இந்தியாவின் அதிவேகமான பைக்குகள் - 4.8 விநாடிகளில் 100 கிமீ வேகம் - டாப் ஸ்பீடில் 190KM/h
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
Cheapest 5 Seater EV: கெத்து காட்டும் டாடா.. 5 சீட்டர் மலிவான ev கார் இது தான்! முழு விவரம்
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
AVM Saravanan Passed Away: நேற்று பிறந்தநாள்! இன்று மறைவு.. காலமானார் ஏ.வி.எம் சரவணன்.. திரையுலகினர் அஞ்சலி
Embed widget