மேலும் அறிய

மன்னர் ராஜகோபால தொண்டைமான் மணிமண்டபம் பணிகள் நிறைவடையும் நிலை?

நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகம் ரூ.3.02 கோடியில் கட்டப்படுகிறது. மறைந்த மன்னர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமாகவும் செயல்படும்.

தஞ்சாவூர்: புதுக்கோட்டையில் மன்னர் ராஜகோபால தொண்டைமானுக்கு கட்டப்பட்டும் வரும் மணிமண்டபம் பணிகள் இந்த மாதத்திற்குள் நிறைவடையும் என்று தெரிய வந்துள்ளது. ஒரு வருடமாக நடந்து வரும் இந்த பணிகள் நிறைவடைந்து எப்போது திறப்பு விழா நடக்கும் என்று புதுக்கோட்டை மக்கள் வெகுவாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தென்கிழக்கு மூலையில் சுமார் 760.50 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மொத்த செலவு ரூ.3.02 கோடி ஆகும். இந்த நினைவுச் சின்னம், மறைந்த மன்னர் பயன்படுத்திய பொருட்களை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகமாகவும் செயல்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், 530 பேர் அமரக்கூடிய ஒரு பெரிய கூட்ட அரங்கமும், முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்கான ஓய்வறைகளும் இதில் அமைக்கப்படும்.

மன்னர் ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு நினைவு மணிமண்டபப் பணிகளை கடந்த மாதம் அமைச்சர்கள் ஆய்வு செய்து பணிகளை முடுக்கி விட்டு சென்றனர். தற்போது பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது என்று தெரிய வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிந்து விடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நினைவாக, அவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, இந்த நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் எம்.பி. சாமிநாதன் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி ஆகியோர் கடந்த மாதத்தில் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது நினைவு சின்னத்தின் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தி, ஆலோசனைகளையும் வழங்கி சென்றனர்.

மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டு வரும் இந்த நினைவுச் சின்னம், மன்னரின் வாழ்க்கை முறையை சித்தரிக்கும் பொருட்களையும், 530 பேர் அமரக்கூடிய கூட்ட அரங்கம் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான ஓய்வறைகளையும் கொண்டிருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரி 26 அன்று தொடங்கப்பட்ட இந்தப் பணிகள் தற்போது நிறைவு பெறும் நிலையில் உள்ளது என்றும் தெரிய வந்துள்ளது. 

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர்களில் ஒருவரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது ஆட்சியின் போது பல மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியவர். அவரது நினைவாக இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படுவது, அவரது பங்களிப்பை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகும்.

தமிழகத்தில் 300 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட புதுக்கோட்டை சமஸ்தானத்தின் 9-வது மன்னரான ராஜா ராஜகோபால தொண்டைமான், தனது பதவிக்காலத்தில் மக்களின் நலனுக்காக கல்வி, போக்குவரத்து, விவசாயம், நீர்ப்பாசனம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தித் தந்தார்.

மிகவும் பின்தங்கியிருந்த புதுக்கோட்டையை முன்னேற்றும் வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, 1974-ம் ஆண்டு தனி மாவட்டமாக அறிவித்தார். அப்போது கலைஞர் கருணாநிதி கேட்டுக் கொண்டதற்கிணங்க மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க மன்னர் ராஜகோபால தொண்டைமான், தான் வாழ்ந்த 99.99 ஏக்கர் பரப்பு கொண்ட அரண்மனை வளாகத்தை மிகவும் குறைந்த தொகைக்கு மகிழ்ச்சியுடன் அரசுக்கு வழங்கினார்.

அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில், மன்னரின் உருவச்சிலையை கடந்த 2000-ம் ஆண்டு மார்ச் 14-ம் தேதி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலைஞர் கருணாநிதி திறந்து வைத்தார். மேலும் கலெக்டர்  அலுவலகத்துக்கு ‘மன்னர் ராஜகோபால தொண்டைமான் மாளிகை’ என்று பெயர் சூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாதுகாப்புக்காக புதிய கேமராக்கள்: பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிரடி நடவடிக்கை!
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
தஞ்சையில் மூத்த குடிமக்கள் எழுச்சி! 39-ம் ஆண்டு விழாவில் அரசுக்கு நன்றி
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
கிரிப்டோ மோசடி: கும்பகோணத்தில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவிப்பு #CryptoScam #TamilNews
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று 10ம் வகுப்பு பொதுத் தேர்வு: 30,080 பேர் பங்கேற்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hormuz Trump New Warning: “ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
“ஹார்முஸ்ல கண்ணிவெடி வச்சா உங்கள கலைச்சு போட்டுடுவேன்“; ஈரானுக்கு ட்ரம்ப் புதிய மிரட்டல்
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
TN Roundup: வேலையை காட்டிய தங்கம், விறகு கட்டைகளின் விலை உயர்வு, திருச்சியில் மோடி -தமிழகத்தில் இதுவரை
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
டபுள் கேம் ஆடிய பாஜக..! கட்டுக்கதை எல்லாம் வீணா போச்சு, எலெக்‌ஷன்ல அடி உறுதி? 150 கிமீ பொய்கள்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
USA தாவிய அம்பானி..! புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ரூ.27.5 லட்சம் கோடி - குஷியில் ட்ரம்ப்
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Mahindra Discount: ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி..! தூக்கி கொடுத்த மஹிந்த்ரா - எந்தெந்த SUV, EVக்கு எவ்வளவு ஆஃபர்?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
Gas Shortage: நாலே பேருக்கு தான்..! கேஸ் சிலிண்டர் - மத்திய அரசு திட்டவட்டம், யாருக்கு முக்கியத்துவம் தெரியுமா?
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
விஜய் குடும்ப விவகாரம்.. பஞ்சாயத்து பண்ண ரெடி.. லட்சுமி ராமகிருஷ்ணன் அதிரடி!
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Innova Hycross: ரூ.1.8 லட்சம் போதும்..! இன்னோவா ஹைக்ராஸ்-க்கான EMI திட்டம் - ஹைப்ரிட் காரில் பறக்கலாம்..
Embed widget