மேலும் அறிய

இதய நோய்கள் அதிகரிப்பு… உயிர் காக்க போராடும் அவசர சிகிச்சை பிரிவு: மீனாட்சி மருத்துவமனை நிபுணர்கள் விளக்கம்

டெல்டா பகுதியிலேயே, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உயிர் காக்கும் வசதிகளுடன் பிரத்யேக அவசர சிகிச்சை பிரிவை நிறுவிய முதல் மீனாட்சி மருத்துவமனைதான்.

தஞ்சாவூர்: "அவசர சிகிச்சை தேவைப்படும் நேர்வுகளில் இதய நோய்களே தொடர்ந்து முதன்மைக் காரணமாக உள்ளன. இதனைத் தொடர்ந்து சாலை விபத்துகள் மற்றும் தாக்குதல்களால் ஏற்படும் காயங்கள் 2வது இடத்தில் உள்ளன" என்று தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு நிபுணர்கள் தெரிவித்தனர்.

உலக அவசரநிலை மருத்துவ தினம்

ஆண்டுதோறும் மே 27 அன்று அனுசரிக்கப்படும் 'உலக அவசர நிலை மருத்துவ தினத்தை' முன்னிட்டுப் தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்ததாவது: "எங்கள் பிரிவு ஒவ்வொரு மாதமும் சுமார் 1,400 அவசரநிலை சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை கையாள்கிறது. இவற்றில் பெரும்பான்மையானவை இதயம் தொடர்பான பிரச்சனைகளாகவும் மற்றும் விபத்துகள் காரணமாக ஏற்படும் காயங்களாகவும் இருக்கின்றன," என்றனர்.

அவசர சிகிச்சைக்கான தேவை அதிகரித்து வருவது குறித்து, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர மருத்துவப் பிரிவின் தலைவரும் மற்றும் முதுநிலை நிபுணருமான டாக்டர் சரவணவேல் கூறுகையில், “உரிய நேரத்தில் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும், ஆரம்ப நிலையிலேயே தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவதன் மூலமும் இதயம் தொடர்பான அவசரச் சிக்கல்களை 90 சதவீதத்திற்கும் அதிகமான அளவிற்கு தவிர்க்க முடியும்.

அனைத்து சிறப்பு மருத்துவப்பிரிவு ஒருங்கிணைந்தது

இதய மயக்கவியல் நிபுணர்கள், இதயநாள சிகிச்சை நிபுணர்கள், அவசர சிகிச்சை மருத்துவர்கள், நரம்பியல் - அவசர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் விபத்து - காய சிகிச்சை குழுவினர் ஆகியோர் இணைந்து செயல்படும் வலுவான கூட்டு மருத்துவ அணுகுமுறையின் மூலமாகவே அவசர சிகிச்சைகளில் சிறந்த மற்றும் வெற்றிகரமான தீர்வுகளைச் சாத்தியமாக்க முடியும். மீனாட்சி மருத்துவமனை இந்த அனைத்துச் சிறப்பு மருத்துவப் பிரிவுகளையும் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம், சர்வதேசத் தரத்திற்கு இணையான அவசர சிகிச்சைகளை எங்கள் மருத்துவமனையால் வழங்கி நோயாளிகளின் உயிரை காப்பாற்ற முடிகிறது.

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும்போது முறையாக தலைக்கவசம் அணிவது மற்றும் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாக பின்பற்றுவதன் மூலம் இதுபோன்ற சாலை  விபத்துகளைக் கணிசமாகக் குறைக்க முடியும். இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

நோயறிதல் துல்லியம், சிகிச்சை முடிவுகள் 

அவசரநிலை மருத்துவ சிகிச்சைத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி குறித்துப் பேசிய டாக்டர் சரவணவேல் கூறுகையில், இந்தியாவுக்கு இத்துறை ஒப்பீட்டளவில் புதிது என்றாலும் சமீப ஆண்டுகளில் இது மகத்தான வளர்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக, நோயறிதல் துல்லியம், சிகிச்சை முடிவுகள் மற்றும் நோயாளியின் நிலை குறித்த கணிப்புகளை மேம்படுத்துவதன் மூலம், விரைவான மற்றும் பயனுள்ள முடிவுகளை எடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) பெரிதும் உதவுகிறது. சிறு நகரங்களிலுள்ள பன்முக சிறப்பு மருத்துவமனைகளிலும் கூட தகுதியான அவசரநிலை சிகிச்சை மருத்துவர்கள் தலைமையிலான அவசர சிகிச்சை துறைகள் இயங்கி வருகின்றன என்றார்.

அப்போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் துணை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் வி. பிரவீனும் கலந்துகொண்டார். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அவசர காலங்களில் "கோல்டன் ஹவர்" (பொன்னான நேரம்) என்பதன் முக்கியத்துவத்தை மருத்துவ நிபுணர்கள் இந்த சந்திப்பின் போது மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தினர். ஒருவருக்கு நெஞ்சுவலி, கைகால்களில் மரத்துப்போகும் தன்மை, உடல் சமநிலை இழப்பு, அல்லது பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தோன்றும்போது, அந்தப் பொன்னான நேரத்திற்குள் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவதன் மூலம் மாரடைப்பு (MI), பக்கவாதம் மற்றும் உயிருக்கு அச்சுறுத்தலான  சிக்கல்களின் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

டெல்டா பகுதியிலேயே, அதிநவீன உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உயிர் காக்கும் வசதிகளுடன் பிரத்யேக அவசர சிகிச்சை பிரிவை நிறுவிய முதல் மீனாட்சி மருத்துவமனைதான். நோயாளியின் வீடு அல்லது விபத்து நடந்த இடத்திலிருந்தே தொடங்கும் முதலுதவி, மருத்துவமனைக்கு முந்தைய சேவைகள், மற்றும் தீவிர சிகிச்சை என விரிவான மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன.

30-க்கும் மேற்பட்ட நிபுணர்கள், பயிற்சி பெற்ற செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களுடன் இப்பிரிவு 24 மணி நேரமும் செயல்படுகிறது. மேலும், பக்கவாதம், மற்றும் காயங்களுக்கான பிரத்யேக சிகிச்சை குழுவினர், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான அவசரநிலை சிகிச்சை குழுக்கள் மற்றும் மகப்பேறு, நச்சு முறிவு ஆகியவற்றுக்கான சிறப்புச் சிகிச்சைக் குழுக்களும் இங்கு உள்ளன.

தரமான சிகிச்சை மற்றும் நோயாளியின் பாதுகாப்புக்கான அங்கீகாரமாக, தென் தமிழகத்திலேயே அவசர சிகிச்சை பிரிவுக்கான NABH சான்றிதழைப் பெற்ற முதல் மருத்துவமனை என்ற பெருமையையும் மீனாட்சி மருத்துவமனை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் உலக அவசரநிலை மருத்துவ தினக் கொண்டாட்டத்தின் கருப்பொருளான "அவசர சிகிச்சை மருத்துவக் குழுக்களுக்கான பாதுகாப்பான இடம் - அனைத்து இடங்களிலும் வன்முறையை நிறுத்துங்கள்" என்பதை முன்னிலைப்படுத்திய மருத்துவமனை நிர்வாகம், வன்முறையிலிருந்து சுகாதார சேவை பணியாளர்களை பாதுகாப்பதற்கான அவசர தேவையை வலியுறுத்தியது; 

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உட்பட சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணியாற்றல் சூழல்களை உறுதி செய்ய வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் உயிர்களைக் காப்பாற்ற மருத்துவக் குழுக்கள் 24 மணி நேரமும் பெரும் அழுத்தத்தின் கீழ் செயல்படுகின்றன என்பதை பொது மக்கள் புரிந்து கொள்வது அவசியம். எனவே, சிறந்த சிகிச்சையை தடையின்றி வழங்க சுகாதாரப் பணியாளர்கள், நோயாளிகள் மற்றும் உறவினர்கள் இடையே பரஸ்பர மரியாதையும், பாதுகாப்பான பணிச்சூழலும் நிலவுவது முக்கியமானது என்று இந்த ஆண்டு உலக அவசரநிலை மருத்துவ தின அனுசரிப்பு வலியுறுத்துகிறது.

Advertisement

தலைப்பு செய்திகள்

ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
ஆயிரம் வேரைக் கொன்றவன் பாதி! ஆரோக்கியம் காக்கும் வைத்திய நீதி: மருவிய பழமொழியின் உண்மை இதோ!!!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
கால்நடை மருத்துவப் படிப்புகள்: 16 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம் – கால அவகாசம் ஜூன் 23 வரை நீட்டிப்பு!
"தமிழகத்தில் நடப்பது என்ன ஆட்சி?" - அனல் பறக்கும் அரசியல் விமர்சனத்தை முன்வைத்த பாஜக கருப்பு முருகானந்தம்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!
அமர்க்களம் புகுந்த அழகனின் ஆலயங்கள்: அசுர வதம் செய்த ஆறுபடை வீடுகள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi Trump Meet: பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
பிரான்ஸ் போயும் இதே புராணம் தானா.?! மோடியுடன் பேசிய ட்ரம்ப் 8 போர்களை நிறுத்தியதாக மீண்டும் தம்பட்டம்
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
IND vs AFG: இஷான் கிஷன், சுப்மன்கில் பேயாட்டம்! அடிவாங்கிய ஆப்கானிஸ்தான்! தொடரை வென்ற இந்தியா
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
500 கி.மீட்டருக்கு மேல் மைலேஜ் தரும் Ola இ ஸ்கூட்டர், இ பைக்குகள்! என்னென்ன? விலை எவ்ளோ?
PM Modi at G7: அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
அடி சக்க.! புதிய உலக தெற்கு இணைப்பு கட்டமைப்பு; ஜி7 உச்சிமாநாட்டில் முன்மொழிந்த பிரதமர் மோடி
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
D55 title : தனுஷ் மம்மூட்டி மாஸ் காம்போ...D55 படத்தின் டைட்டில் நாளை அறிவிப்பு
Trump Warns Iran: “ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
“ஒழுங்கா நடந்துக்கலைன்னா மறுபடியும் குண்டு வீசுவோம்“ - ஈரானை எச்சரித்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Aloor Sha Navas: திருச்சி கிழக்கில் சுயேட்சை! அடுத்த தேர்தலில் தனிக்கட்சி! ஆளூர் ஷாநவாஸ் போடும் திட்டம் என்ன?
Embed widget