மேலும் அறிய

கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்

போலீஸ் தரப்பில் விவசாயிகளை ஒருமையில் பேசியதால் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கலெக்டர் அலுவலகத் தரையிலேயே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

தஞ்சாவூர்:  பயிர்க்கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை ஒருமையில் பேசி, கீழே தள்ளிவிட்ட போலீசாரால் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் போர்க்களம் போல் மாறியது. மேலும் பச்சைத்துண்டு அணிந்தவர்களை உள்ளே செல்ல தடை விதித்ததும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மனு அளிப்பதற்காகப் பொதுமக்களுடன் சேர்ந்து ஏராளமான விவசாயிகளும் வந்திருந்தனர். 

ஒருமையில் பேசிய போலீசாரால் தர்ணா!

அப்போது "தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட முனையும் கர்நாடக அரசின் முயற்சியைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும், மத்திய அரசும் இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது" ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத் தலைவர் பழனியப்பன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் நோக்கிப் பேரணியாக வந்தனர்.

அவர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது, அவர்களைப் போராட விடாமல் தடுத்த போலீசார், வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றி கைது செய்ய முயன்றனர். அப்போது, விவசாய சங்கத் தலைவர் பழனியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள், "எங்களை மனு அளிக்க அனுமதியுங்கள்" எனக் கோரியபோது, வல்லம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார், விவசாயிகளைப் பலவந்தமாகக் கீழே தள்ளி, வேனுக்கு இழுத்துச் செல்ல முயன்றனர்.

மேலும், போலீஸ் தரப்பில் விவசாயிகளை ஒருமையில் பேசியதால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், போலீசாரைக் கண்டித்து கலெக்டர் அலுவலகத் தரையிலேயே அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் குதித்தனர்.

விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டபோது, "விவசாயிகளுக்கு இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா? விவசாயிகளைத் தாக்கிய போலீசார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வல்லம் டி.எஸ்.பி காயத்ரி, தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகளிடம் கடுமையான தொனியில் ஒருமையில் பேசியுள்ளார். இதனால் போலீசாருக்கும், விவசாயிகளுக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுப் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

விவசாயிகள் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி போலீஸ் தரப்பு பணிந்தது. இறுதியாக, விவசாயிகளில் ஐந்து பேரை மட்டும் கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். அதன்படி, மாவட்ட கலெக்டர் ரேவதியைச் சந்தித்த விவசாயிகள், தங்கள் கோரிக்கை மனுவை அளித்ததோடு, தங்களை ஒருமையில் பேசிய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் மனு அளித்தனர். இந்த மோதலால் கலெக்டர் அலுவலக வளாகம் போர்களம் போல் காட்சியளித்தது. 

விவசாயிகளின் அடையாளமான ‘பச்சைத் துண்டு’ அணிந்து வந்தவர்களை வளாகத்திற்குள் அனுமதிக்காமல் நுழைவாயிலிலேயே மறித்து நிறுத்தினர். "பச்சைத் துண்டை அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை" என போலீசார் கறாராகக் கூறவே, அதிர்ச்சியடைந்த விவசாயிகள், "தமிழகத்தில் விவசாயிகளின் அடையாளமான பச்சைத் துண்டு அணியக் கூட அனுமதி இல்லையா?" என போலீசாருடன் காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் சிலரும் பச்சைத்துண்டுடன் வந்தனர். அவர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  புதிய கலெக்டராக ரேவதி இன்று பொறுப்பேற்ற நிலையில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து உடன் நடவடிக்கை எடுப்பாரா?  என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள். என்ன செய்யப்போகிறார் கலெக்டர் ரேவதி?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்தில் ஒருமையில் பேசிய போலீசார்... கண்டித்து தர்ணாவில் ஈடுபட்ட விவசாயிகள்
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
தஞ்சையில் பக்தி பரவசம்... வைகாசி விசாகத்தை ஒட்டி கருணாசாமி கோயிலில் ஏழூர் பல்லக்கு புறப்பாடு
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பிளஸ்-2 மாணவர்களே அலர்ட்... மத்திய பாதுகாப்பு படையில் 394 காலிப் பணியிடங்கள்: தேர்வு முறை என்ன?
பள்ளியா? மரணக் குழியா? இடியும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியால் தஞ்சையில் பரபரப்பு!
பள்ளியா? மரணக் குழியா? இடியும் நிலையில் உள்ள தண்ணீர் தொட்டியால் தஞ்சையில் பரபரப்பு!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support
Vijay warns Ministers |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
முதல்வர் விஜய் அணியும் கோட் சூட் ரகசியம் தெரியுமா.? திருச்சியில் அவரே கொடுத்த விளக்கத்த பாருங்க
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
Delimitation Bill: மீண்டும் தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு ஒரே தேர்தல்- மத்திய அரசு மும்முரம்!
US Iran Attacks: போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
போட்டு சாத்திய அமெரிக்கா; பதிலுக்கு அடித்த ஈரான்; மத்திய கிழக்கில் மீண்டும் போரா.? நடப்பது என்ன.?
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
”பேப்பர் லீக், பசங்க வாழ்க்கை நாசமாகுது.. இவரு மாங்கா தோட்டம் பத்தி பேசிட்டு இருக்கார்” - மோடியை சாடும் காங்.,
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
’’1800 அரசு பள்ளிகளில் HM இல்லை; 20 DEO காலியிடங்கள்- அவலத்துக்கு முடிவு எப்போ?’’அன்புமணி ஆதங்கம்!
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
DMK: கொத்தடிமைகள்.. உபி... கொத்துஸ்! இளைஞர்களிடம் இப்படியா கட்சியை கொண்டு போவீங்க? கொதிக்கும் திமுக உடன்பிறப்புகள்
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
TNEA 2026: பொறியியல் படிக்கணுமா? மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
Annamalai: உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
உண்மையான B டீமை இறக்கும் பாஜக..! அண்ணாமலையின் புதிய கட்சி - ஆப்ரேஷன் “கிறிஸ்துவ மிஷினரி”
Embed widget