Ariyalur District power cut: அரியலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் (05-06-2026 ) மின்தடை - பாதிக்கப்படும் பகுதிகளின் விபரம் இதோ
Ariyalur District power cut (05-06-2026): பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படவுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Ariyalur District power cut (05-06-2026): அரியலூர் மாவட்டம் நடுவலூர், அம்பாபூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் (ஜூன் 05, 2026, வெள்ளிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், அரியலூர் மாவட்டம் நடுவலூர், அம்பாபூர் துணை மின் நிலையங்களில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடுவலூர் மற்றும் அம்பாபூர் ஆகிய துணை மின் நிலையங்களில் ஜூன் 5ஆம் தேதி (நாளை மறுநாள்) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மின் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நடுவலூர் துணை மின் நிலையம்:
நடுவலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பின்வரும் பகுதிகளில் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் இருக்காது:
செந்துறை
நடுவலூர்
தேளூர்
கல்லங்குறிச்சி
கலெக்டர் அலுவலகப் பகுதி
அம்பாபூர் துணை மின் நிலையம்:
இதேபோல், அம்பாபூர் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இப்பகுதியைச் சேர்ந்த பின்வரும் கிராமங்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் பாதிக்கப்படும்:
விக்ரமங்கலம்
குணமங்கலம்
சுண்டக்குடி
பூஞ்சோலி
எனவே, இப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளை மின் நிறுத்த நேரத்திற்கு முன்னதாகவே திட்டமிட்டு செய்துகொள்ளுமாறு மின்வாரியத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பராமரிப்பு பணிகள் முடிவடைந்தவுடன் மாலை 5 மணிக்கு மேல் வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
Before You Go
Rahul gandhi | ”காலை வாரி விடக்கூடாது! காங்கிரஸை விமர்சிக்காதீங்க” நேரடியாகவே சொன்ன ராகுல்
ட்ரெண்டிங் செய்திகள்





















