அட காம வெறி கொள்ளைக்காரா… ? ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி.. தலையில் அடித்துக் கொள்ளும் போலீஸ்

திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

Continues below advertisement

தஞ்சாவூர்: புதுசு... புதுசா கிளம்புறாங்கய்யா என்று வடிவேலு பாணியில் மக்கள் நொந்து கொள்கின்றனர். எதற்காக தெரியுங்களா?  அரியலூர் மாவட்டத்தில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட வந்த நிர்வாண கொள்ளையன் கைது செய்யப்பட்ட சம்பவம்தான்.

Continues below advertisement

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே இறவாங்குடி கீழத்தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன். காலமாகிவிட்டார். இவருடைய மனைவி சங்கீதா (42).  தன் மகள்கள் இருவரையும் சென்னையில் படித்து வைத்துள்ளார். மகள்கள் சென்னையில் படிப்பதால் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார் சங்கீதா. இதனால் எதிர் வீட்டில் உள்ள வயதான பாட்டி சாந்தா (70) இரவு நேரங்களில் சங்கீதாவுக்கு துணையாக வந்து படுத்து கொள்வது வழக்கம்.


இந்நிலையில் கடந்த மாதத்தில் இரவு சுமார் 2 மணியளவில் வீட்டின் இரும்பு கேட் வேகமாக திறந்த சத்தம் கேட்டு வெளியே சென்று சாந்தா பார்த்த போது, யாரோ மர்ம நபர் வேகமாக ஓடியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா, சாந்தா இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு திறக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் அறைக்குள் பீரோ திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி சங்கீதா அடைந்தார். பீரோவில் வைத்து இருந்த மூன்றே முக்கால் பவுன் தங்க நகை மற்றும் 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருட்டு போய் இருந்தது. 

இதே போல் வேம்புகுடியை சேர்ந்த துரை என்பவரின் மனைவி அமுதா தனது மகளுடன் தூங்கி கொண்டு இருந்த போது பீரோவில் வைத்து இருந்த அரை பவுன் தோடு காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சங்கீதா மற்றும் அமுதா கொடுத்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் திருட்டு சம்பவங்கள் நடந்த பகுதியில் இருந்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது ஹார்ட் அட்டாக் வரும் அளவிற்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. 

முகமூடி கொள்ளையர்கள், ஜட்டி கொள்ளையர்களை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்த போலீசாருக்கு கண்கள் கூசிவிட்டது. அட ஆமாங்க... அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது நிர்வாணமாக ஒரு நபர் திருட்டு நடந்த வீட்டிற்குள் நுழைவது வீடியோவில் பதிவாகி இருந்தது வீடியோவில் பதிவான நபரின் அடையாளத்தைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை களத்தில் இறங்கினர். 

இந்நிலையில் நேற்று இரவு மீன்சுருட்டி பகுதியில் சுற்றி திரிந்த நபரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போதுதான் அந்த நபர் நிர்வாண கொள்ளையன் என்று தெரிய வந்தது. அந்த நபர் கடலூர் மாவட்டம் பழஞ்சநல்லூர், காலனி தெருவை சேர்ந்த ஜோதி என்பது தெரியவந்தது. மேலும் விசாரணையில் நிர்வாணமாக வீட்டிற்குள் நுழையும் ஜோதி,  பீரோவில் நகை மற்றும் பணத்தை திருடிக் கொண்டு,  தூங்கிக் கொண்டிருக்கும் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்துவிட்டு தப்பி ஓடிவிடுவது வாடிக்கை என்று தெரிய வந்துள்ளது

மேலும் விசாரணையில் சங்கீதா மற்றும் அமுதா ஆகியோர் வீடுகளிலும்  நகை மற்றும் பணத்தை திருடியது ஜோதிதான் என்று விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து ஜோதியை கைது செய்த போலீசார் இதேபோல் ஜோதி வேறு ஏதாவது இடங்களில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளாரா என்பதும் குறித்து விசாரித்து வருகின்றனர். 

Continues below advertisement