உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு கரூரில், மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.


 





கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுயில்உள்ள வளாகத்தில் இன்று சுற்றுச்சூழல் கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில், உலக இயற்கை பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியது.  இந்நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


 




கரூர் மாவட்டத்தில் உலக இயற்கை பாதுகாப்பு நாள் கொண்டாடப்படும் இந்த இனிய தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்ட ஆட்சியராக அலுவலக வளாகத்தில் 5000 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடக்கூடிய ஒரு விழா தொடங்கியுள்ளது. இதில் நாட்டு மரக்கன்றுகளான வேம்பு, அரசு, ஆல், அத்தி, நாவல், உசில், ஆச்சா, புங்கன், மந்தாரை, மகிழம், சரக்கொன்றை முதலியன நடப்படவுள்ளன.  இந்த மரக்கன்றுகள் நடும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார். 


 




 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண