நிலம் வாங்க வேண்டும் என்பது ஒவ்வொரு தனி நபரின் கனவாகும். தனக்கென்று சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு நபரும் கடுமையாக உழைக்கிறார்கள்.

Continues below advertisement

ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு அந்த நிலத்தைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளது. அதாவது எந்த நிலங்களை எல்லாம் வாங்கக்கூடாது? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். 

எந்த நிலங்களை வாங்கக்கூடாது:

1. புறம்போக்கு நிலம்:

Continues below advertisement

2. ஏரி, குளம், ஓடை ஆக்கிரமிப்பு நிலம்

3. அங்கீகாரம் இல்லாத லே அவுட்

4. பட்டா பெயர் மற்றும் கிரயப் பத்திரம் பொருந்தாத நிலம்

5. வழக்கு நிலுவையில் உள்ள சொத்துக்கள்

6. அடமானம் உள்ள நிலங்கள்

7. நஞ்சை நிலம் (மாற்று உத்தரவு இல்லாமல்)

8. போலி பவர் ஆஃப் அட்டர்னி மூலம் விற்கப்படும் நிலம்

9. சர்வே எண் மற்றும் எஃப்எம்பி பொருந்தாத நிலம்

10. வில்லங்கச் சான்றில் குறைபாடு உள்ள சொத்துகள்

சிரமங்கள்:

மேலே கூறிய குறைபாடுகள் உள்ள நிலங்களை வாங்குவதை தவிர்ப்பது எப்போதும் நல்லது ஆகும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் கடுமையான சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும்.

மேலே கூறிய குறைபாடு உள்ள நிலங்களை வாங்கினால் பின்னர் அதை சரி செய்வதற்காகவும், அந்த நிலத்திற்கு உரிய அங்கீகாரம் பெறவும் அரசாங்கத்திடம் மனு அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக நேரிடும்.

குறிப்பாக, ஏரி, குளம், ஓடை போன்ற ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள நிலங்களை வாங்கும்போது அரசின் அங்கீகாரம் கிடைக்காமல் போவது மட்டுமின்றி மழைக்காலங்களில் அந்த இடம் முழுவதும் மழைநீர் சூழ்வதற்கும் வாய்ப்புகள் அதிகம் ஆகும்.

அதேபோல, போலி பவர் ஆஃப் பட்டர்ணி மூலம் வாங்கும் நிலங்களும் காவல்நிலையம், நீதிமன்ற வழக்குகளில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தைச் சந்திக்கும். அதேபோல, அரசு அங்கீகாரம் இல்லாத நிலத்தை வாங்குவதும் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கும். பட்டா இல்லாத நிலங்களை வாங்கும்போதும் கடும் சிரமத்தை உண்டாக்கும்.

நிலம் வாங்கும் முன் கட்டாயம் சரிபார்க்க வேண்டிய ஆவணங்கள்:

1. பட்டா

2. சிட்டா

3. அடங்கல்

4. FMB ஸ்கெட்ச் ( நில அளவைத் தாள்)

5. வில்லங்க சான்று

6. CMDA  மற்றும் DTCP அங்கீகாரம்

7. மூல ஆவணங்கள்

இந்த ஆவணங்களை சரிபார்த்த பின்னர் நிலங்கள் வாங்குவது சிறப்பாகும்.