kallakurichi violence: கல்வி நிறுவனங்களில் இனி உயிரிழப்பு நிகழ்ந்தால் சிபிசிஐடி விசாரணை - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் மரணங்கள் நிகழும் பட்சத்தில் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் மரணங்கள் நிகழும் பட்சத்தில் சிபிசிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Continues below advertisement

கள்ளக்குறிச்சி சின்னசேலம் அருகே கனியா மூரில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் கலவரமாக வெடித்த நிலையில், வருங்காலத்தில் கல்வி நிறுவனங்களில் மரணங்கள் நிகழும் போதெல்லாம், சிபி-சிஐடி மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் சமூக ஊடகங்களில் இணை விசாரணை மேற்கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள கனியாவூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் நேற்று பள்ளி அருகே சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்கள் பள்ளிக்குள் நுழைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயற்சி செய்த நிலையில் போராட்டம் சிறிது நேரத்தில் வன்முறையாக மாறியது. காவல்துறை வாகனத்தை கவிழ்க்க போராட்டக்காரர்கள் முயற்சித்த நிலையில் பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பள்ளியில் இருந்த பேருந்துகள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிய போராட்டகாரர்கள் பெஞ்ச் உள்ளிட்ட பொருட்களை தூக்கி சென்றனர். 

144 தடை உத்தரவு

இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர் நேற்று மாலை வன்முறை நடைபெற்ற இடங்களை  உள்துறைச் செயலாளர் பணீந்தர் ரெட்டியும், காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபுவும் பார்வையிட்டனர். இதனிடையே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

திட்டமிட்ட வன்முறை

அப்போது பேசிய நீதிபதி, கள்ளக்குறிச்சி சம்பவம் திட்டமிட்ட வன்முறை என்றும், இதன் பின்னணியில் இருப்பது யார் என்றும் சரமாரியாக கேள்வியெழுப்பினார். மேலும் மாணவர்களின் டி.சி.க்களை எரிக்க யார் உரிமை கொடுத்தது என கேட்ட நீதிபதி சதீஷ்குமார், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பின்னரும் ஏன் போராட்டம் நடத்தினீர்கள் என ஸ்ரீமதியின் பெற்றோரிடம் கேள்வியெழுப்பினர். மேலும் வன்முறை சம்பவம் கட்டுக்குள் வந்தவுடன் வேலை முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம் என தெரித்த அவர், வன்முறை சம்பவத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 29ம் தேதி போலீஸ் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். வழக்கை தொடர்ந்து நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். 

மறு கூராய்வு

இறந்த மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் கொண்ட குழு மறு கூராய்வு செய்யலாம் என்று நீதிபதி தெரிவித்தார்.  மேலும் மறு உடல் கூராய்வின் போது வழக்கறிஞருடன் மாணவியின் தந்தை உடனிருக்கலாம் என்றும், இதனை முழுவதுமாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அதேசமயம் மறுகூராய்வு முடிந்த பிறகு மாணவியின் உடலை எந்தவித எதிர்ப்புமின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement