பேராசை பெருநஷ்டம்... 'டாஸ்க் முடித்தால் அதிக கமிஷன்'... ரூ.30 லட்சம் இழந்த வாலிபர்கள்... ...!

சிறிய தொகை முதலீடு செய்து, டாஸ்க் முடித்தால் அதிக கமிஷன் தருவதாக கூறி 30லட்சம் இழந்த இளைஞர்கள்.

Continues below advertisement

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஆலகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் மகன் மருதுபாண்டியன் (வயது 29) தனியார் நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதி பணிசெய்து வருகிறார். இவரை மொபைல் போனில் கடந்த 4ம் தேதி தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைனில் பகுதிநேர வேலை இருப்பதாக கூறினார். சிறிய தொகை முதலீடு செய்து, டாஸ்க் முடித்தால் அதிக கமிஷன் தருவதாக கூறினார். அதன்பேரில், மருதுபாண்டியன் 6 தவணைகளாக 3.70 லட்சம் ரூபாய் முதலீடு செய்து, டாஸ்க்கை முடித்துள்ளார். ஆனால், மர்ம நபர் கூறியபடி பணம் தராமல், மோசடி செய்துள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மருதுபாண்டியன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Continues below advertisement

இதேபோல், புதுச்சேரி அரும்பார்த்தபுரம் சேக்கிழார் வீதியை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவரை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதை நம்பி மகேஷ்குமார் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தக பங்குசந்தையில் ரூ. 27 லட்சத்து 25 ஆயிரத்து 389 செலுத்தியுள்ளார்.

இதைநம்பி மகேஷ்குமார் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தக பங்குசந்தையில் ரூ. 27 லட்சத்து 25 ஆயிரத்து 389 செலுத்தியுள்ளார். இதற்கு, ரூ.30 லட்சம் லாபம் கிடைத்துள்ளதாக காட்டியுள்ளனர். இதையடுத்து, லாப பணத்தை மகேஷ்குமார் எடுக்க முயன்றபோது, முடியவில்லை.

பின்னர், மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன்பிறகே ஆன்லைன் மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது மகேஷ்குமாருக்கு தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.

அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.

சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க

மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.

Continues below advertisement