தூத்துக்குடி அருகே விளாத்திகுளத்தில் 12ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் காணவில்லை என்று புகார் கொடுக்க காவல் நிலையம் சென்றபோது, காவல் ஆய்வாளர் அவதூறாகப் பேசியதும் சர்ச்சைகளைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’விளாத்திக்குளம்வேடநத்தம்பள்ளிமாணவிபாலியல்வன்கொடுமை - கொலைநாட்டையேஉலுக்கியுள்ளது. பாதிக்கப்பட்டுஉயிரிழந்தஅச்சிறுமியின்குரலாகநீதிகேட்டுபாராளுமன்றம்முதல்நீதிமன்றம்வரைஅதிமுக ஒலித்துவருகிறது.

Continues below advertisement

கனிமொழியை விரட்டி அனுப்பிய மக்கள்

களத்தில்உறவினர்கள் - ஊர்மக்கள்போராட்டமும்வலுப்பெற்றுவருகிறது. திமுகஅரசின்சாக்குபோக்குகளைநம்பத்தயாராகஇல்லைஎன்பதற்கு, பொம்மைமுதல்வரின்தங்கையும், திமுகதுணைப்பொதுச்செயலாளருமானகனிமொழியைமக்கள்விரட்டிஅனுப்பியதேசாட்சி!

இவ்வளவுகொடூரமானவழக்கில்குற்றவாளியைக்கண்டறியமுடியவில்லைஎன்பதுஎவ்வளவுபெரியகேவலம்ஸ்டாலின் அவர்களே? காவல்துறைசிஸ்டத்தைநீங்கள்எந்தஅளவிற்குசீரழித்துஉள்ளீர்கள்என்பதுஇப்போதாவதுஉங்களுக்குப்புரிகிறதா? இதுஇத்தோடுநிற்கப்போவதுஇல்லை.

மார்ச் 17-ல் மாபெரும் போராட்டம்

வரும் 17.03.2026 (செவ்வாய்க்கிழமை) அன்றுதமிழகப்பெண்களின்பாதுகாப்பைநிர்கதியாக்கியஉங்கள்அரசுக்குமுடிவுரைகட்டப்போகும்மாபெரும்போராட்டத்தின்மூலம்வருவாய்மாவட்டவாரியாகமக்கள்மன்றத்தில்களம்காணஉள்ளதுஅதிமுக தலைமையிலானதேசியஜனநாயகக்கூட்டணி.

#தூத்துக்குடி_Nirbhaya -விற்குஉரியநீதிகிடைப்பதைஅஇஅதிமுகஉறுதிசெய்யும்! விரைவில்அமையப்போகும்அதிமுக அரசு, எப்படிஜெயலலிதாதாய்போலபெண்களைக்காத்தார்களோ, அதேபோல, ஒருதமையனாகநின்றுதமிழகப்பெண்களைஅரண்போல்காக்கும்என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.