Breaking LIVE: நாளை அதிமுக பொதுக்குழு அறிவிப்பு - தீவிர ஆலோசனை
அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 10 Jul 2022 10:58 AM
Background
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை...More
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது. அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதேபோல் தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில் இணைய தளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவிகள் பதிவு செய்து உள் நுழையலாம். முன்னதாக இணைய தளத்தில், இத்திட்டத்தில் பயன்பெறும் மாணவியர்களின் விவரங்களை 25.06.2022 முதல் 30.06.2022க்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில் பதிவிடப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.இத்திட்டத்திற்கென இளநிலை பயிலும் மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசு பள்ளி விவரங்கள் பெறப்பட்டு வந்தன.இதனிடையே மாணவிகள் வேண்டுகோளை ஏற்று உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாணவிகள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கால அவகாசம் ஜூலை 10 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன்படி இன்று விண்ணப்பங்களை தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இதுவரை இந்த திட்டத்தில் 2.8 லட்சம் மாணவிகள் விண்ணப்பத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் எந்தெந்த ஆவண நகல்களைக் கொண்டுவர வேண்டும்?1. ஆதார் நகல்,2. வங்கி கணக்குப் புத்தக நகல்,3. பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல்,4. பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்.5.சுய விவரங்கள், 6.வங்கிக் கணக்கு விவரங்கள்.இவ்வாறு உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்பேஸ்புக் பக்கத்தில் தொடரட்விட்டர் பக்கத்தில் தொடரயூடியூபில் வீடியோக்களை காண
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Breaking LIVE: நாளை அதிமுக பொதுக்குழு அறிவிப்பு - தீவிர ஆலோசனை
நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இல்லங்களில் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை...பொதுக்குழு நடக்குமா இல்லையா என்பது குறித்த தீர்ப்பை காலை 9 மணிக்கு உயர்நீதிமன்றம் வெளியிடுகிறது