IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: சென்னை, கோவை, மதுரைக்கு புதிய அதிகாரிகள் நியமனம்.. முழு விபரம்!
சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த உத்தரவின் மூலம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் நிர்வாக நலன் கருதி ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை தலைமைச் செயலாளர் மா. சாய் குமார் வெளியிட்டுள்ளார்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய முக்கிய மாநகராட்சிகளின் ஆணையர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இந்த உத்தரவின் மூலம் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.
புதிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர்
அரசாணையின்படி, ஆளுநரின் முதன்மைச் செயலாளராக இருந்த திரு. R. கிர்லோஷ் குமார், IAS, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலாளராக தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை இத்துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்த டாக்டர் R. செல்வராஜ், IAS அவர்களிடம் இருந்து இப்பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி மாற்றம்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:
-
பெரம்பலூர் மாவட்டம்: சமூக நலத்துறை கூடுதல் இயக்குநராக இருந்த திருமதி சரண்யா அரி, IAS, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
அரியலூர் மாவட்டம்: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திருமதி N. மிருணாளினி, IAS, அரியலூர் மாவட்ட ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
சென்னை மாவட்டம்: செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் ஆட்சியரான திருமதி S. மாலதி ஹெலன், IAS, சென்னை மாவட்ட புதிய ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
இராமநாதபுரம் மாவட்டம்: கோவை மாநகராட்சி ஆணையராக இருந்த திரு. M. சிவகுரு பிரபாகரன், IAS, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.
-
திருவள்ளூர் மாவட்டம்: ஆவின் (Aavin) இணை மேலாண் இயக்குநராக இருந்த திருமதி S. கவிதா, IAS, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் முக்கியப் பொறுப்புகள் மாற்றம்
சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மாநகராட்சிகளின் உயர் பொறுப்புகளிலும் முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:
-
சென்னை மாநகராட்சி: மதுரை மாநகராட்சி ஆணையராக இருந்த திருமதி சித்ரா விஜயன், IAS, சென்னை மாநகராட்சியின் வடக்குப் பகுதி பிராந்திய துணை ஆணையராக (Regional Deputy Commissioner - North) நியமிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி மாநகராட்சி: பொதுத்துறை துணைச் செயலாளராக (Protocol) இருந்த திரு. வீர் பிரதாப் சிங், IAS, திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மதுரை மாநகராட்சி: சென்னை குடிநீர் வாரிய (CMWSSB) நிர்வாக இயக்குநராக இருந்த திரு. கௌரவ் குமார், IAS, மதுரை மாநகராட்சி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
கோவை மாநகராட்சி: சென்னை மாநகராட்சி வடக்குப் பகுதி பிராந்திய துணை ஆணையராக இருந்த திரு. கட்டா ரவி தேஜா, IAS, கோவை மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்த அதிரடி ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், நிர்வாக ரீதியாக பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்






















