தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முன் எப்போதும் இல்லாத வகையில் அடுத்தாண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக உருவெடுத்துள்ள விஜய் தனது அரசியல் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகிறார். 

Continues below advertisement

இன்று திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்தில் பேசிய தவெக தலைவர் விஜய் தமிழக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதில் அவரது குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து தமிழக அரசின் சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 

அந்த எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, நாகையில் அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி, காவல்துறை நிபந்தனைகள் குறித்து விஜய் கூறிய தவறான தகவல்கள்!

தவறான தகவல் 1 : 

மண் அரிப்பைத் தடுக்க உருவாக்கப்பட்ட அலையாத்திக் காடுகளைக் காக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

உண்மை :

தமிழ்நாட்டில் சதுப்புநில காடுகள்/ அலையாத்திக் காடுகளின் பரப்பளவு இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.  அரசின் முயற்சியால் கடந்த 2021 ஆம் ஆண்டில் 45 சதுர கிலோமீட்டராக இருந்தவை இன்று 90‌ சதுர கிலோமீட்டராக பெருகியுள்ளது. 

நாகப்பட்டினம் ‌ மாவட்டத்தில் 586 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 521 ஹெக்டேர் நிலப்பரப்பிலும் சதுப்புநில காடுகள் அமைந்துள்ளன. 

தவறான தகவல் 2 : 

கடல்சார் கல்லூரி ஏதும் நாகப்பட்டினத்தில் இல்லை.

உண்மை:

தமிழ்நாடு டாக்டர் ஜெ ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகமும் நாகப்பட்டினத்தில் இயங்கி வருகிறது. 

தவறான தகவல் 3 :

மக்களை சந்திப்பதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அனுமதி இல்லை என்கிறார்கள். பிரதமரோ, உள்துறை அமைச்சரோ தமிழ்நாட்டு வரும்போது நிபந்தனைகளைப் போடுவீர்களா?

உண்மை :

சென்னையில் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி பிரதமரின் பேரணிக்கு காவல்துறை 20 நிபந்தனைகளை விதித்தது.

தவறான தகவல்களைப் பரப்பாதீர்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.