சிந்து சமவெளி கண்டுபிடிப்பின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டி ஜான் மார்ஷலுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு, 20 செப்டம்பர் 1924 அன்று, சர் ஜான் மார்ஷல் இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை மறுவடிவமைக்கும் சிந்து சமவெளி நாகரிகத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தார். நான் நன்றியுடன் திரும்பிப் பார்த்து,, ஜான் மார்ஷலுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 






சிந்து சமவெளி நாகரிகத்தின் பொருள், கலாச்சாரத்தை சரியாக அறிந்து கொண்டு, அதை திராவிட பங்குடன் இணைத்தார்.


இந்த வரலாற்று சிறப்பு மிக்க கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை சர்வதேச மாநாடு நடத்தி, சர் ஜான் மார்ஷலின் உருவ சிலையை தமிழகத்தில் நிறுவப்படும் என்று எனது அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.