Ungalil Oruvan Book Release LIVE: முதல்வரின் உங்களில் ஒருவன் நூல் வெளியீட்டு விழா நேரலை!
MK Stalin Ungalil Oruvan Book Release LIVE Updates: முதல்வரின் ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சி தொடர்பான அப்டேட்டுகளை உடனக்குடன் இங்கு பார்க்கலாம்.
கல்யாணி பாண்டியன்Last Updated: 28 Feb 2022 04:56 PM
Background
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சி தொடர்பான அப்டேட்டுகளை உடனக்குடன் இங்கு பார்க்கலாம். இந்த நிகழ்ச்சி நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றுக்கொண்டிக்கிறது. நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கு: நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சி...More
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன் சுயசரிதை நூலை ராகுல்காந்தி இன்று வெளியிடுகிறார். அந்தநிகழ்ச்சி தொடர்பான அப்டேட்டுகளை உடனக்குடன் இங்கு பார்க்கலாம். இந்த நிகழ்ச்சி நந்தம்பாக்கத்தில் சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றுக்கொண்டிக்கிறது. நிகழ்ச்சி நடக்க இருக்கும் அரங்கு: நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் அரசியல் தலைவர்கள் நிகழ்ச்சி அரங்கின் முன்பகுதி:
என்னுடைய அண்ணன் மு.க.ஸ்டாலினை பாராட்ட விரும்புகிறேன்.
அவரது வாழ்கை நீண்ட நெடிய போராட்டம்.
மு.க.ஸ்டாலின் ஒரு அருமையான புத்தகத்தை எனக்கு தந்திருக்கிறார்.
எனது அம்மா சோனியா காந்தி ஸ்டாலினுக்கு 69 வயது என்பதை நம்பவே இல்லை..
உடனே நான் எனது தாயாரிடம் அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்று கேட்டேன்.. அவருக்கு 59 வயது அல்லது 60 இருக்கும் என்றார். அதன் பின் கூகுள் செய்து அவரது வயதை உறுதிப்படுத்திக்கொண்டார்.
அவர் எப்படி இப்படி இளமையாக இருக்கிறார் என்பதை பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும்.
நாடாளுமன்றத்தில் அண்மையில் நான் தமிழ்நாடு பற்றி பேசியது தமிழ்நாட்டில் பெரிதளவில் கொண்டாடப்பட்டது.
அன்று பேசி முடித்த உடன் தமிழ்நாடு என்ற வார்த்தையை அதிகமாக உபயோகப்படுத்தியது ஏன் என்று பத்திரிகையாளர் ஒருவர் கேட்டார். உடனே நான் தமிழன் அல்லவா என்று சொன்னேன்.
ஏன் அப்படி பேசினேன் என்று என்னை கேட்டுக்கொண்டேன். அதன் பின்னர்தான் தெரிந்தது எனது இரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது என்பது. அப்பாவை இழந்தது எனக்கு சோகமான தருணம்.
தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் வரலாற்றை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை
ஆங்கிலத்தில் பேசிய சத்யராஜ், உதய நிதியிடம் நான் பேசியது கரெக்டா என்று கேட்டார்.
மனிதனாக நாம் இருக்க வேண்டுமென்றால், நமது மனதில் மனிதநேயம் இருக்க வேண்டும். அதற்கு நாம் பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை படித்திருக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசிய சத்யராஜ், உதய நிதியிடம் நான் பேசியது கரெக்டா என்று கேட்டார்.
மனிதனாக நாம் இருக்க வேண்டுமென்றால், நமது மனதில் மனிதநேயம் இருக்க வேண்டும். அதற்கு நாம் பெரியார் மற்றும் கார்ல் மார்க்ஸ் புத்தகங்களை படித்திருக்க வேண்டும்.
திராவிட முறைப்படி ராகுலை தம்பி என்று அழைக்கிறேன்.
பினராயி விஜயன், மு.க.ஸ்டாலின் இடையே யார் சிறந்த முதலமைச்சர் என்று போட்டி நடைபெறுகிறது.