’’மகள் ஓடிப்போக நீதா காரணம்’’ ஆத்திரத்தில் மூக்கை கடித்து துப்பிய மாப்பிள்ளையின் நண்பர்
மாமயிலின் நண்பரான சகாதேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் என் மகள் ஓடிப்போக காரணம் நீதான் என மாப்பிள்ளையின் நண்பனிடம் தகராறு செய்த தந்தை முறைகொண்ட உறவினரை, அந்த நண்பர் மது போதையில் மூக்கை கடித்து துப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம், சின்ன பேராம்பட்டு பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் ராஜா (45). இவருக்கு மகள் உறவு முறையான அனிஷா (21) என்பவர், நாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த மாமயிலன் (23) என்ற வாலிபரை கடந்த மாதம் திருமணம் செய்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணமாக இந்த திருமணம் நடந்துள்ளது.
மாமயிலின் நண்பரான சகாதேவன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் என்பவர் திருமணத்தை நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்இன்று நாகராஜன்பட்டி பகுதியில் உள்ள மதுபான கடைக்கு அரவிந்த், குடிக்க வந்துள்ளார்.
அதேபோல அதே பகுதிக்கு ராஜா என்பவரும் குடிக்க வந்துள்ளார். அப்போது ’’எனது மகள் ஓடிப்போக காரணம் நீதான்’’ என கூறி ராஜா சண்டை போட்டுள்ளார். அப்போது இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மூக்கை கடித்து துப்பிய அரவிந்தன்
ஆத்திரமடைந்த அரவிந்தன் திடீரென ராஜாவின் மூக்கை கடித்து துப்பியுள்ளார். இதனால் ராஜா மூக்கு லேசாக, அறுபட்டு கத்தி கதறினார். பின்னர் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருவரும் அனுமதி
மேலும் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் ராஜா மற்றும் அரவிந்த ஆகிய இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
ட்ரெண்டிங் செய்திகள்























