திருப்பத்தூரில் 100 சிறுமிகள் கர்ப்பம்! 300 இளைஞர்கள் கைது? அதிர்ச்சியில் அதிகாரிகள் - நடந்தது என்ன?
இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ் அப் காதலால் குழந்தை திருமணம்!. நூற்றுக்கணக்கான பருவ வயது பெண் பிள்ளைகள் கர்ப்பம்!. 300 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு!. ஆய்வில் அதிர்ச்சி!.

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் சமூகவலைதளம் மூலம் காதல் ஏற்பட்டு, அதன் மூலம் நடந்த குழந்தை திருமணங்களால் நூற்றுக்கணக்கான பருவ வயது பெண் பிள்ளைகள் கர்ப்பம் ஆகியுள்ளனர். இதுதொடர்பாக 300 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆய்வு மூலம் தெரியவந்த இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் ஆகிய 4 தாலுக்கா முழுவதும் கடந்த 2025ம் ஆண்டில் நூற்றுக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. அதில் காதல் திருமணங்கள் ஏராளமாக நடந்துள்ளதாக அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதில் அதிக அளவில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் சிறு வயதில் ஒருவருக்கொருவர் செல்போனில் பேசுவதால் ஏற்பட்ட காதல் காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் கூட காதல் திருமணம் நடந்துள்ளது.

மாவட்ட நிர்வாகத்தால் பல திருமணங்கள் தடுத்து நிறுத்திய போதிலும் காதல் மற்றும் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளது. இதன் விளைவாக மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் பருவ வயது பெண் பிள்ளைகள் கர்ப்பம் ஆகி பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அப்படி அனுமதிக்கும் பெற்றோர்கள் மற்றும் அவரது கணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது அதிர்ச்சி தகவலாக உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் இனிமேல் குழந்தை திருமணங்கள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுங்கள் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளார்.























