விழுப்புரம்: திண்டிவனம் அருகே பத்தாம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரன் கைது செய்யப்பட்டார்.


காதலிப்பதாக கூறி பாலியல் உறவில் ஈடுபட்ட கொடூரன் கைது


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் ராஜசேகர் (33). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் 15 வயது பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது உள்ளே நுழைந்து பல முறை வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டதால் தற்போது நான்கு மாத கர்ப்பமாக மாணவி உள்ளார்.


வழக்கு பதிவு செய்து விசாரணை


இது குறித்த புகாரின் பேரில் திண்டிவனம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கிருபாலட்சுமி மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசார் விசாரணையில் ராஜசேகர் பள்ளி மாணவியை காதலிப்பதாகவும், உனக்கு தேவையான அனைத்தையும் நான் செய்து தருகிறேன் எனவும் கூறியுள்ளார் மேலும் புதிய ஆடை உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொடுத்து தன்வசப்படுத்தியது தெரியவந்தது. தொடந்து ராஜசேகர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.


POCSO சட்டம் என்றால் என்ன?


2012 இன் POCSO சட்டம் மற்றும் அதைத் தொடர்ந்து வரும் விதிகள் நவம்பர் 14, 2012 முதல் நடைமுறைக்கு வந்தன. இது பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் தவறான நடத்தை மற்றும் ஆபாசப் பொருட்கள் போன்ற சாத்தியமான குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான விரிவான சட்டமியற்றும் சட்டமாகும்.