School Leave: திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளையும், பிப்ரவரி 25 ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.  திருவாரூரில் பெய்த கனமழை காரணமாக கடந்த பிப்ரவரி மாதம், 2 மற்றும் 3 தேதிகள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் நாளையும் அதாவது பிப்ரவரி 18-ஆம் தேதியும் 25-ஆம் தேதியும், பள்ளி செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்து நாளையும் அதாவது பிப்ரவரி 18-ஆம் தேதியும் 25-ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.