திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் வட்டம் கோவிலூர் பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த பாலமுருகன், மதன்மோகன், ஸ்ரீதர், பழனிச்சாமி, நந்தகுமார், ஆகியோர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மூன்று செக்கு கல்வெட்டுகளும் இரண்டு நடுகற்களும் கண்டெடுக்கபட்டன . 


இது குறித்து வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த பாலமுருகனிடம் பேசுகையில்;


திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் அமைந்துள்ள கோவிலூர் கிராமத்தில் உள்ள திருமூலநாதர் சிவன் கோயில் வரலாற்றுச் சிறப்புமிக்க அரிய பல கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலின்  அருகில் அண்மையில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 செக்கு கல்வெட்டுகளும் 3 நடுகற்களும் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. 



இதில் உள்ள 2 செக்கு கல்வெட்டில் 10 ஆம் ஆண்டு எழுத்தமைதியில் கல்வெட்டு அமைந்துள்ளது. இக்கல்வெட்டு “ஸ்ரீ பரதன் கூரிதனநன் மகன் றிக்கு “ என்று வெட்டப்பட்டுள்ளனது. இதன் பொருள் ஸ்ரீபரதன் என்பவர் மகன் இச்செக்கை செய்தளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செக்கில் ஸ்ரீறைபொ மகன்  என்று உள்ளது. இதன் பொருளும் செக்கு செய்து கொடுத்தவர்களின் பெயராக இருக்க வாய்ப்புள்ளது. இது அதிகமான பொறிந்து போய் உள்ளதால் படிக்க இயலவில்லை. அதே போல் இப்பகுதியில் கண்டெடுக்கபட்ட மூன்று நடுகற்கலில் ஒன்று உடைந்தும் மற்றொன்று சாய்ந்தும் உள்ளது. நல்ல நிலையில் உள்ள நடுகல்லில் கல்வெட்டு படிக்க முடியாத அளவிற்கு பொரிந்து போய் உள்ளதால் அவற்றையும் முழுமையாக படிக்க இயலவில்லை. இதன் காலமும் 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டு காலமாக இருக்கலாம் 



இந்த செக்குகள் மூலம் அந்த காலத்தில் எண்ணெய் உற்பத்தி செய்து மக்கள் பயன்பாட்டிற்கும் கோயில் விளக்கு எரிக்கவும் பயன்படுத்தப்பட்டது. இந்த செக்குகள் மூலம் இரண்டு புதிய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. ஏற்க்கனவே கோவிலில் கிடைக்க பெற்ற  கல்வெட்டுகள் மூலம் இக்கோவிலின் காலம் இதுவரை 12 ஆம் நூற்றாண்டு என கணிக்கபட்டிருந்தது. இந்த கோயிலில் சிவனுக்கு விளக்கு ஏற்றவும் மக்களின்  பயன்பாட்டிற்கும் எண்ணெய் உற்பத்தி செய்ய 3 செக்குகள் ஏற்படுத்தப்பட்டன என்றும் அறியலாம்.


இதன் மூலம் கோயிலின் காலம் 2 நூற்றாண்டுகள் முன்னோக்கி செல்கின்றது. இரண்டாவதாக கோவிலூர் சிவன் கோயில் அருகே ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட புலிகுத்திப் பட்டான் நடுகல்லிலும் மங்கல பரதன் மகன் வில்லி என்பவர் இறந்த செய்தி வருகிறது. இந்த பரதன் என்ற பெயர் இந்த செக்கு கல்வெட்டிலும் வருகிறது. எனவே இந்த பகுதியை பரதன் என்ற வம்சா வழியை சேர்ந்தவர்களின் ஆளுகைக்கு கீழ் இப்பகுதி இருந்தது என அறியலாம். இவையும் ஆய்வுக்குரியவைகளாகும்