நடிகர் விவேக்கின்  மறைவுக்கு  இரங்கல் தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அவரின் மறைவு வேதனை அளிப்பதாகவும், அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


நடிகர் விவேக் நேற்று முன்தினம் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நிலையில், மாரடைப்பு காரணமாக நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு எக்மோ கருவி மூலமாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.




இந்நிலையில், இன்று காலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவருக்கு வயது 59. அவரின் உயிரிழப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் விவேக் மறைவுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்தார்.


<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr"><a >#நடிகர்_விவேக்</a> அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. <br><br>அவருடைய மறைவு <br>பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது.<br><br>தடுப்பூசி போட்டதற்குப் பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே <a >#அச்சத்தை</a> ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். <br>அவருக்கு எமது அஞ்சலி. <a >pic.twitter.com/SswDq6L5ix</a></p>&mdash; Thol. Thirumavalavan (@thirumaofficial) <a >April 17, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>


ட்விட்டரில் தொல்.திருமாவளவன் பதிவிட்ட இரங்கல் செய்தியில், ”நடிகர் விவேக் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவருடைய மறைவு பல கேள்விகளுக்கு இடமளிப்பதாக அமைந்துவிட்டது. தடுப்பூசி போட்டதற்கு பின்னர்தான் அவர் சுயநினைவை இழந்தார் என்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும். அவருக்கு எமது அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.