மேலும் அறிய

கரூர் : 5-வது நாளாக தொடர்கிறது தடுப்பூசி தட்டுப்பாடு : தொற்றால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு..!

கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 13 நபர்கள் இறந்துள்ளனர்.  இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்

உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று  வைரஸ் பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக குறைந்து வருகிறது. அதேபோல் தமிழகத்தில் தமிழக அரசு கடந்த மாதத்தில் முழு ஊரடங்கு உத்தரவுகள் அறிவித்து, கடந்த 7-ஆம் தேதியில் கரூர் உட்பட 11 மாவட்டத்திற்கு சில தளர்வுகள் மட்டுமே அறிவித்து மீண்டும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததுள்ளது.

இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மருத்துவ ஆலோசனை நடத்தியதில், இன்னும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு நீடிக்க வேண்டும் எனவும், கரூர் உட்பட 11 மாவட்டத்திற்கு உள்ள சில தலைவர்களை நீக்கிவிட்டு ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஒரு வார காலத்திற்கு முழு ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில், நாள்தோறும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் மற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தோர் மற்றும் சிகிச்சைக்குப்பின் வீடு திரும்புவோர் எண்ணிக்கை மாநில சுகாதாரத் துறையின் சார்பாக நாள் தோறும் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று மாநில சுகாதாரத்துறை அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 172-ஆக உள்ளது. அதேபோல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 199-ஆக உள்ளது. எனவும், கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 13 நபர்கள் சிகிச்சை பலனின்றி இறந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கரூர் : 5-வது நாளாக தொடர்கிறது தடுப்பூசி தட்டுப்பாடு : தொற்றால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு..!

மாவட்டத்தில் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவரும் நிலையில்,  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறப்பு விகிதமும், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக தடுப்பூசி முகாமில் தடுப்பூசி கிடைக்காத நிலையில் பொதுமக்களை 5-வது நாளாக நாளையும் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாமை நடத்திக் கொண்டுள்ளனர்.

காய்ச்சல் முகாம் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறுகிறது. இந்த காய்ச்சல் முகாமில் நோய்த்தொற்று அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகுமாறு, மருத்துவர்கள் பொதுமக்களை அறிவுறுத்துவார்கள். அதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை இணைந்து செயலாற்றி வருகிறது. 
கரூர் : 5-வது நாளாக தொடர்கிறது தடுப்பூசி தட்டுப்பாடு : தொற்றால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு..!

எனினும், கரூர் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-இல் இருந்து, தற்போது அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்துவரும் நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரூர்வாசிகள் அச்சத்தில் உள்ளனர். அதேபோல் தொற்று பரவாமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மாவட்ட போலீசார் அதிரடி வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நாள்தோறும் வாகன சோதனை மற்றும் வணிக நிறுவனங்கள் ஊரடங்கு காலத்தில் திறந்து இருந்தால் அவற்றை கண்காணிக்கும் உள்ளிட்ட பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி மற்றும் போலீசார் இணைந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். மாவட்ட மக்கள் இன்னும் பல்வேறு இடங்களில் ஊரடங்கு விதிகளை மீறி வருவதாகவும், அவர்கள் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்யப்படுவதாகவும், போலீசார் தெரிவித்து வருகின்றனர்.கரூர் : 5-வது நாளாக தொடர்கிறது தடுப்பூசி தட்டுப்பாடு : தொற்றால் இன்று மட்டும் 13 பேர் உயிரிழப்பு..!

ஆகவே மாவட்ட மக்கள் மிகவும் எச்சரிக்கையாக முகக்கவசம், சமூக இடைவெளி, கைகழுவும் பழக்கத்தை இடைவிடாது செய்து வர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Annamalai Nomination Issue : வேட்புமனு சர்ச்சை” இது ஒரு விஷயமே இல்ல” அ.மலையின் புது TWIST | BJPSingai Ramachandran :”அ.மலை மிரட்டி பணம் வசூலித்துள்ளார்” சிங்கை ராமச்சந்திரன் பகீர் | AnnamalaiJothimani Issue -'’5 வருசமா எங்க போனீங்க?’’ ஜோதிமணியை சுத்துப்போட்ட பெண்கள்Sowmiya anbumani - ஹிந்தியில் வாக்கு கேட்ட செளமியா அன்புமணி வைரலாகும் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
பெங்களூரு குண்டுவெடிப்பு! வெளியான குற்றவாளிகளின் புகைப்படங்கள் - தகவல் தருபவர்களுக்கு வெகுமதி அறிவிப்பு!
Lok Sabha Elections 2024: விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
விரலை வெட்டினாலும் மக்கள் இரட்டை இலைக்குத்தான் ஓட்டு போடுவார்கள் - ஆர்.பி. உதயகுமார் உறுதி
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
வரி பயங்கரவாதம்.. ஜனநாயகத்தின் மீது அப்பட்டமான தாக்குதல்.. நாடு தழுவிய போராட்டத்தை அறிவித்த காங்கிரஸ்!
Sunita Kejriwal: டெல்லி முதலமைச்சராகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
டெல்லி முதலமைச்சர் ஆகிறாரா சுனிதா கெஜ்ரிவால்? கவனம் ஈர்க்கும் முன்னாள் ஐ.ஆர்.எஸ். அதிகாரி - யார் இவர்?
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai Deepam: கார்த்தி மீது எழும் சந்தேகம்.. அபிராமியை தீர்த்துக்கட்ட தயாராகும் ஐஸ்வர்யா.. கார்த்திகை தீபம் அப்டேட்!
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
Hot Spot Review: நாலு கதை.. ஒவ்வொன்றும் தனி ரகம்.. ரசிகர்களை திருப்திப்படுத்தியதா ஹாட் ஸ்பாட்? முழு விமர்சனம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
கடன் பிரச்னையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை - தேனியில் சோகம்
Kanimozhi MP:
Kanimozhi MP: "தி.மு.க.விற்குத்தான் வெற்றி! கோவையில் இரண்டாவது இடத்திற்கு தான் போட்டி" - கனிமொழி எம்.பி. நம்பிக்கை
Embed widget