Thevar Jayanthi LIVE: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மதிமுக சார்பில் மரியாதை
Thevar Jayanthi Guru Poojai LIVE: குரு பூஜை விழாவில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ABP NADU Last Updated: 30 Oct 2021 11:41 AM
Background
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.இதையொட்டி, அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த பசும்பொன் விரைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக , இன்றைய குரு பூஜை விழாவில் பொது...More
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது.இதையொட்டி, அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்த பசும்பொன் விரைகின்றனர். ராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக , இன்றைய குரு பூஜை விழாவில் பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.மேலும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள்/பேனர்கள் வைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவித்தள்ளது. தேவரின் ஆன்மீக வாழ்க்கையை, அரசியல் வாழ்க்கையை வெளிப்படுத்தும் வகையி்ல் அக்டோபர் 28ஆம் தேதி ஆன்மீக விழாவும், 29ஆம் தேதி அரசியல் விழாவும், 30ஆம் தேதி குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழாவும் தேவர் நினைவாலயத்தில் கொண்டாடாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவும், 59 ஆவது குரு பூஜையும் வருகின்ற அக்டோபர் 30 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.முன்னதாக, நேற்று சசிகலா பசும்பொன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் ஜி.கே வாசன் மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் G.K.வாசன் அஞ்சலி செலுத்தினார், இதனை தொடர்ந்து பேட்டியளித்த அவர்,,, முல்லைப்பெரியாறு அணை லட்சக்கணக்கான மக்களின் உயிர் நாடியாகவும் வாழ்வாதாரமாகவும் உள்ளது முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிமைகளை முறைப்படுத்தி கொள்ள வேண்டும். தமிழக கேரளா உறவை பலப்படுத்தும் வகையில் கேரளா அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறினார்.