விலகியது வடகிழக்கு பருவமழை! தமிழகத்தில் மழை இருக்கா இல்லையா? வானிலை என்ன சொல்லுது?

தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்த வடகிழக்கு பருவமழை விலகிவிட்டது. கடந்த 2 நாட்களாக தென்னிந்தியாவில் மழை ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவியது.

Continues below advertisement

வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2 வரை வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது. கடந்த ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்த வடகிழக்கு பருவமழை விலகிவிட்டது. கடந்த 2 நாட்களாக தென்னிந்தியாவில் மழை ஏதுமின்றி வறண்ட வானிலை நிலவியது.

மேலும் 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு உள்ளது வானிலை மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஜனவரி 30, 31 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நீலகிரி, கோவை, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பிப்ரவரி 1ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு எனத் தெரிவித்துள்ளது. சென்னையில் 2 நாட்கள் அதிகாலையில் நகரின் ஒரு சில இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளிலிருந்து இன்று (27-01-2025) விலகியது.

27-01-2025 மற்றும் 28-01-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

29-01-2023: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

30:01-25 தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிகு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

31-01-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01-02-2025: தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும்.

புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான ன மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

02-02-2025: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (27-01-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 10-11- செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21.22 செய்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை 28-01-2025 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 20-31° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 21-20° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை!

தமிழ்க கூடலோரப்பக்கிகள் & அரபிக்கடல் பகுதிகள்

27-01-2025 முதல் 31-01-2025 வரை எச்சரிக்கை எதுமில்லை.

வங்கக்கடல் பகுதிகள்:

27-01-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

28-01-2025; தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

29-01-2025 மற்றும் 31-01-2025 எச்சரிக்கை ஏதுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement