TASMAC SHOP: மதுப்பிரியர்களுக்கு குஷி.! இனி டோட்டலா மாறப்போகுது- முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டாஸ்மாக்
TASMAC SHOP liquor : டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டிலுக்கு 10 முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருவதாக தொடரும் புகாரையடுத்து கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

டாஸ்மாக் மதுபாட்டில் -கூடுதல் பணம் வசூல்
தமிழகத்தில் 4ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள் உள்ளது. இந்த கடைகளில் மூலம் தினந்தோறும் 100 முதல் 150 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைத்து வருகிறது. அதிலும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகை காலங்களில் ஒரே நாளில் 200 முதல் 300 கோடி வரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டு வருவதாக புகார் கூறப்பட்டு வருகிறது.
அந்த வகையில் குவாட்டர் மற்றும் பீர் பாட்டிலுக்கு 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படவதாக மதுப்பிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூடுதல் பணத்தை வசூல் செய்து வந்தனர்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை
இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்களை எச்சரிக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலை வைத்து விற்பனை செய்வததாக புகார்கள் தலைமை அலுவலகத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பணியாளர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, கூடுதல் விலைவைத்து விற்பனை செய்யப்படுகின்ற அனைத்து கடைப்பணியாளர்கள் மீது மிக கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இதை தடுக்க தவறும் மாவட்ட மேலாளர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரிக்கப்படுகிறது.
டாஸ்மாக் கடைகளில் பறக்கும் படை சோதனை
அதன் அடிப்படையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கும் நேர்வுகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த அறிவுரைகளை அனைத்து முதுநிலை மண்டல மேலாளர்களும், மாவட்ட மேலாளர்களும், சிறப்பு பறக்கும் படை அலுவலர்களும் தவறாது கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனைத்து மண்டலத்திலுள்ள (Flying Squad Deputy Collectors) பறக்கும் படை துணை ஆட்சியர்கள் தத்தம் மண்டலத்தில் தெரிய வரும் புகார்கள் குறித்தான மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை ஆய்வு செய்து, தவறு செய்யும் கடைப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Before You Go
BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
ட்ரெண்டிங் செய்திகள்





















