கோடிகளை கொட்டும் மதுவிற்பனை

தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக்(TASMAC) கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் மூலம் தினமும் 100 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தவெக அரசு தமிழகம் முழுவதும் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் உள்ள 700க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. அடுத்ததாக டாஸ்மாக் கடைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் நிறுவனம் புதிய திட்டத்தை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் ரெஸ்டோ-பாரை விரிவுப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

Resto - Bar என்றால் என்ன.?

Resto - Bar என்பது சுவையான உணவுகளுடன், பாதுகாப்பான சூழலில் மதுபானங்களை அருந்தும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Resto - Bar சாதாரண பார்களை விட, இந்த இடங்களில் குடும்பத்தினருடன் சாப்பிடவும், நண்பர்களுடன் பேசவும் வசதியான இருக்கைகள் சொகுசாக அமைக்கப்பட்டிருக்கும். தமிழகத்தில் பல இடங்களில் இந்த Resto - Bar தனியார் நிறுவனங்கள் நடத்தி வருகிறது. அந்த வகையில் உணவகத்துடன் கூடிய மதுபான கூடத்திற்கு (Resto - Bar) அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் நிறுவனத்தின் Resto - Bar

ஏற்கனவே கர்நாடகா, ஆந்திரா, கேரள உள்ளிட்ட அண்டை மாநிலங்களில்  உள்ளதை போன்று ரெஸ்டாரன்ட் வித் பார் Resto - Bar என சொல்லப்படும் உணவகத்துடன் கூடிய மதுபான கூடத்திற்கு தமிழ்நாட்டிலும் அனுமதி வழங்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளுடன் இயங்கி வரும் பார்களின் எண்ணிக்கையை குறைத்து ரெஸ்டோ பார் அனுமதி வழங்க திட்டம் என தகவல் கூறப்படுகிறது. FL2,FL3 மனமகிழ் மன்றங்களுக்கு மதிப்பு கூட்டு வரி இல்லாததால், மதிப்பு கூட்டு வரியுடன் கூடிய ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கி அரசின் வருவாய் கூட்ட டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

Continues below advertisement