Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஜூலை 02 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. இதில் சில மாவட்டங்களில் 2 மணி, 4 மணி வரை மின் தடை ஏற்படும்.

 

Continues below advertisement

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:

சென்னை ( 9 To 2)

திருவேற்காடு: புளியம்பேடு சாலை, நூம்பல் சாலை, அசோக் நந்தவனம், மூகாம்பிகை நகர், ஜட்ஜஸ் காலனி, ராஜாஸ் கார்டன், சூசை நகர், தேவி நகர், பாலாஜி நகர்.

பள்ளிக்கரணை: மயிலை பாலாஜி நகர், தந்தை பெரியார் நகர், வேளச்சேரி பிரதான சாலை, கைவேலி முதல் காமாட்சி மருத்துவமனை வரை.

கோவை ( 9 To 5)

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர்.

மதுரை ( 9 To 4)

மதுரை அனுப்பானடி, மேலஅனுப்பானடி, ஹவுசிங் போர்டு, கண்ணன் காலனி, அழகாபுரி, ராஜமான் நகர், ராஜிவ் காந்தி நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, ஆவின் பால் பண்ணை, ஐராவதநல் லுார், பாபு நகர், கணேஷ் நகர், ராஜா நகர், சாரா நகர், வேலவன் தெரு, கிருபானந்தவாரியார் நகர், சுந்தரராஜபுரம், கல்லம்பல், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், தாய் நகர், கங்கா நகர், தெப்பக்குளம், அடைக்கலம் பிள்ளை காலனி, புது ராமநாதபுரம் ரோடு, தமிழன் தெரு, பங்கஜம் காலனி, அனுப்பானடி - தெப்பம்ரோடு, காமரா ஜர் ரோடு, தங்கம் நகர், வடிவேல் நகர், மைனர் ஜெயில், அழகர் நகர், குருவிக்காரன் சாலை, ஏ.பி. டி., சந்து, மீனாட்சி நகர், புது மீனாட்சி நகர்,சி.எம். ஆர்., ரோடு, கொண்டித்தொழு, சீனிவாச பெருமாள் கோயில் தெரு, சின்னக் கண்மாய், பாலரெங்கா புரம், சண்முகா நகர், நவரத்தினபுரம், பிஸர் ரோடு, இந்திராநகர், பழைய குயவர்பாளையம் ரோடு, லட்சுமிபுரம், கான்பாளையம், மைனா தெப்பம், கிருஷ்ணாபுரம், என்.எம்.ஆர்., புரம், ஏ.ஏ.ரோடு, பி.பி.ரோடு, டி.டி.ரோடு, மீனாட்சி அவென்யூ.

மேட்டூர் ( 9 To 5)

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுண்டனூர், வெப்படை, சௌதபுரம், பாதரை, அம்மன்கோயில், மகிரிபாளையம்.

கரூர் ( 9 To 5)

சிட்கோ, சாண்ப்பிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், போரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.