Tamilnadu Shutdown: தமிழ்நாட்டில் நாளை மின்தடை (26.04.2025 ): மின்வாரியம் அறிவிப்பு!
Tamilnadu Power Shutdown April 26,2025: தமிழ்நாட்டில் நாளை மின் பராமரிப்பு பணி காரணமாக பல பகுதிகளில் மின்தடையானது செய்யப்படுவதாக மின்சார வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tamilnadu Power Shutdown: தமிழ்நாட்டில் , ஏப்ரல் 26ஆம் தேதி , எந்தெந்த இடங்களில் மின்தடை செய்யப்படும் என்பது குறித்து பார்ப்போம். மின்சாரம் வழங்குவதில், எவ்வித தடையும் இருக்கக் கூடாது என , அவ்வப்போது சில இடங்களில் மின்பராமரிப்பு பணிகளை, மின்வாரியம் மேற்கொள்வது வழக்கம். இதனால், எதிர்காலத்தில் மின்கசிவு உள்ளிட்ட மிகப்பெரிய பிரச்னைகள், ஏற்படாதவாறு முன்னரே சரி செய்யப்படும்.
தமிழ்நாட்டில் நாளை மின்தடை: 26-04-2025
இந்நிலையில், பல்வேறு இடங்களில் மின்பராமரிப்பு பணி காரணமாக பல்வேறு இடங்களில் மின் தடையானது செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் நாளை பல்வேறு இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையிலான கால அளவில் மின்சாரமானது சில பகுதிகளில் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் இடங்கள்: ஏப்ரல்.26 ( சனி)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கவுந்தபாடி , கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின் பராமரிப்பு பணிகள்:
தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி மேற்கொள்வதற்காக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளன.
மின் தடை வழங்கப்படும் நாளில், பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில், சென்னையில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 5 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், பொதுமக்கள், தங்களது முக்கிய பணிகளை இன்றே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுங்கள். மேலும் கோடைகாலம் என்பதால் அதற்கு ஏற்ப முன்னேற்பாடுகளை செய்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.





















