Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 01 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படவுள்ளது. சில மாவட்டங்களில் மதியம் வரை நிறுத்தப்படும்.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:
கோவை மாவட்டம்
வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் சாலை.
உடுமலைப்பேட்டை
பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், ஊஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பாறைபாளையம், நல்லூர்.
தருமபுரி மாவட்டம்
அக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, தேவரசம்பட்டி, வீட்டு வசதி வாரியம், எரப்பட்டி.
பெரம்பலூர் மாவட்டம்
உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, ஜெயங்கொண்டான்.
தஞ்சாவூர் மாவட்டம்
பாபநாசம், கபிஸ்தலம், திருப்பரம்பியம், சுவாமிமலை, திருப்பணதல், சோழபுரம்.
கரூர் மாவட்டம்
தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.
திருச்சி மாவட்டம்
போலீஸ் காலனி,அண்ணா நகர், கும்பக்குடி, வெங்கூர், செல்வபுரம், குண்டூர், ஐயம்பட்டி, ஆர்எஸ்கே நகர், சோலமாதேவி, காந்தளூர், சூரியூர், பாரதிபுரம், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா நகர், வள்ளுவர் நகர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், பரமசிவபுரம், ஏ கே நகர், இடையாற்றுமங்கலம், டிவி நகர், ஆண்டிமேடு, திருமணமேடு, மூமூடிச்சலமங்கலம், தண்ணீர்பந்தல், சாத்தமங்கலம், வரதராஜன் நகர்.
மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை
மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.
பாதுகாப்பாக சமாளிக்க முடியும்
மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.
