Tamil Nadu Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை (ஆகஸ்ட் 20 ஆம் தேதி) எந்தெந்த மாவட்டங்களில் மின் தடை ஏற்படும் பகுதிகள் குறித்த அறிவிப்பை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் நாளை காலை 9 மணி முதல் பல்வேறு மாவட்டங்களில் மின் தடை செய்யப்படவுள்ளது.

 

Continues below advertisement

மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம்

சீரநாயக்கன்பாளையம், பி.என்.புதூர், வடவள்ளி, வேடபட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாயிபாபா காலனி, சுண்டப்பாளையம், செல்வபுரம், அண்ணா நகர் ஹவுசிங் யூனிட், காந்தி நகர், எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பியகவுண்டன்புதூர், ஆலங்கடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பெரியபோது, தீவன்சாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தாபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துப்பொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமபட்டினம், தேவம்பாடி, வள்ளையாகவுண்டனூர், போடிபாளையம், சக்தி கார்டன், கோல்டன் சிட்டி, காந்தி நகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவன் நகர், ஜே.ஜே.காலனி, வெங்கடேசா காலனி.

பல்லடம்

மேட்டுப்பாளையம், டி.என்.பட்டி, வெள்ளக்கோவில், பாப்பினி, அழகேந்திரா சோலார், சிவஜோதி சோலார் பகுதிகள், வேலம்பாளையம், ஆறுமுத்தம்பாளையம், வளையம்பாளையம், அறிவொளி நகர், சேகம்பாளையம், மாணிக்காபுரம், சி.எம்.பி பகுதி, குண்டடம், கள்ளிவலசு I & II, கூத்தம்பூண்டி, மூலனூர், சார்மங்களம், தாராபுரம் நகரம், குடிநீர் வாரியப் பகுதி, டி.வி.பட்டினம், உஷ்தேவ், எஸ்.கே.பாளையம்.

தருமபுரி மாவட்டம்

மொரப்பூர், நாயக்கன்கவுண்டம்பட்டி, சென்னம்பட்டி, எலவடை, தம்பிசெட்டிப்பட்டி, கிட்டனூர், நச்சினாம்பட்டி, மாருதிப்பட்டி புதூர், கல்லாடைப்பட்டி, அப்பியம்பட்டி, பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நாகரை, நெருப்பூர், நாகதாசம்பட்டி, தாசம்பட்டி, பிக்கிலி, காடுமடை, ஆலமரத்துப்பட்டி, வத்தல்புரம், திட்டச்சேரி, மரைக்கான்சாவடி, வாழ்மங்கலம், பனங்குடி, கொட்டாட்டகுடி, பூதங்குடி, நரிமணம், திருமருகல், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர் மற்றும் குடிநீர் திட்டப் பகுதிகள்.

வேலூர் மாவட்டம்

காந்தி நகர், சேனூர், செங்குட்டை, கல்புதூர், இ.பி காலனி, விருதம்பட்டு, தாராபடவேடு, காங்கேயநல்லூர், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ண நகர், சிட்கோ தொழிற்பேட்டை, வைபவ் நகர், வெள்ளக்கல்மேடு, வி.ஜி.ராவ் நகர், எம்.ஆர்.எஃப் நிறுவனம், தணிகைப்போளூர், வடமாம்பாக்கம், நெல்லிக்குப்பம், லாலாபேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி, கே.வேலூர், பாரிகல்பட்டு, மேச்சேரி, கரிகாந்தாங்கல், நேதாப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், மழைவூர், குட்டியம், அல்லாலச்சேரி, காவனூர், புங்கனூர், குப்பம், பாலமதி, வெங்கடாபுரம், வரகூர்புதூர், தாமரைப்பாக்கம், வாழத்தூர், வணக்கம்பாடி, வளவனூர், மாங்காடு, சக்கரமல்லூர், விளாப்பாக்கம், சாத்தூர், திமிரி, பொன்னைபுதூர், கீரைசாத்து, எஸ்.என்.பாளையம், அத்திங்காவூர், பரமசாத்து, தேங்கால், ராமாபுரம், குமணந்தாங்கல், பெருமாள்குப்பம், வசூர், மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பிலை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், கொட்டநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்

நல்லாத்தூர், புதுக்கடை, கீழ்குமாரமங்கலம், தூக்கணாம்பாக்கம், செல்லஞ்சேரி, கீழ்காவரப்பட்டு, மேல்குமாரமங்கலம், கொங்கராயனூர், பாகண்டை, சித்தரசூர், முத்துகிருஷ்ணாபுரம், ஆராய்ச்சிக்குப்பம், சிலம்பினாதன்பேட்டை, அருங்குணம், மேல்பட்டாம்பாக்கம், நத்தப்பட்டு, குட்டியங்குப்பம், வரக்கால்பட்டு, எஸ்.புதூர், திருப்பாதிரிப்புலியூர், கிருஷ்ணாபுரம், வெள்ளக்கரை, ஒதியடிக்குப்பம், கொடுக்கன்பாளையம், மாவடிபாளையம், மேற்கு ராமாபுரம்.

அரியலூர் மாவட்டம்

ஆதனக்குறிச்சி, மாத்தூர், துளார் சுரங்கப் பகுதி (Thular Mines), சில்லுப்பனூர், காரை, இறையூர், ஆவின் பகுதி, திருவிளக்குறிச்சி, தேரணி. 

தஞ்சாவூர் மாவட்டம்

ஆடுதுறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், தஞ்சாவூர் நகரம், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி பகுதி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி, வீரக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

தேனி மாவட்டம்

லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அன்னாஜி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள். விருதுநகர் மாவட்டம்:  நடையனேரி, அம்மாபட்டி, ஏ.கரிசல்குளம், கீழக்கோட்டையூர், சுரைக்காய்ப்பட்டி, கானாவிளக்கு, தும்முச்சம்பட்டி, தொப்பலாக்கரை, ராஜகோபாலபுரம், ஆலடிபட்டி, மீனாட்சிபுரம், மண்டபசாலை, காடலாம்பட்டி, வீரசோழன், மீனாகுளம், மேலப்பருத்தியூர், ஒட்டங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை

மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.

பாதுகாப்பாக சமாளிக்க முடியும்

மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.