மேலும் அறிய
Tamilnadu Round Up: எம்.பி., தேர்தல், வெள்ள அபாய எச்சரிக்கை, மதுரையில் சாலை மறியல் - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: தமிழ்நாட்டில் காலை முதல் 10 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

10 மணி தலைப்புச் செய்திகள்
Source : social media/x
- தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (ஜூன்.1) தொடங்குகிறது.
- சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பாரில் மது அருந்திவிட்டு நடனம் ஆடும் போது ஏற்பட்ட தகராறில், இலங்கையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் கார் ஏற்றிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பாலகுரு என்பவர் கைது
- அஜித்குமார் தாய் மோகினியின் உடல் பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது
- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி போக்குவரத்து பணிமனையில், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கான ஏசி வசதியுடன் கூடிய ஓய்வறை திறப்பு முன்னாள் அமைச்சர் ரகுபதியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது
- சிவகங்கையில் 13ம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய வகை ‘ஆசிரியம் கல்வெட்டு’ கண்டெடுப்பு!
- திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமி முடித்து, தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் பக்தர்கள் கடும் அவதி
- தென்பெண்ணை கரையோர மக்களுக்கு எச்சரிக்கை - கிருஷ்ணகிரி மாவட்டம் கே.ஆர்.பி. அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக அணைக்கு நீர் வரத்து 527 கன அடியாக உயர்ந்துள்ளது
- ”கொளத்தூர் தொகுதி முடிவுகளை முன்பே கணித்தோம்.. எங்கள் மகளிரணி வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் போதே தி.மு.கவுக்கு மக்கள் ஓட்டு போடுவாங்களான்னு சந்தேகமா இருக்குன்னு சொன்னாங்க..” காதர் மொய்தீன் பரபரப்பு தகவல்
- சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்ல 10 மணி நேரத்திற்கும் மேலாகப் பேருந்துகள் வரவில்லை எனவும், கூட்டத்தை பயன்படுத்தி சில பேருந்துகள் கூடுதலாக ரூ.200 வரை வசூலிப்பதாகவும் என பயணிகள் குற்றச்சாட்டு
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பேருந்துகள் கிடைக்காததால் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்ட பயணிகள்
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















