மேலும் அறிய
TN Roundup: சசிகலாவை விமர்சித்த டிடிவி தினகரன்.. தங்கம் விலை உயர்வு.. தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகள்!
Tamilnadu Headlines: தமிழ்நாட்டில் காலை முதல் தற்போது வரை நடந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு செய்திகள்
Source : ABPLIVE AI
- உடல்நிலைக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என அக்கட்சி தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
- சசிகலா கட்சி தொடங்கிய நிலையில் உண்மையான தொண்டர்கள் அனைவரும் அதிமுக மற்றும் அமமுகவில் தான் இருக்கிறார்கள் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
- சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 1,19,440க்கு விற்பனையாகிறது. அதேசமயம் ஒரு கிராம் ரூ.40 உயர்ந்து ரூ.14,930க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது.
- போற போக்கை பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார். அதிமுகவில் உள்ள கூட்டணிகள் பாஜகவுடன் தொகுதி பங்கீடு செய்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
- சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக இன்று புதுச்சேரி, நாளை தமிழ்நாட்டில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1,785 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். நாகர்கோவிலில் 25,000 பேருக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்.
- எழும்பூர் ரயில் நிலைய சீரமைப்புப் பணி குறித்து மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு முறையான அறிவிப்பை தெற்கு ரயில்வே வழங்கவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
- சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டப் பணிகளில் போரூர் முதல் வடபழனி வரையிலான வழித்தடத்தில் இறுதிகட்ட சோதனை இன்று நடைபெறுகிறது. பாதுகாப்புச் சான்றிதழ் கிடைத்தவுடன் பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் சேவை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
- சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவினர் அடித்து ஆட வேண்டும். முதல் அடி நமது அடியாக இருக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். நமது அரசின் சாதனை திட்டங்களை வீடுதோறும் கொண்டு சென்று கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளையும் வெல்ல வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
- அம்பேத்கர் விரும்பிய சம நல்லிணக்கத்தை தமிழகத்தில் காண வேண்டுமென்றால் வரும் சட்டமன்ற தேர்தலில் பாசிச சக்திகளை நாம் வீழ்த்தி அவர்களை அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















