சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்காக உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 26 May 2021 07:02 AM

Background

தமிழகத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுப்பதற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல் இருந்த நிலையில், நேற்று முதல் தளர்வுகளே இல்லாத ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த...More

சென்னையில் குழந்தைகள் பராமரிப்பிற்கான உதவி எண்கள் அறிவிப்பு

தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனாவால் பெற்றோர்கள் இருவரும் பாதிக்கப்படுவதால், அவர்களின் குழந்தைகளின் பராமரிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுபோன்று கொரோனா பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்காக பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1098, 99442 90306, 044 2595 2450 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.