Just In





Tamil Nadu Covid-19 data tracker: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 610 பேருக்கு கொரோனா தொற்று; 4 பேர் உயிரிழப்பு!
கொரோனாவால் மேலும் 4 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36,680-ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று 1,01,616 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 610 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 129 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 682 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
அதிகம் பாதிப்புள்ள முதல் 5 மாவட்டங்கள்
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்