தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இன்றைய கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூட்டுறவு சங்க சட்டத்திருத்த மசோதாவை  பேரவையில் தாக்கல் செய்தார். பின்னர், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது, அவர் கூறியதாவது, “ தி.மு.க.வின் பொற்கால ஆட்சியில் சட்டமன்றத்தில் நகைக்கடனில் என்னென்ன முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளேன். ஒரு சில நபர்கள் பல கோடிகள் கடனாக பெற்றுள்ளதை ஆதாரமாக சட்டசபையில் எடுத்து வைத்திருக்கிறேன். ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை வைத்து கடன் வாங்கியுள்ளனர். உத்திரமேரூரில் போலி நகைகளை வைத்து கடன் பெறப்பட்டுள்ளது.




திருவண்ணாமலையில் ரத்தன்லால் என்பவர் பல கோடி ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். அவர்களுக்கு எல்லாம் எப்படி கடன் தள்ளுபடி கொடுக்க முடியும்? என்று தெளிவாக கூறியுள்ளேன். பல இடங்களில் போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவருக்கு மிகத் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


கூட்டுறவு சங்கங்களின் சட்டங்கள் மாநில அரசிற்கு உட்பட்டது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முறையாக ஆவணங்களை தாக்கல் செய்த பயனாளிகளுக்கு மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டும்.” இவ்வாறு அவர் பேசினார்.


அதிமுக அமைச்சரவையில் முதல்வர் மட்டுமே 110 விதியின் கீழ் வெளியிட்டு வந்த அறிவிப்புகளை மீண்டும் பழைய ஜனநாயக முறைப்படியே துறைசார்ந்த அறிவிப்புகளை 110 விதியின் கீழ் அந்தந்த அமைச்சரே அறிவித்துக்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதித்ததின் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு 110 விதியின் கீழ் துறை சார்ந்த அறிவிப்பை கூடுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று சட்டசபையில் அறிவித்தார்.




முன்னதாக, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு கீழே நகை வைத்துள்ள விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படுவாக அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்காக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டபோது மாநிலம் முழுவதும் பல கூட்டுறவு வங்கிகளில் முறைகேடு நடைபெற்று இருப்பதும், பல வங்கிகளில்  போலி நகைகள் வைக்கப்பட்டிருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான நபர்களுக்கு மட்டும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண